பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை நக்கீரன் கோபால், சபரீசனிடம் இருந்து தொடங்க வேண்டும்!

pollachi issue - 2026

பொள்ளாச்சி பாலியல் குற்ற விசாரணையை சிபிஐ  விசாரிக்க வேண்டும், இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட நபர்களை விட அதிக விவரங்களும் குற்றப் பின்னணிகளும் தெரிந்து வைத்திருக்கும் நக்கீரன் கோபால், ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோரிடம் இருந்து விசாரணையை சிபிஐ தொடங்க வேண்டும். அப்போதுதான் முழு குற்றவாளிகளும் இந்த விவகாரத்தில் சிக்குவார்கள் என்று  பலத்த குரல்கள் எழுந்து வருகின்றன.

இந்த விவகாரத்தில் சமூக வலைத்தளங்களில் பல்வேறு பொய்ச் செய்திகளும் வதந்திகளும் திட்டமிட்டு பரப்பப் படுகின்றன. இந்த விவகாரம் குறித்து தைரியமாக வெளியில் வந்து புகார் கொடுத்த பெண்ணும் குடும்பத்தினரும் கதறி அழுது கெஞ்சுகின்ற சூழலிலும் இதனை அரசியல் ஆக்கி வருகிறது திமுக.,

பெண்களின் மானப் பிரச்னையை வைத்து குளிர்காயும் திமுக., மற்றும் அதன் ஏஜெண்ட்களான நக்கீரன், விகடன், குடும்ப தொலைக்காட்சிகள் உள்ளிட்டவற்றின் மூலம் பொய்ச் செய்தி பரப்பி, எங்களை தற்கொலை செய்யத் தூண்டி வருகின்றனர் என்று குற்றம் சாட்டுகின்றனர் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர்.

இது குறித்து… சமூக வலைத்தளங்களில் உலாவரும் சிலரது உள்ளக்குமுறல் இவை…

தமிழ்நாட்டின் அரசியல் மிகக் கேவலமான வகையில் – வெறுப்பையும் பொய்ச் செய்திகளையும் பரப்பும் கோயபல்ஸ் முறைக்கு மாறியுள்ளது. பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை எப்படியாவது அதிமுக அரசின் தலையில் கட்ட வேண்டும் என்பதற்காக திமுகவின் 200 ரூபாய் கும்பல் அப்பட்டமான பொய்ச்செய்திகளை திட்டமிட்டு பரப்பி வருகிறது.

இந்த சூழலில், சிறுமிகளிடம் காதலிப்பது போன்று நடித்து அவர்களை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கிய கொடூர வழக்கினை சிபிசிஐடிஐ விசாரணைக்கு தமிழ்நாடு அரசு மாற்றியுள்ளது.

இதனால், இந்த விவகாரத்தில் அருவருக்கத்தக்க வகையில் பொய்ச்செய்திகளை பரப்பிய திமுக பொய்ச் செய்தி கும்பலின் அரசியல் சுயநலக் கனவு தகர்ந்துள்ளது.

pollachi jayaraman - 2026

இதுகுறித்து அதிமுகவின் பொள்ளாச்சி ஜெயராமன், கூறுகையில், “தோ்தல் சமயம் என்பதால் இந்த விவகாரத்தில் என் மீது திட்டமிட்டு திமுக அவதூறு பிரசாரம் செய்து வருகிறது. இந்த விவகாரத்தில், எனக்கோ, என் குடும்பத்தினருக்கோ தொடா்பு இல்லை. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவா்களுக்கு சட்டப்படி தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்று உறுதியாக செல்கிறோம்.

குறிப்பாக சொல்வதென்றால் முதன்முதலில் இந்த விவகாரம் தொடா்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் புகாா் அளித்தது நான் தான். பின்னா் கடந்த மாதம் 27ம் தேதி எங்கள் கட்சி எம்.பி. தலைமையில் மாவட்ட எஸ்.பி.யிடம் முறையாக புகாா் அளிக்கப்பட்டுள்ளது.

புகாா் அளித்த அந்த குழுவில் எனது மகனும் இருந்தாா். பின்னா் நான் இது தொடா்பாக பத்திாிகையாளா்களுக்கு பேட்டியும் அளித்துள்ளேன். திட்டமிட்டு என் மீது அவதூறு செய்பவா்கள் மீது காவல்துறையிடம் புகாா் அளிக்க உள்ளேன். குற்றவாளிகள் யாரையும் அதிமுக பாதுகாக்கவில்லை. அப்படி எதுவும் செய்யாது.

இவை அனைத்தும் திமுக தலைவா் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் உத்தரவால் நிகழும் காரியங்கள் தான்” என்று அவா் தொிவித்துள்ளாா்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

மக்கள்தொகைக் கனக்கெடுப்பு பற்றி, மனதின் குரலில் பிரதமர் மோடி!

வடகிழக்குப் பகுதி நம்மனைவருக்கும் அஷ்டலக்ஷ்மிக்குச் சமானம்.  இங்கே நிறைவாக திறன்கள் இருக்கின்றன, வடகிழக்கின் இயற்கை வனப்பு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துவிடும். 

பஞ்சாங்கம் ஏப்ரல் 26 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Entertainment News

Popular Categories