சுபாஷிதம்: ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

56. ஆசையே துன்பத்திற்கு காரணம்!

சுலோகம்:

த்யாயதோ விஷயான் பும்ச: சங்கஸ்தேஷுபஜாயதே |
சங்காத் சஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ பிஜாயதே ||

க்ரோதாத்பவதி சம்மோஹ: சம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: |
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணஸ்யதி ||
-பகவத்கீதை (2- 62, 63)-

பொருள்:

போகங்களைப் பற்றி நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று ஆசையாக பரிணமிக்கிறது. ஆசை தீரா விட்டால் சினமாக வடிவெடுக்கிறது. கோபத்தால் மன குழப்பம். மனக் குழப்பத்தால் தன்னை மறத்தல், விவேகம் இழந்து செய்யக் கூடாதவற்றைச் செய்து அதன் பலனாக புத்தி நசிந்து வாழ்க்கையே அழிகிறது.

விளக்கம்: 

நேர்மையோடு முன்னேறுவதற்கு அதிக காலம் பிடிக்கும். அதிக சிரமமும் ஏற்படும். ஆனால் மனிதன் அழிவு வழியில் செல்ல எத்தனை நேரம் தேவை? மனம் அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நினைத்தாலே போதும்! படிப்படியாக அது எவ்வாறு பரவுகிறது? எந்த வடிவை எடுக்கிறது? இறுதியில் மனிதனை எப்படி அழிக்கிறது? என்பதை விவரிக்கும் மனோதத்துவ விஞ்ஞானத்திற்கு உதாரணம் இந்த இரு ஸ்லோகங்களும்.

ALSO READ:  மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

எத்தகைய அறிவாளி ஆனாலும் உலகியல் சுகங்களின் மேல் ஆசை கொண்டவர்களின் வாழ்க்கை இறுதியில் அழிவதைப் பார்க்கிறோம். பதவி நாற்காலி மீது ஆர்வமும் தம் வாரிசுகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேராசையும் உள்ள தலைவர்கள் எதற்கும் துணிகிறார்கள்.

குருட்டு மாடு ஆசையோடு போய் வயலில் விழுந்தாற்போல் கோரிக்கைகளின் பின்னால் ஓட வேண்டாம் என்று இந்த ஸ்லோகங்கள் இரண்டும் எச்சரிக்கின்றன.

சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் அச்சம், குரோதம், பேராசை முதலான கோரமான ஆவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகி அரக்கர் போல் நடந்து கொள்வர். கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். அடிக்கடி அப்படிப்பட்ட செய்திகள் காதில் விழுந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்களில் பச்சாதாபப்பட்டு  பின்னர் வருந்துவது  பள்ளத்தில் விழுந்த நீருக்கு அணை கட்டுவது போல் வீணாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories