February 11, 2025, 10:29 AM
27.5 C
Chennai

சுபாஷிதம்: ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

56. ஆசையே துன்பத்திற்கு காரணம்!

சுலோகம்:

த்யாயதோ விஷயான் பும்ச: சங்கஸ்தேஷுபஜாயதே |
சங்காத் சஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ பிஜாயதே ||

க்ரோதாத்பவதி சம்மோஹ: சம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: |
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணஸ்யதி ||
-பகவத்கீதை (2- 62, 63)-

பொருள்:

போகங்களைப் பற்றி நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று ஆசையாக பரிணமிக்கிறது. ஆசை தீரா விட்டால் சினமாக வடிவெடுக்கிறது. கோபத்தால் மன குழப்பம். மனக் குழப்பத்தால் தன்னை மறத்தல், விவேகம் இழந்து செய்யக் கூடாதவற்றைச் செய்து அதன் பலனாக புத்தி நசிந்து வாழ்க்கையே அழிகிறது.

விளக்கம்: 

நேர்மையோடு முன்னேறுவதற்கு அதிக காலம் பிடிக்கும். அதிக சிரமமும் ஏற்படும். ஆனால் மனிதன் அழிவு வழியில் செல்ல எத்தனை நேரம் தேவை? மனம் அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நினைத்தாலே போதும்! படிப்படியாக அது எவ்வாறு பரவுகிறது? எந்த வடிவை எடுக்கிறது? இறுதியில் மனிதனை எப்படி அழிக்கிறது? என்பதை விவரிக்கும் மனோதத்துவ விஞ்ஞானத்திற்கு உதாரணம் இந்த இரு ஸ்லோகங்களும்.

எத்தகைய அறிவாளி ஆனாலும் உலகியல் சுகங்களின் மேல் ஆசை கொண்டவர்களின் வாழ்க்கை இறுதியில் அழிவதைப் பார்க்கிறோம். பதவி நாற்காலி மீது ஆர்வமும் தம் வாரிசுகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேராசையும் உள்ள தலைவர்கள் எதற்கும் துணிகிறார்கள்.

குருட்டு மாடு ஆசையோடு போய் வயலில் விழுந்தாற்போல் கோரிக்கைகளின் பின்னால் ஓட வேண்டாம் என்று இந்த ஸ்லோகங்கள் இரண்டும் எச்சரிக்கின்றன.

சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் அச்சம், குரோதம், பேராசை முதலான கோரமான ஆவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகி அரக்கர் போல் நடந்து கொள்வர். கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். அடிக்கடி அப்படிப்பட்ட செய்திகள் காதில் விழுந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்களில் பச்சாதாபப்பட்டு  பின்னர் வருந்துவது  பள்ளத்தில் விழுந்த நீருக்கு அணை கட்டுவது போல் வீணாகும்.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

Topics

மாறி மாறி விளையாடிக் கொண்டு இருப்பார்கள்..!

நாளைக்கே- "மாநில அரசின் நிர்வாக முடிவுகளில் தலையிட உச்சநீதிமன்றத்துக்கு அனுமதி இல்லை"-

பஞ்சாங்கம் பிப்.11- செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

இலவச வேட்டி சேலை திட்டத்தில் வருடந்தோறும் ஊழல் செய்யும் ‘கமிஷன்’ காந்தி: அண்ணாமலை

மிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, ஆட்சிக்கு வரும்போது, சிறைக்குச் செல்லவிருக்கும் தி.மு.க.,வின் ஊழல் அமைச்சர்களில், காந்தியே முதல் நபராக இருப்பார்

உவரி கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு தொடங்கி வைக்க இந்து முன்னணி எதிர்ப்பு!

நெல்லை மாவட்டம் உவரி சுயம்புலிங்க சுவாமி திருக்கோவில் தேரோட்டத்தை சபாநாயகர் அப்பாவு துவக்கி வைக்க இந்துமுன்னணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இந்தியர்களை சங்கிலி கட்டி அனுப்பும் அமெரிக்கா! குடிமக்களை எப்படி நடத்துகிறது இந்தியா?

பல்லாயிர இந்தியர்களை அமெரிக்காவில் பிடித்து வைத்திருக்கிறது அந்நாடு. காரணம்: அவர்கள் அமெரிக்க எல்லைக்குள் அனுமதியின்றி நுழைந்தவர்கள்,

செங்கோட்டை சிவன் கோயிலில் தைப்பூச தேரோட்டம்; எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி வடம் பிடித்து தொடங்கி வைப்பு!

செங்கோட்டை ஸ்ரீ தர்மஸம்வர்த்தினி அம்பாள்- குலசேகரநாத சுவாமி கோவில் தைத் தேரோட்டம்: அதிமுக எம்.எல்.ஏ கிருஷ்ணமுரளி தேரை வடம் பிடித்து இழுத்து

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மதக் கலவரத்தைத் தூண்ட சதி: இந்து முன்னணி கண்டனம்!

திருப்பரங்குன்றத்தில் மீண்டும் மத கலவரத்தை தூண்ட நினைக்கும் திமுக கூட்டணி கட்சிகளுக்கு இந்து முன்னணி கண்டனம் தெரிவிப்பதாக, அந்த அமைப்பின்

பஞ்சாங்கம் பிப்.10 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories