சுபாஷிதம்: நிறைகுடம் தளும்பாது!

Published:

subhashitam_1-1
subhashitam_1-1

சுபாஷிதம்… ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

80. நிறைகுடம் தளும்பாது!

ஸ்லோகம்:

ரத்னைராபூரிதஸ்யாபி மதலேசோஸ்தி நாம்புதே: |
முக்தா: கதிபயா: ப்ராப்ய மாதங்கா மதவிஹ்வலா : ||

பொருள்:  

முத்துக்களும் ரத்தினங்களும் நிறைந்த கடல் மிகவும் கம்பீரமாக இருக்கும். தன் கும்பஸ்தலத்தில் சில முத்துக்களையே  கொண்டிருக்கும் யானை மிகுந்த மதம் கொண்டு நடந்து கொள்ளும்.

விளக்கம்:

குறைகுடம் கூத்தாடும்… நிறைகுடம் தளும்பாது என்பது பழமொழி. முழுவதும் பரிமாறப்பட்ட இலை அடக்கமாக இருக்கும். வெறும் இலை காற்றில் படபடக்கும் என்பதுபோல சக்தி சாமர்த்தியம் நிறைந்தவர்கள் அடக்கத்தோடு இருப்பார்கள். வெற்றியும் பெறுவார்கள். ஏதோ கொஞ்சம் அறிவுள்ளவர்கள் கர்வம் தலைக்கேறி கண்மண் தெரியாமல் நடந்து கொள்வார்கள். இந்தக் கருத்தை நல்ல  ஒப்புவமையோடு கவி வர்ணித்துள்ளார்.

ரத்னாகரன் எனப்படும் சமுத்திரத்தை யானையோடு ஒப்பிடும் ஸ்லோகம் இது. 

யானையின் கும்பஸ்தலத்தில் முத்துக்கள் இருக்கும் என்பது கவிகளின் கூற்று. 

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

ரத்னாகரன் என்று பெயர் பெற்ற கடலின் ஆழமான  கர்ப்பம் எண்ணிலடங்கா ரத்தினங்களுக்கும் முத்துக்களுக்கும் இருப்பிடம். அதற்காக கடல் கர்வப்படுவதில்லை. மதம் கொண்டு நடந்து கொள்வதில்லை. மிக கம்பீரமாக பிரசாந்தமாக இருக்கிறது. அத்தகைய விலைமதிப்பில்லாத செல்வங்களை அடைய நினைப்பவர்கள் திறமையோடு அவற்றை பொறுக்கிக் கொள்வார்கள்.

இதற்கு மாறாக யானை நடந்து கொள்வதை கவி வர்ணித்திருப்பது இந்த ஸ்லோகத்தில் உள்ள சிறப்பு. யானையின் கும்பஸ்தலத்தில் சில முத்துக்கள் இருக்கும். கடலோடு ஒப்பிட்டால் அது எம்மாத்திரம்? அந்த சில முத்துக்களுக்கே அதிகம் கர்வம் கொண்டு அங்கும் இங்கும் தலையை ஆட்டி மதம் கொண்டு  நடந்து கொள்கிறது. பிறருக்கு தீங்கு விளைவிக்கிறது.

இவ்விதமாக அரைகுறையாகக் கற்றவர் அந்த யானையைப் போல கர்வம் கொண்வர். முழுமையான கல்வியறிவுடைய  அறிஞர்கள் கடலைப் போல கம்பீரமாக இருப்பர். மதம் அவர்களிடம் துளியும் இருக்காது.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img