சுபாஷிதம்: நிறைகுடம் தளும்பாது!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

80. நிறைகுடம் தளும்பாது!

ஸ்லோகம்:

ரத்னைராபூரிதஸ்யாபி மதலேசோஸ்தி நாம்புதே: |
முக்தா: கதிபயா: ப்ராப்ய மாதங்கா மதவிஹ்வலா : ||

பொருள்:  

முத்துக்களும் ரத்தினங்களும் நிறைந்த கடல் மிகவும் கம்பீரமாக இருக்கும். தன் கும்பஸ்தலத்தில் சில முத்துக்களையே  கொண்டிருக்கும் யானை மிகுந்த மதம் கொண்டு நடந்து கொள்ளும்.

விளக்கம்:

குறைகுடம் கூத்தாடும்… நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி. முழுவதும் பரிமாறப்பட்ட இலை அடக்கமாக இருக்கும். வெறும் இலை காற்றில் படபடக்கும் என்பதுபோல சக்தி சாமர்த்தியம் நிறைந்தவர்கள் அடக்கத்தோடு இருப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள். ஏதோ கொஞ்சம் அறிவுள்ளவர்கள் கர்வம் தலைக்கேறி கண்மண் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இந்தக் கருத்தை நல்ல  ஒப்புவமையோடு கவி வர்ணித்துள்ளார்.

ரத்னாகரன் எனப்படும் சமுத்திரத்தை யானையோடு ஒப்பிடும் ஸ்லோகம் இது. 

யானையின் கும்பஸ்தலத்தில் முத்துக்கள் இருக்கும் என்பது கவிகளின் கூற்று. 

ரத்னாகரன் என்று பெயர் பெற்ற கடலின் ஆழமான  கர்ப்பம் எண்ணிலடங்கா ரத்தினங்களுக்கும் முத்துக்களுக்கும் இருப்பிடம். அதற்காக கடல் கர்வப்படுவதில்லை. மதம் கொண்டு நடந்து கொள்வதில்லை. மிக கம்பீரமாக பிரசாந்தமாக இருக்கிறது. அத்தகைய விலைமதிப்பில்லாத செல்வங்களை அடைய நினைப்பவர்கள் திறமையோடு அவற்றை பொறுக்கிக் கொள்வார்கள்.

இதற்கு மாறாக யானை நடந்து கொள்வதை கவி வர்ணித்திருப்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள சிறப்பு. யானையின் கும்பஸ்தலத்தில் சில முத்துக்கள் இருக்கும். கடலோடு ஒப்பிட்டால் அது எம்மாத்திரம்? அந்த சில முத்துக்களுக்கே அதிகம் கர்வம் கொண்டு அங்கும் இங்கும் தலையை ஆட்டி மதம் கொண்டு  நடந்து கொள்கிறது. பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது.

இவ்விதமாக அரைகுறையாகக் கற்றவர் அந்த யானையைப் போல கர்வம் கொண்வர். முழுமையான கல்வியறிவுடைய  அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 13 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது… 30 வருட பரிணாம வளர்ச்சி!

177ல் தொடங்கி 1 சீட்டில் வந்து நிக்குது... 30 வருட பரிணாம வளர்ச்சி!

பஞ்சாங்கம் மார்ச் 12 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

எரிவாயு சிலிண்டர், பெட்ரோல்; மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம்: பிரதமர் மோடி பேச்சு!

திருச்சியில் நடைபெற்ற தேஜகூட்டணி பொதுக்கூட்டத்தில், கூட்டணி தலைவர்கள் பேசியபோது,

தமிழருக்கான ரூ.5,650 கோடி திட்டங்கள் தொடங்க… இன்று திருச்சி வருகிறார் பிரதமர் மோடி!

தமிழகத்துக்கான ரூ.5,650 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களைத் தொடங்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி  திருச்சிக்கு வருகிறார். 

பஞ்சாங்கம் – மார்ச் 11 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘அடிச்சி விடு’ புகழ், இப்போ ‘செல்லத் தட்டல்’ சேகர்பாபு ஆகிவிட்டார்: அண்ணாமலை கிண்டல்!

அது என்ன, திமுக தலைவர்கள் மட்டும் சாதாரண பொதுமக்களை அன்பாகத் தட்டிக் கொடுக்கும்போதெல்லாம், முகத்தை அப்படி கோபமாக வைத்துக் கொள்கிறீர்கள்?

தமிழகத்தில் இருந்த நாட்கள் பொற்கால நாட்கள்: ஆளுநர் ஆர்.என். ரவி உருக்கம்!

தமிழக மக்களுடன் கலந்து பழகிய 54 மாதங்கள் தம் வாழ்வின் பொற்கால நாட்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்என். ரவி உருக்கத்துடன் தெரிவித்துள்ளார்.

Entertainment News

Popular Categories