பொதுமேடையில் அசடுவழிந்த ஜோக்கர்கள்! துபையில் ராகுல்; கிராமசபைக் கூட்டத்தில் ஸ்டாலின்!

stalin village meet - 2026

பொதுமேடையில் இரு கட்சிகளின் வாரிசுத் தலைவர்களும் நிலைமையைச் சமாளிக்கத் தெரியாமல் அசடு வழிந்த செய்திகள் ஒரே நாளில் வெளியாகி, ஒருவரை ஒருவர் விஞ்சும் நிலையை அம்பலப்படுத்தியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி துபையில் இரு நாள் பயணமாகச் சென்றிருக்கிறார். அங்கே சிறுமி ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், அசடுவழிந்து நின்றிருக்கிறார்.

தேசிய அளவில் வாரிசு என்ற காரணத்தால் பதவிக்கு வந்துவிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு,ம் மாநில அளவில் தலைவரின் வாரிசு என்பதால் கட்சித் தலைவராகிவிட்ட மு.க.ஸ்டாலின் முட்டுக்கொடுத்து வருகிறார். ஆனால் இவர்கள் இருவருமே, பொதுமக்கள் மத்தியில் சூழலைக் கையாளத் தெரியாமல் கேவலப்பட்டு நிற்கிறார்கள்.

திமுக தலைவர் ஸ்டாலின் கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலின் போது நமக்கு நாமே பயணம் என்ற பெயரில் திமுகவின் கொள்கைகளையும், திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு என்ன நன்மைகள் செய்வோம் என்பதையும் சுட்டிக்காட்டும் விதமாக, தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்தார். அப்போது, ஸ்டாலின் போட்ட வேடங்கள், சைக்கிளில் செல்வதும், ஆட்டோவில் கை அசைப்பதும் என கேலிக்கூத்தாக நிறைந்திருந்தன காட்சிகள்.

இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக, மக்களின் ஆதரவைப் பெறும் பொருட்டு, கிராமசபைக் கூட்டம் :என்பதை நடத்தி வருகிறார்.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

கிராமசபைக் கூட்டம் என்ற பெயரில் கிராமம் தோறும் மக்களை சந்திக்க திட்டமிட்டு தந்தையி தொகுதியான திருவாரூரில் தொடங்கினார்.

கிராமசபைக் கூட்டத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்கு ஸ்டாலின் அப்போதே பதில் அளிக்கிறார். அவர்கள் கூறும் குறைகளை குறிப்பெடுத்து வைத்துக் கொண்டு, திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தக் குறைகள் அனைத்தும் நிறைவேற்றப் படும் என்று வாக்குறுதியையும் அளிக்கிறார் ஸ்டாலின்.

இந்நிலையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் இள்ளலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் இளைஞர் ஒருவர் ஸ்டாலினிடம் கேட்ட கேள்வி ஸ்டாலினை வாய்மூடி மௌனியாக்க வைத்துள்ளது.

அந்த இளைஞர் ஸ்டாலினிடம், தமிழகத்தின் எதிர்க்கட்சி தலைவர் என்ற முறையில் நீங்கள் ஆளும்கட்சிகளுக்கு எதிராக தீவிரமாக செயல்பட்டு கொண்டிருக்கிறீர்கள் கௌசல்யா திருமணம் செய்ததிற்கு அடுத்த நிமிடமே வாழ்த்து சொன்ன உங்களால் நிச்சயம் பொன் மாணிக்கவேல் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்க முடியும்! ஆனால் நீங்கள் இன்று வரை பொன் மாணிக்கவேல் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவிக்காமல் இருப்பது மனதிற்கு வருத்தத்தை தருகிறது என்றார்.

ALSO READ:  திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

இளைஞரின் கேள்விக்கு பதில் அளிக்காமல், மௌனமாக குறிப்பு மட்டும் எடுத்துக் கொண்டு, நடையைக் கட்டினார் ஸ்டாலின்!

காரணம், கேவில்களை கொள்ளையர்களின் கூடாரம் என்று கூறிக் கொண்டே, கொள்ளையடிப்பவர்கள் யார் என்பது ஸ்டாலினின் மனசாட்சிக்குத் தெரியாமலா இருக்கும்!?

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 05 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திருப்பரங்குன்றத்தில் வருஷாபிஷேகம்

திருப்பரங்குன்றம் முருகன் கோயிலில் வருஷாபிஷேகத்தை முன்னிட்டு யாகசாலை பூஜையுடன் துவங்கியது.

FIFA 2026: 32 அணிகள் சுற்றில் தேறியவை!

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்று முதல் தொடங்குகிறது. நாளொன்றுக்கு இரண்டு ஆட்டங்கள் வீதம் ஜூலை 4 முதல் 7 வரை எட்டு ஆட்டங்கள் நடைபெறும்.

பஞ்சாங்கம் ஜூலை 04 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருநெல்வேலி சிறப்பு ரயில்களின் சேவை நீட்டிப்பு!

தெற்கு ரயில்வே சார்பாக இயக்கப்படும் திருநெல்வேலி மேட்டுப்பாளையம் திருநெல்வேலி சிறப்பு ரயில் உட்பட சில சிறப்பு ரயில் சேவைகள் ஜூலை இறுதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தென்னக இரயில்வே அறிவித்துள்ளது .

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசு கவனமாக செயல்பட வேண்டும் என்று, இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி சுப்பிரமணியம் ஓர் அறிக்கை வாயிலாக எச்சரித்துள்ளார். இது குறித்த அவரது அறிக்கை!

திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

சிவகாசி அருகே திருத்தங்கல் ஸ்ரீ நின்ற நாராயண பெருமாள் கோவில் ஆனி பிரம்மோற்சவ விழா தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. தேரோட்ட விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Entertainment News

Popular Categories