சுபாஷிதம் : செலவுக்கு பின்வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

38. செலவுக்கு பின் வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்.

செய்யுள்:

க்ரதௌ விவாஹே வ்யசனே ரிபுக்ஷயே யஸஸ்கரே கர்மணி மித்ரசங்க்ரஹே|
ப்ரியாசு நாரீஷ்வதனேஷு பாந்தவே ஷ்வதிவ்யயோ நாஸ்தி நராதிபாஷ்டசு ||
— ஹிதோபதேசம்.

பொருள்:

ஓ அரசனே! யக்ஞம் போன்ற கிரியைகளைச் செய்யும் போது,  விவாகச் செயல்களின் போது,  ஏதாவது ஆபத்து நேரும்போது, எதிரிகளை வதைக்கும்போது (பாதுகாப்புச் செலவு),  புகழை சம்பாதித்துக் கொடுக்கும் பணிகளுக்காக,  நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதற்காக,  மனைவிக்கு பரிசு வாங்கும்போது,  கஷ்டத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆதரவளிக்கும் போது – என்ற இந்த எட்டுவகைப் பணிகளில் செய்த செலவுகளை அனாவசிய செலவாக எண்ணக்கூடாது.

விளக்கம்: 

எட்டுவித சந்தர்ப்பங்களில் செலவு பற்றி சிந்தித்து கருமித்தனம் பண்ணாமல் தாராளமாக செலவு செய்ய வேண்டும். அது தவறல்ல என்கிறார் ரிஷி இந்தப் ஹிதோபதேசத்தில்.

இவ்வுலகிலும் மறு உலகிலும் லாபம் பெறுவதற்கு இதனைச் சிறந்த முதலீடாகக் கூறுகிறது இந்த ஹிதோபதேசம்.

சாதாரணமாக அதிக செலவு செய்பவர்களை ஆடம்பரச் செலவு செய்பவராக குடும்பத்தினர் நிந்திப்பர். ஆனால் மேலே சொன்ன எட்டு விஷயங்களுக்கு செலவு செய்பவரை அவ்வாறு கூறக் கூடாது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இந்த எட்டு விதச் செயல்களில் புண்ணியத்தையும் உலக நன்மையையும் அளிக்கும் நிகழ்வுகள் உள்ளன. புகழையும் கீர்த்தியையும் அதிகரிப்பதும்,  மனதிற்கு திருப்தி அளிப்பதும் சொந்த மனிதர்களை ஆதரிப்பதுமானா சிறந்த குணங்கள் இதில் உள்ளன. 

மனிதன் பொருளீட்டுவதன் உத்தேசம் கூட இப்படிப்பட்ட நற்செயல்களுக்காகத் தானே! தானம் செய்யும் இயல்பு ஒரு மனிதனின் சகஜ குணம் என்பதே இதன் உட்பொருள். அதனால் சில சந்தர்ப்பங்களில் செலவு செய்வதற்குப் பின் வாங்க கூடாது. நாட்டின் பாதுகாப்புக்காக ஆகும் செலவு அனாவசிய செலவு என்று எண்ணக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 23 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘தவெக., இன்னுமொரு திமுக., தானா?’ திருப்பரங்குன்ற தீப நிலைப்பாட்டுக்கு இந்து முன்னணி கண்டனம்!

உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை திருப்பரங்குன்றம் மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக வழங்கிய உத்தரவை அமல்படுத்துவதில், புதிதாக பதவி ஏற்றுள்ள தவெகவின் நிலைப்பாட்டை கேட்டிருந்தது. அது குறித்து இன்று தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்துள்ள பதில் மனுவில் குழப்பமான கருத்துக்களை தெரிவித்துள்ளது.

ஆர்.எஸ்.எஸ்., பதிவு செய்யப்பட்ட அமைப்பா?

ஆர் எஸ் எஸ் தனது பதிவு சான்றிதழைக் காட்ட வேண்டுமென கார்கே கேட்பது பொருள் அற்றது. ஆர் எஸ் எஸ் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாட்டில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் 75 ஆண்டுகள் இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு உட்பட்டது.

பஞ்சாங்கம் ஜூன் 22 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories