சுபாஷிதம் : செலவுக்கு பின்வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்!

Published:

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

38. செலவுக்கு பின் வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்.

செய்யுள்:

க்ரதௌ விவாஹே வ்யசனே ரிபுக்ஷயே யஸஸ்கரே கர்மணி மித்ரசங்க்ரஹே|
ப்ரியாசு நாரீஷ்வதனேஷு பாந்தவே ஷ்வதிவ்யயோ நாஸ்தி நராதிபாஷ்டசு ||
— ஹிதோபதேசம்.

பொருள்:

ஓ அரசனே! யக்ஞம் போன்ற கிரியைகளைச் செய்யும் போது,  விவாகச் செயல்களின் போது,  ஏதாவது ஆபத்து நேரும்போது, எதிரிகளை வதைக்கும்போது (பாதுகாப்புச் செலவு),  புகழை சம்பாதித்துக் கொடுக்கும் பணிகளுக்காக,  நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதற்காக,  மனைவிக்கு பரிசு வாங்கும்போது,  கஷ்டத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆதரவளிக்கும் போது – என்ற இந்த எட்டுவகைப் பணிகளில் செய்த செலவுகளை அனாவசிய செலவாக எண்ணக்கூடாது.

விளக்கம்: 

எட்டுவித சந்தர்ப்பங்களில் செலவு பற்றி சிந்தித்து கருமித்தனம் பண்ணாமல் தாராளமாக செலவு செய்ய வேண்டும். அது தவறல்ல என்கிறார் ரிஷி இந்தப் ஹிதோபதேசத்தில்.

இவ்வுலகிலும் மறு உலகிலும் லாபம் பெறுவதற்கு இதனைச் சிறந்த முதலீடாகக் கூறுகிறது இந்த ஹிதோபதேசம்.

சாதாரணமாக அதிக செலவு செய்பவர்களை ஆடம்பரச் செலவு செய்பவராக குடும்பத்தினர் நிந்திப்பர். ஆனால் மேலே சொன்ன எட்டு விஷயங்களுக்கு செலவு செய்பவரை அவ்வாறு கூறக் கூடாது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இந்த எட்டு விதச் செயல்களில் புண்ணியத்தையும் உலக நன்மையையும் அளிக்கும் நிகழ்வுகள் உள்ளன. புகழையும் கீர்த்தியையும் அதிகரிப்பதும்,  மனதிற்கு திருப்தி அளிப்பதும் சொந்த மனிதர்களை ஆதரிப்பதுமானா சிறந்த குணங்கள் இதில் உள்ளன. 

மனிதன் பொருளீட்டுவதன் உத்தேசம் கூட இப்படிப்பட்ட நற்செயல்களுக்காகத் தானே! தானம் செய்யும் இயல்பு ஒரு மனிதனின் சகஜ குணம் என்பதே இதன் உட்பொருள். அதனால் சில சந்தர்ப்பங்களில் செலவு செய்வதற்குப் பின் வாங்க கூடாது. நாட்டின் பாதுகாப்புக்காக ஆகும் செலவு அனாவசிய செலவு என்று எண்ணக்கூடாது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img