சுபாஷிதம்: நிறைகுடம் தளும்பாது!

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

80. நிறைகுடம் தளும்பாது!

ஸ்லோகம்:

ரத்னைராபூரிதஸ்யாபி மதலேசோஸ்தி நாம்புதே: |
முக்தா: கதிபயா: ப்ராப்ய மாதங்கா மதவிஹ்வலா : ||

பொருள்:  

முத்துக்களும் ரத்தினங்களும் நிறைந்த கடல் மிகவும் கம்பீரமாக இருக்கும். தன் கும்பஸ்தலத்தில் சில முத்துக்களையே  கொண்டிருக்கும் யானை மிகுந்த மதம் கொண்டு நடந்து கொள்ளும்.

விளக்கம்:

குறைகுடம் கூத்தாடும்… நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி. முழுவதும் பரிமாறப்பட்ட இலை அடக்கமாக இருக்கும். வெறும் இலை காற்றில் படபடக்கும் என்பதுபோல சக்தி சாமர்த்தியம் நிறைந்தவர்கள் அடக்கத்தோடு இருப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள். ஏதோ கொஞ்சம் அறிவுள்ளவர்கள் கர்வம் தலைக்கேறி கண்மண் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இந்தக் கருத்தை நல்ல  ஒப்புவமையோடு கவி வர்ணித்துள்ளார்.

ரத்னாகரன் எனப்படும் சமுத்திரத்தை யானையோடு ஒப்பிடும் ஸ்லோகம் இது. 

யானையின் கும்பஸ்தலத்தில் முத்துக்கள் இருக்கும் என்பது கவிகளின் கூற்று. 

ரத்னாகரன் என்று பெயர் பெற்ற கடலின் ஆழமான  கர்ப்பம் எண்ணிலடங்கா ரத்தினங்களுக்கும் முத்துக்களுக்கும் இருப்பிடம். அதற்காக கடல் கர்வப்படுவதில்லை. மதம் கொண்டு நடந்து கொள்வதில்லை. மிக கம்பீரமாக பிரசாந்தமாக இருக்கிறது. அத்தகைய விலைமதிப்பில்லாத செல்வங்களை அடைய நினைப்பவர்கள் திறமையோடு அவற்றை பொறுக்கிக் கொள்வார்கள்.

இதற்கு மாறாக யானை நடந்து கொள்வதை கவி வர்ணித்திருப்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள சிறப்பு. யானையின் கும்பஸ்தலத்தில் சில முத்துக்கள் இருக்கும். கடலோடு ஒப்பிட்டால் அது எம்மாத்திரம்? அந்த சில முத்துக்களுக்கே அதிகம் கர்வம் கொண்டு அங்கும் இங்கும் தலையை ஆட்டி மதம் கொண்டு  நடந்து கொள்கிறது. பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது.

இவ்விதமாக அரைகுறையாகக் கற்றவர் அந்த யானையைப் போல கர்வம் கொண்வர். முழுமையான கல்வியறிவுடைய  அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories