கெடு பிடிக்குள் ஊழியர்கள் ! இழுத்துப் பிடிக்கும் மதுரை காமராஜர் பல்கலைகழகம் !

kamarajar university - 2026
மதுரை காமராஜ் பல்கலையில் ஆசிரியர் மற்றும் ஊழியர்கள் பணிக்கு எப்போது வந்தாலும் வருகை பதிவில் கையெழுத்திடும் ‘வசதி’ இருந்தது. தற்போது நிலைமை தலைகீழாக மாறிவிட்டது.

காலை 10:00 முதல் மாலை 5:30 மணி வரை அலுவல் நேரம். காலை 10:01க்கு மேல் வந்தால் பிரதான நுழைவு வாயிலில் பெயர், வாகன எண் விவரங்களை தெரிவித்த பிறகே உள்ளே வர வேண்டும் என துணைவேந்தர் கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.

இது தெரிந்து தொலைநிலைக் கல்வி இயக்ககம் மற்றும் ஊழியர்கள் குடியிருப்பு வளாகம் வழியாக நுழைந்து விடுவதாக புகார் எழுந்ததையடுத்து அந்த இரு வழிகளும் காலை 10:00 மணி முதல் 12:00 மணி வரை மூட உத்தரவிட்டார்.

இது ஒரு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரும்பாலனோர் அலுவல் நேரத்தில் இருக்கையில் இருப்பதை காண முடிகிறது.பல்கலைகழக அதிகாரி ஒருவர் கூறியதாவது, பல்கலையில் 800க்கும் மேற்பட்ட ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாதோர் மற்றும் நுாற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் உள்ளனர். இவர்களில் பலர் உரிய நேரத்திற்குள் பணிக்கு வருவதில்லை.

இதை கவனித்த துணைவேந்தர், ஒரு வாரமாக பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டு வந்தார். அனைத்து துறை வருகை பதிவேடுகளும் காலை 10:30 மணிக்குள் பதிவாளர் அறைக்கு கொண்டுவர உத்தரவிடப்பட்டுள்ளது.

தாமதமாக வருபவர்கள் பதிவாளரை சந்தித்த பின் தான் பணிக்கு செல்ல முடியும். சரியான காரணங்கள் தெரிவிக்காவிட்டால் அரை நாள் விடுப்பில் செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது. ஒரு வாரமாக தொடர்ந்து தாமதமாக வந்த 100 பேரிடம் விளக்கம் கேட்கப்பட உள்ளது, என்றார்.

தாமதமாக வருவோரை கண்காணிக்க பயோ மெட்ரிக் வருகை பதிவை அமல்படுத்த இதற்கு முன்பு இருந்த துணைவேந்தர்கள் முயற்சித்தனர். ஆனால் ஆசிரியர்கள், ஊழியர்கள் எதிர்ப்பால் அமல்படுத்தப்படவில்லை. பள்ளிகள் போன்று பல்கலையிலும் பயோ மெட்ரிக் முறையை கொண்டுவர துணைவேந்தர் கிருஷ்ணன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 25 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

Entertainment News

Popular Categories