சுபாஷிதம்: ஆசையே துன்பத்துக்குக் காரணம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

56. ஆசையே துன்பத்திற்கு காரணம்!

சுலோகம்:

த்யாயதோ விஷயான் பும்ச: சங்கஸ்தேஷுபஜாயதே |
சங்காத் சஞ்ஜாயதே காம: காமாத் க்ரோதோ பிஜாயதே ||

க்ரோதாத்பவதி சம்மோஹ: சம்மோஹாத் ஸ்ம்ருதிவிப்ரம: |
ஸ்ம்ருதிப்ரம்சாத்புத்திநாசோ புத்திநாசாத்ப்ரணஸ்யதி ||
-பகவத்கீதை (2- 62, 63)-

பொருள்:

போகங்களைப் பற்றி நினைப்பதால் பற்று உண்டாகிறது. பற்று ஆசையாக பரிணமிக்கிறது. ஆசை தீரா விட்டால் சினமாக வடிவெடுக்கிறது. கோபத்தால் மன குழப்பம். மனக் குழப்பத்தால் தன்னை மறத்தல், விவேகம் இழந்து செய்யக் கூடாதவற்றைச் செய்து அதன் பலனாக புத்தி நசிந்து வாழ்க்கையே அழிகிறது.

விளக்கம்: 

நேர்மையோடு முன்னேறுவதற்கு அதிக காலம் பிடிக்கும். அதிக சிரமமும் ஏற்படும். ஆனால் மனிதன் அழிவு வழியில் செல்ல எத்தனை நேரம் தேவை? மனம் அப்படிப்பட்ட விஷயங்களைப் பற்றி நினைத்தாலே போதும்! படிப்படியாக அது எவ்வாறு பரவுகிறது? எந்த வடிவை எடுக்கிறது? இறுதியில் மனிதனை எப்படி அழிக்கிறது? என்பதை விவரிக்கும் மனோதத்துவ விஞ்ஞானத்திற்கு உதாரணம் இந்த இரு ஸ்லோகங்களும்.

எத்தகைய அறிவாளி ஆனாலும் உலகியல் சுகங்களின் மேல் ஆசை கொண்டவர்களின் வாழ்க்கை இறுதியில் அழிவதைப் பார்க்கிறோம். பதவி நாற்காலி மீது ஆர்வமும் தம் வாரிசுகளை முன்னுக்குக் கொண்டுவர வேண்டும் என்ற பேராசையும் உள்ள தலைவர்கள் எதற்கும் துணிகிறார்கள்.

குருட்டு மாடு ஆசையோடு போய் வயலில் விழுந்தாற்போல் கோரிக்கைகளின் பின்னால் ஓட வேண்டாம் என்று இந்த ஸ்லோகங்கள் இரண்டும் எச்சரிக்கின்றன.

சுயக்கட்டுப்பாடு இல்லாதவர்கள் அச்சம், குரோதம், பேராசை முதலான கோரமான ஆவேச உணர்ச்சிகளுக்கு ஆளாகி அரக்கர் போல் நடந்து கொள்வர். கொலை செய்யவும் அஞ்சமாட்டார்கள். அடிக்கடி அப்படிப்பட்ட செய்திகள் காதில் விழுந்த வண்ணம் உள்ளன. இந்த சம்பவங்களில் பச்சாதாபப்பட்டு  பின்னர் வருந்துவது  பள்ளத்தில் விழுந்த நீருக்கு அணை கட்டுவது போல் வீணாகும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories