பிடிகருணைக் கிழங்கு மசியல்.
வேண்டியவைகள்

துவரம் பருப்பு—-அரைகப்பிற்கு அதிகம்
பிடிகரணை—கால் கிலோ
பச்சைமிளகாய்—-2 விருப்பம்போல நறுக்கவும்.
இஞ்சி-தோல்நீக்கிப் பொடியாக நறுக்கியது 1டேபிள்ஸ்பூன்
ரஸப்பொடி—2 டீஸ்பூன்அல்லது தனியா,மிளகாய், மிளகும்
பொடித்துப் போடலாம்.
மஞ்சள்பொடி—சிறிது
தாளித்துக்கொட்ட
கடுகு அரை டீஸ்பூன்,வெந்தயம்அரை டீஸ்பூன்,க.பருப்பு,உ.பருப்பு
வகைக்கு 1 டீஸ்பூன்,
பெருங்காயம்—சிறிது
எண்ணெய்—2 டேபிள்ஸ்பூன்
கொத்தமல்லி, கறிவேப்பிலை விருப்பத்திற்கு
ருசிக்கு–உப்பு
எலுமிச்சம் பழம்—2
தக்காளியும் போடலாம்.
செய்முறை
பருப்பைக் களைந்து தண்ணீர், மஞ்சள்பொடி சேர்த்து ப்ரஷர் குக்கரில் பருப்பை நன்றாக வேக வைத்து எடுக்கவும். கருணைக் கிழங்கை நன்றாக அலம்பிச் சற்றுப் பெறிய துண்டங்களாக நறுக்கவும்.
சின்ன குக்கரில் கிழங்கு அமிழத் தண்ணீர் வைத்துத் துளி புளியையும் அதில் உருட்டிப்போட்டு ப்ரஷர் குக்கரில் நிதானத் தீயில் 3 விசில் வரும்வரை வைத்து வேகவிடவும். நீராவி போனவுடனே தண்ணீரை வடித்துவிட்டு குளிர்ந்த
தண்ணீரைவிட்டுத் தோலை உறிக்கவும்
.
நன்றாக வெந்த கிழங்கை ஆறியபின் மிக்ஸியில், வைப்பரில் 2, 3, சுற்று சுற்றி மசிக்கவும்
உருளைக்கிழங்கு மசிப்பது போல கரண்டியினாலும் மசிக்கலாம். குழம்புப் பாத்திரத்திலோ, வாணலியிலோ எண்ணெயைக் காய வைத்து தாளிக்கக் கொடுத்தவைகளைத் தாளித்து, ப.மிளகாய்,இஞ்சியை நன்றாக வதக்கி, இரண்டு கப்பிற்கு அதிகமாகவே தண்ணீரைச் சேர்த்து, உப்பு, ரஸப்பொடி போட்டு, கொதிக்க விடவும்.
வேகவைத்துள்ள பருப்பையும், மசித்த கிழங்கையும் கொதிக்கும் கலவையுடன் சேர்த்து நிதான தீயில் அடிக்கடி கிளறிவிட்டு அடி பிடிக்காமல் குழம்புப் பதத்தில் இறக்கி வைக்கவும். எளுமிச்சம் சாற்றைப் பிழிந்து சேர்த்து கொத்தமல்லி கறி
வேப்பிலையால் அழகைக் கூட்டவும்.
கெட்டியாகவோ, சற்று நீர்க்கவோ இருப்பதற்கு நீங்கள் கொதிக்கும் போதே சேர்க்கும் தண்ணீரின் அளவைக் கூட்டிக் குறைக்கவும்.
மசியல் ருசியாக இருக்கும். சாதத்துடன்,கலந்து சாப்பிடவும், மற்றவைகளுடன் தொட்டுக் கொள்ளவும் ஏற்றது. கருணைக் கிழங்கு காரும் தன்மையுடையது. புளியுடன் வேகவைப்பதாலும், பிறகு எலுமிச்சை சாறு சேர்ப்பதாலும், காரும் தன்மை குறைந்து ருசியாக இருக்கும்.
இந்தக்கிழங்கும் மருத்துவ சக்தி அதிகம் கொண்டது. புதிய கிழங்கைவிட சற்று நாட்களான கிழங்கு நல்லது



