February 22, 2026, 12:42 AM
26.7 C
Chennai

சுபாஷிதம் : செலவுக்கு பின்வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்!

subhashitam
subhashitam

சுபாஷிதம் | ஸ்பூர்த்தி பதம்
வாழ்க்கையில் ஊக்கமும் உற்சாகமும் அளித்து நல்வழிப்படுத்தும் 108 ஞான முத்துக்கள்

தெலுங்கில்: பி.எஸ்.சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

38. செலவுக்கு பின் வாங்கக் கூடாத சந்தர்ப்பங்கள்.

செய்யுள்:

க்ரதௌ விவாஹே வ்யசனே ரிபுக்ஷயே யஸஸ்கரே கர்மணி மித்ரசங்க்ரஹே|
ப்ரியாசு நாரீஷ்வதனேஷு பாந்தவே ஷ்வதிவ்யயோ நாஸ்தி நராதிபாஷ்டசு ||
— ஹிதோபதேசம்.

பொருள்:

ஓ அரசனே! யக்ஞம் போன்ற கிரியைகளைச் செய்யும் போது,  விவாகச் செயல்களின் போது,  ஏதாவது ஆபத்து நேரும்போது, எதிரிகளை வதைக்கும்போது (பாதுகாப்புச் செலவு),  புகழை சம்பாதித்துக் கொடுக்கும் பணிகளுக்காக,  நண்பர்களை சம்பாதித்துக் கொள்வதற்காக,  மனைவிக்கு பரிசு வாங்கும்போது,  கஷ்டத்தில் இருக்கும் உறவினர்களுக்கு ஆதரவளிக்கும் போது – என்ற இந்த எட்டுவகைப் பணிகளில் செய்த செலவுகளை அனாவசிய செலவாக எண்ணக்கூடாது.

விளக்கம்: 

எட்டுவித சந்தர்ப்பங்களில் செலவு பற்றி சிந்தித்து கருமித்தனம் பண்ணாமல் தாராளமாக செலவு செய்ய வேண்டும். அது தவறல்ல என்கிறார் ரிஷி இந்தப் ஹிதோபதேசத்தில்.

இவ்வுலகிலும் மறு உலகிலும் லாபம் பெறுவதற்கு இதனைச் சிறந்த முதலீடாகக் கூறுகிறது இந்த ஹிதோபதேசம்.

சாதாரணமாக அதிக செலவு செய்பவர்களை ஆடம்பரச் செலவு செய்பவராக குடும்பத்தினர் நிந்திப்பர். ஆனால் மேலே சொன்ன எட்டு விஷயங்களுக்கு செலவு செய்பவரை அவ்வாறு கூறக் கூடாது என்பது இந்த ஸ்லோகத்தின் கருத்து.

இந்த எட்டு விதச் செயல்களில் புண்ணியத்தையும் உலக நன்மையையும் அளிக்கும் நிகழ்வுகள் உள்ளன. புகழையும் கீர்த்தியையும் அதிகரிப்பதும்,  மனதிற்கு திருப்தி அளிப்பதும் சொந்த மனிதர்களை ஆதரிப்பதுமானா சிறந்த குணங்கள் இதில் உள்ளன. 

மனிதன் பொருளீட்டுவதன் உத்தேசம் கூட இப்படிப்பட்ட நற்செயல்களுக்காகத் தானே! தானம் செய்யும் இயல்பு ஒரு மனிதனின் சகஜ குணம் என்பதே இதன் உட்பொருள். அதனால் சில சந்தர்ப்பங்களில் செலவு செய்வதற்குப் பின் வாங்க கூடாது. நாட்டின் பாதுகாப்புக்காக ஆகும் செலவு அனாவசிய செலவு என்று எண்ணக்கூடாது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

பஞ்சாங்கம் பிப்.22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சர்வதேச ஏஐ., மாநாட்டில் அலம்பல்! வெட்கக்கேடான காங்கிரஸின் செயல்!

புது தில்லியில் நடைபெறும் சர்வதேச அளவிலான ஏஐ மாநாட்டில் புகுந்து சட்டையைக் கழற்றி அரை நிர்வாண ஆபாச நடனம் ஆடி, உலக அளவில் இந்தியாவின் மானத்தைக் கப்பலேற்றிய

பஞ்சாங்கம் பிப்.21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Entertainment News

Popular Categories