சுபாஷிதம்: வீட்டுத் திருடன்!

Published:

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

77. வீட்டுத் திருடன்

ஸ்லோகம்:

யத்ராத்மீயோ ஜனோ நாஸ்தி பேதஸ்தத்ர ந வித்யதே |
குடாரை: தண்டநிர்முக்தை: பித்யந்தே தரவ: கதம் ||

பொருள்:

சொந்த மனிதர்கள் மூலமாகவே ஆபத்துகள் விளையும். கோடாலியை பிடித்துக் கொள்ளும் கட்டை இல்லாவிட்டால் மரத்தை வெட்ட முடியாது அல்லவா? அந்த கோடாலியின் கைப்பிடி எங்கிருந்து வந்தது? மரத்திலிருந்தே அல்லவா? அவ்விதமாக மரத்துக்கு கேடு செய்யும் கோடாலிக்கு உதவுவது மரத்தின் ஒரு பகுதியே.

விளக்கம்:

வீட்டுத் திருடனை பிடிப்பது கடினம் என்பார்கள். தாயாதி, பங்காளிகள் இருக்கும்போது வீட்டிற்கு வேறு நெருப்பு எதற்கு என்ற பழமொழியும் உள்ளது. இப்படிப்பட்ட யோசிக்க வைக்கும் மொழியில் உள்ளது இந்த ஸ்லோகம்.

எதிர்கட்சியின் உள் விவகாரம் அறிந்தவரை நம் பக்கத்திற்கு இழுத்துக் கொண்டு அவர்களைக் கொண்டே எதிரிகளை வெற்றி பெறுவது ஒரு ராஜதந்திரம். அவ்வாறு எதிர்க்கட்சிக்காரர்களை எதிர்த்து தேர்தலிலும்  வாணிபத்திலும் வெற்றிபெற்ற உதாரணங்கள் எத்தனையோ உள்ளன.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

இந்தியாவில்  நடக்கும் தீவிரவாதத் தாக்குதலுக்குக் காரணம்  பாகிஸ்தானின் தூண்டுதல்.  அங்கிருந்து வரும் தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் அளிக்கும் நம் நாட்டு மக்களின் உதவியோடுதான் இதெல்லாம் நடக்கிறது என்பது உண்மை. 

அரசியல் வேறுபாடுகளாலும் மத மூடநம்பிக்கையாலும் பணத்திற்கு ஆசைப்பட்டும் எதிரிகளோடு கைகலந்து, தான் அமர்ந்திருக்கும் மரக்கிளையைத் தானே வெட்டியது போல் பணிபுரியும் வீட்டு திருடர்களோடு ஒப்பிட்டுப் பார்க்க வைக்கும் சுலோகம் இது.

மரத்திற்குத் தீங்கு விளைவிக்கும் கோடாலியின் கைப்பிடி போன்றவரே இந்த தீவிரவாதிகளுக்கு நாட்டு  ரகசியங்களைத் தெரிவித்து அடைக்கலம் அளிக்கும் தீயவர்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img