து.பொ.செ., ஆனார் மாதவன்! உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கண்டிப்பு!

“எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக க.மாதவன் நியமனம். அவருக்கு உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும்- எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவையின் பொதுச் செயலாளர் ஜெ.தீபா அறிவிப்பு. சில நியூஸ் மட்டும்தான் ‘சும்மா’ படிக்கும்போதே இப்படி சிரிப்பு மூட்டும்!”

deepa madhavan - 2026

தீபா – இவருக்கு இருக்கும் ஒரே தகுதி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் என்பதுதான்! அதுவும் கூட, ஜெயலலிதாவின் விருப்பத்துக்கு மாறாக திருமணம் செய்து கொண்டார், குடும்ப பாரம்பரிய பழக்கவழக்கங்களை மறந்து, கிறிஸ்துவ பின்னணியில் சென்றார் என்பதெல்லாம் ஜெயலலிதா அவரை வெறுப்பதற்கு காரணிகளாயின.

ஆனால், ஜெயலலிதா மரணம் அடைந்த பின்னர், கட்சிக்குள் ஏற்பட்ட திடீர் வெற்றிடம், தீபாவை பெரிய ஆள் ஆக்கியது. அப்போது, சசிகலா குடும்பத்தினர் அதிமுக.,வை கபளீகரம் செய்ய அனைத்து வழிகளிலும் முயன்றபோது, சசிகலா குடும்பத்தினரை எள்ளளவும் ஏற்றுக்கொள்ள விரும்பாத அதிமுக.,வினர், ஜெயலலிதாவின் முக சாயலில் தெரிந்த ஜெ.தீபாவை அவரது வாரிசு போல் நினைக்கத் தொடங்கினர்.

அதனால், அதிமுக.,வைச் சேர்ந்த தலைவர்கள் சிலரே கூட தீபாவுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கினர்.

ஆனால்,. தீபாவின் தோற்றம், பின்னணி, செயல்பாடுகள், கணவருடனான பிரச்னை, இயக்கத்துக்கு அவர் வைத்த பெயர், டிரைவருடன் தகராறு, சொந்த சகோதரனுடன் ஏற்பட்ட முட்டல் மோதல்கள், போயஸ் தோட்ட வீட்டு விவகாரத்தில் தீபா நடந்து கொண்ட விதம் என பல்வேறு தொடர்ச்சியான சம்பவங்கள் ஜெ.தீபாவுக்கு இருந்த கொஞ்ச நஞ்சம் மவுசையும் இழக்க வைத்தது.

deepa madhavan1 - 2026

இதனால், தீபா என்ற பெயரைக் கேட்டாலே அனைவரும் சிரிக்கவும், நகைக்கவும் தொடங்கி விட்டனர். இந்நிலையில், ஜெ.தீபா, தற்போது பொங்கல் சிரிப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தனது கணவர் மாதவனை எம்.ஜி.ஆர்., ஜெ.தீபா பேரவையின் துணை பொதுச் செயலாளராக நியமிப்பதாகவும், அனைத்து மாநில நிர்வாகிகளும் கழக உறுப்பினர்களும் மாதவனுக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆனால் தீபா கட்சியில் மாநில அளவிலான பொறுப்புகளுக்குக் கூட, நிர்வாகிகள் இல்லாமல், சிலவற்றுக்கு பொறுப்பாளர்களை நியமிக்க திணறி வரும் நிலையில் மாவட்ட நிர்வாகிகளும் ஒத்துழைக்க வேண்டும் என தீபா கூறியிருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, இன்றைய சமூக வலைத்தள நகைச்சுவையாளர் ஆகி விட்டார் ஜெ.தீபா!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!

ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!

மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories