February 13, 2025, 4:32 AM
23.4 C
Chennai

சுபாஷிதம்: குறையாத கல்விச் செல்வம்!

subhashitam
subhashitam

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

58. கல்விச் செல்வம்

ஸ்லோகம்:

ந சோரஹார்யம் ந ச ராஜ ஹார்யம் ந ப்ராத்ருபாஜ்யம் ந ச பாரகாரீ|
வ்யயே க்ருதே வர்தத ஏவ நித்யம் வித்யாதனம் சர்வதனப்ரதானம்||
— பர்த்ருஹரி

பொருள்:

கல்விச் செல்வம் திருடர்களால் கொள்ளை போகாது. அரசாங்கம் எடுத்துக் கொள்ளாது. உடன் பிறந்தோர் பகிர்ந்து கொள்ள மாட்டார். (பகிர்ந்து கொண்டாலும் குறையாது). சுமப்பதால் தோள் வலி ஏற்படாது. செலவழிப்பதால் வளர்ந்துகொண்டே இருக்கும். கல்விச்செல்வம் அனைத்து செல்வங்களிலும் சிறந்தது.

விளக்கம்:

கல்வியின் முக்கியத்துவத்தை கூறும் ஸ்லோகங்கள் பல உள்ளன. கல்விச் செல்வத்தின் சிறப்பை விளக்கும் சுலோகம் இது.

செல்வத்திற்கு உள்ள சில எல்லைகளும் பிரச்சனைகளும் கல்விக்கு இல்லை என்பதை இங்கு கவனிக்கலாம்.

 ‘நாஸ்தி வித்யா சமம் சக்ஷு:’ கல்விக்கு ஈடான கண்கள் இல்லை என்று கவிஞர்களால் போற்றப்படுவது கல்வி.

தனம், தான்யம், பசு, சம்பத்து அனைத்தையும் விடச் சிறந்தது கல்விச் செல்வமே! கல்வி அறிவற்றவன் எத்தகைய உயர்ந்த குடும்பத்தில் பிறந்தாலும் என்ன பலன்?

அதனால் பணம் சம்பாதிப்பதை கொஞ்சம் ஒத்தி வைத்து விட்டாவது கல்விச் செல்வத்தை பெற வேண்டும். இதற்குரிய வழிகளும் பல உள்ளன. வீட்டில் இருந்தபடியே கல்வி கற்கும் வாய்ப்புக்கள் உள்ளன. அலுவலகத்தில் பணிபுரிந்து கொண்டே மாலை நேரத்தில் படித்து கல்விச் செல்வத்தை பெற முடியும். 

படிக்கும் பழக்கம் மிகவும் நல்லது. ஆனால் எதைப் படித்தால் நலம் விளையும் என்று தேடிப் படிப்பது முக்கியம். பயனற்றவற்றைப்  படிப்பது நல்லதல்ல என்பது பெரியோர் கூற்று!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

Topics

பஞ்சாங்கம் பிப்.13 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ஆய்வாளர் மீது நடவடிக்கை கோரி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்!

சங்கரன்கோவிலில் இந்துமுன்னணி ஆர்ப்பாட்டம் 4 பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த யூடியூபர் ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு!

சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள யூடியூப் திவ்யா , கார்த்தி, ஆனந்த் ஆகியோர் தாக்கல் செய்துள்ள ஜாமீன் மனு

கனிம வளக் கொள்ளையைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள் பணியிடை நீக்கம்!

மாவட்ட நிர்வாகத்தின் தொடர் எச்சரிக்கையை மீறி செயல்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாசி மாத பூஜைக்காக சபரிமலை நடை திறப்பு!

பிப்ரவரி 17 ஆம் தேதி வரை தினமும் 20,000 கன மீட்டர் தண்ணீர் திறந்து விடப்படும். பம்பா நதியில் நீர் மட்டம் ஐந்து சென்டிமீட்டர் வரை உயரக்கூடும்.

உசிலம்பட்டி ஆண்டிச்சாமி கோயில், கருப்பட்டி கருப்பண்ண சாமி கோயில்களில் கும்பாபிஷேகம்!

மதுரை மாவட்டத்தில் உள்ள சிவன் ஆலயங்களில், சோமவாரம் பிரதோஷம் நடைபெற்றது.

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடி மண் எடுக்கும் விழா!

மஞ்சமலை சுவாமி திருவிழா பிடிமண் கொடுக்கும் நிகழ்ச்சியில் 5000க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

திருப்பரங்குன்றம் தைப் பூசத் திருவிழாவில் அரிய காட்சிகள்!

இவ்வாறு ஆண்டிற்கு ஒரு முறை ஒரே நேரத்தில் 2 முருகப்பெருமான், 2 தெய்வானைஎழுந்தருளுவது என்பது திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் தைப்பூச திருவிழாவின் தனி சிறப்பாக இருந்து வருகிறது.

Entertainment News

Popular Categories