பிரதமர் மோடி அமைதி ஏற்படுத்த ஒரு வாய்ப்பு தரவேண்டும்: கெஞ்சிய இம்ரான் கான்!

imran khan modi - 2026பிரதமர் நரேந்திர மோடி பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தான் முன்னர் கொடுத்த வாக்குறுதியின்படி சரியாக செயல்பட வேண்டும் என்று கூறிய ஒரு நாள் கழித்து இம்ரான்கான் ஒரு அறிக்கையை வெளியிட்டு இருந்தார்

அதில் தனக்கு மேலும் ஒரு வாய்ப்பு அமைதியை ஏற்படுத்துவதற்குத் தர வேண்டும் என்று கோரியிருந்தார். அதே நேரம் இந்தியா நடவடிக்கை எடுக்க தகுந்த ஆதாரங்களை தங்களிடம் வழங்க வேண்டும் என்று இம்ரான் குறிப்பிட்டிருந்தார். அப்படி இந்தியா ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மீதான நம்பத் தகுந்த ஆதாரங்களை அளித்தால் உடனடியாக நடவடிக்கை எடுப்போம் என்றும் இம்ரான்கான் தெரிவித்திருந்தார்

imran modi - 2026

முன்னதாக சனிக்கிழமை மோடி பொதுக்கூட்ட பிரசாரத்தில் பேசியபோது இம்ரான்கான் தன்னிடம் தான் ஒரு பத்தான் இன மகன் என்று கூறியிருந்தார். வடமேற்கு பாகிஸ்தானில் உள்ள மரியாதை தரத்தக்க குழுவாகத்தான் பஷ்டோ என்ற மொழியைப் பேசும் மக்கள் இருக்கின்றனர்! அந்த வழியில் வந்தவர் தான் தாம் என்று இம்ரான் கான் தன்னிடம் கூறியிருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்

முன்னர் இம்ரான்கான் பதவி ஏற்ற நேரத்தில் மோடி அவருக்கு வாழ்த்துக் கூறிய போது இம்ரான் கான் தன்னிடம் இந்தத் தகவலை பகிர்ந்து கொண்டதாகவும், தான் மரியாதைக்குரிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்பதை இம்ரான்கான் இப்போது நிரூபிக்க வேண்டும் என்றும் மோடி ராஜஸ்தானில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசினார்

ALSO READ:  வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

மேலும் இம்ரான் பதவியேற்றபோது மோடி அவருக்கு வாழ்த்து கூறியதுடன் பாகிஸ்தானில் உள்ள ஏழ்மை விலகவும் கல்வி இல்லாமை அறியாமை அகற்றவும் பாகிஸ்தானுக்கு இந்தியா நிச்சயம் உதவும் என்றும், இருவரும் இணைந்து பாகிஸ்தானிலுள்ள வறுமையையும் கல்லாமையும் மாற்றிக் காட்டுவோம் என்றும் உறுதி கூறியதாகக் கூறினார்

ஆனால் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தான் சொன்னபடி தற்போது நடந்து கொண்டு, பயங்கரவாதிகளுக்கு எதிராக உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மோடி கூறியிருந்தார்

இதற்கு பின்னர் இரு தினங்களுக்கு முன்னர் இம்ரான்கான் வெளியிட்ட அறிக்கையில், இந்தியா தகுந்த ஆதாரங்களை வழங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பிரதமர் மோடி தனக்கு அமைதியை ஏற்படுத்த மேலும் ஒரு வாய்ப்பு தர வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்

ஆனால் தற்போது இந்தியா பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியிருக்கிறது. பாகிஸ்தானுக்கு பலமுறை ஆதாரங்களை அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் மேலும் மேலும் ஆதாரங்களை மட்டுமே கொடுத்துக் கொண்டிருப்பது கால விரயத்தையும் பயங்கரவாதிகள் மீதான  நடவடிக்கைத் தன்மையை நீர்த்துப் போகச் செய்வதற்கும் தான் காரணமாக அமையும் என்று கூறப்படுகிறது!

ALSO READ:  தேர்தலில் வாக்களிக்க... சிறப்பு ரயில்கள் இயக்கம்; விவரம் இதோ!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

Topics

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 21 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories