சுபாஷிதம்: நிறைகுடம் தளும்பாது!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

80. நிறைகுடம் தளும்பாது!

ஸ்லோகம்:

ரத்னைராபூரிதஸ்யாபி மதலேசோஸ்தி நாம்புதே: |
முக்தா: கதிபயா: ப்ராப்ய மாதங்கா மதவிஹ்வலா : ||

பொருள்:  

முத்துக்களும் ரத்தினங்களும் நிறைந்த கடல் மிகவும் கம்பீரமாக இருக்கும். தன் கும்பஸ்தலத்தில் சில முத்துக்களையே  கொண்டிருக்கும் யானை மிகுந்த மதம் கொண்டு நடந்து கொள்ளும்.

விளக்கம்:

குறைகுடம் கூத்தாடும்… நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி. முழுவதும் பரிமாறப்பட்ட இலை அடக்கமாக இருக்கும். வெறும் இலை காற்றில் படபடக்கும் என்பதுபோல சக்தி சாமர்த்தியம் நிறைந்தவர்கள் அடக்கத்தோடு இருப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள். ஏதோ கொஞ்சம் அறிவுள்ளவர்கள் கர்வம் தலைக்கேறி கண்மண் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இந்தக் கருத்தை நல்ல  ஒப்புவமையோடு கவி வர்ணித்துள்ளார்.

ரத்னாகரன் எனப்படும் சமுத்திரத்தை யானையோடு ஒப்பிடும் ஸ்லோகம் இது. 

யானையின் கும்பஸ்தலத்தில் முத்துக்கள் இருக்கும் என்பது கவிகளின் கூற்று. 

ரத்னாகரன் என்று பெயர் பெற்ற கடலின் ஆழமான  கர்ப்பம் எண்ணிலடங்கா ரத்தினங்களுக்கும் முத்துக்களுக்கும் இருப்பிடம். அதற்காக கடல் கர்வப்படுவதில்லை. மதம் கொண்டு நடந்து கொள்வதில்லை. மிக கம்பீரமாக பிரசாந்தமாக இருக்கிறது. அத்தகைய விலைமதிப்பில்லாத செல்வங்களை அடைய நினைப்பவர்கள் திறமையோடு அவற்றை பொறுக்கிக் கொள்வார்கள்.

இதற்கு மாறாக யானை நடந்து கொள்வதை கவி வர்ணித்திருப்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள சிறப்பு. யானையின் கும்பஸ்தலத்தில் சில முத்துக்கள் இருக்கும். கடலோடு ஒப்பிட்டால் அது எம்மாத்திரம்? அந்த சில முத்துக்களுக்கே அதிகம் கர்வம் கொண்டு அங்கும் இங்கும் தலையை ஆட்டி மதம் கொண்டு  நடந்து கொள்கிறது. பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது.

இவ்விதமாக அரைகுறையாகக் கற்றவர் அந்த யானையைப் போல கர்வம் கொண்வர். முழுமையான கல்வியறிவுடைய  அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories