து.பொ.செ., ஆனார் மாதவன்! உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கண்டிப்பு!

“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக க.மாதவன் நியமனம். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு. சில நியூஸ் மட்டும்தான் ‘சும்மா’ படிக்கும்போதே இப்படி சிரிப்பு மூட்டும்!”

deepa madhavan - 2026

தீபா – இவருக்கு இருக்கும் ஒரே தகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதுதான்! அதுவும் கூட, ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டார், குடும்ப பாரம்பரிய பழக்கவழக்கங்களை மறந்து, கிறிஸ்துவ பின்னணியில் சென்றார் என்பதெல்லாம் ஜெயலலிதா அவரை வெறுப்பதற்கு காரணிகளாயின.

ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட திடீர் வெற்றிடம், தீபாவை பெரிய ஆள் ஆக்கியது. அப்போது, சசிகலா குடும்பத்தினர் அதிமுக.,வை கபளீகரம் செய்ய அனைத்து வழிகளிலும் முயன்றபோது, சசிகலா குடும்பத்தினரை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள விரும்பாத அதிமுக.,வினர், ஜெயலலிதாவின் முக சாயலில் தெரிந்த ஜெ.தீபாவை அவரது வாரிசு போல் நினைக்கத் தொடங்கினர்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

அதனால், அதிமுக.,வைச் சேர்ந்த தலைவர்கள் சிலரே கூட தீபாவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினர்.

ஆனால்,. தீபாவின் தோற்றம், பின்னணி, செயல்பாடுகள், கணவருடனான பிரச்னை, இயக்கத்துக்கு அவர் வைத்த பெயர், டிரைவருடன் தகராறு, சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட முட்டல் மோதல்கள், போயஸ் தோட்ட வீட்டு விவகாரத்தில் தீபா நடந்து கொண்ட விதம் என பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் ஜெ.தீபாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்சம் மவுசையும் இழக்க வைத்தது.

deepa madhavan1 - 2026

இதனால், தீபா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் சிரிக்கவும், நகைக்கவும் தொடங்கி விட்டனர். இந்நிலையில், ஜெ.தீபா, தற்போது பொங்கல் சிரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது கணவர் மாதவனை எம்.ஜி.ஆர்., ஜெ.தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக நியமிப்பதாகவும், அனைத்து மாநில நிர்வாகிகளும் கழக உறுப்பினர்களும் மாதவனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் தீபா கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளுக்குக் கூட, நிர்வாகிகள் இல்லாமல், சிலவற்றுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க திணறி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குறிப்பாக, இன்றைய சமூக வலைத்தள நகைச்சுவையாளர் ஆகி விட்டார் ஜெ.தீபா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 07 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

FIFA 2026: ரவுண்ட் 16ல் முதல் நாலு ஆட்டங்கள்!

          இதுவரை நடந்த ஆட்டங்களில் அர்ஜெண்டைனா அணியின் லியனல் மெஸ்ஸி, ஃபிரான்சு அணியின் கிலியன் மபாபே, நார்வே அணியின் எர்லிங் ஹாலந்து ஆகியோர் 7 கோல்கள் அடித்துள்ளனர். எகிப்து அணியின் மொகம்மது ஹனி ஆஸ்திரேலியா மற்றும் பெல்ஜியம் அணிக்கு எதிராக இரண்டு சுய கோல்கள் அடித்துள்ளார்.

IND Vs ENG T20: இங்கிலாந்தின் த்ரில் வெற்றி!

16ஆவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணிக்கு 24 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டன. அப்பொது ரவி பிஷ்னோய் பந்து வீச வந்தார். முதல் பந்து நோபால். அடுத்த ஃப்ரீஹிட் பந்தில் பெதல் ஒரு சிக்சர் அடித்தார். அடுத்த பந்தை பிஷ்னோய் நோபாலாக வீசினார்.

பஞ்சாங்கம் ஜூலை 06 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

எரிவாயு கசிவு ஏற்பட்ட சிலிண்டர்; லாரி ஓட்டுநரின் அலட்சிய பதிலால் பரபரப்பு!

மதுரையில் நூற்றுக்கணக்கான கேஸ் சிலிண்டர்கள் எடுத்துச் சென்ற லாரியில் எரிவாயு கசிவு ஏற்பட்ட நிலையில், சாலையில் சென்றவர்கள் அச்சம் அடைந்தனர்.

சோலைமலை முருகன் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

அழகர்கோவில்: மதுரை, அழகர் மலையில் அமையப்பெற்றுள்ளது சோலை மலை முருகன் கோவில் சிறப்புமிக்க இந்த பிரசித்தி பெற்ற சோலை மலை முருகன் கோவிலில் கடந்த 2014ம் ஆண்டு கும்பாபிஷேக விழா நடந்தது.

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

Entertainment News

Popular Categories