மூட்டுவலிகள் தீர எலுமிச்சை மருத்துவம்….!

ELUMECHI 1 - 2026

10 எலுமிச்சை கொண்டு மூட்டு வலியை விரட்ட வீட்டு வைத்தியம்.

எலுமிச்சையின் தோலில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் மற்றும் ஆன்டி-செப்டிக் பண்புகள் வளமான அளவில் உள்ளது.

இது இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளில் ஏற்படும் வலியைப் போக்கும் திறன் கொண்டவை. அதோடு மூட்டு மற்றும் இடுப்பு வலியைப் போக்குவதிலும் சிறந்தது.

அதற்கு எலுமிச்சைத் தோலை கீழே கொடுக்கப்பட்டுள்ள 2 வழிகளின் மூலம் தீர்வு காணலாம்.

வழி #1
10 எலுமிச்சைகளை எடுத்து நீரில் கழுவி, பின் அந்த எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்துக் கொண்டு, ஒரு கண்ணாடி பாட்டிலில் போட்டு, அத்துடன் சிறிது ஆலிவ் ஆயில் சேர்த்து மூடி, 15 நாட்கள் ஊற வையுங்கள். பின் அந்த எண்ணெயை ஒரு துணியில் நனைத்து வலியுள்ள மூட்டு மற்றும் இடுப்பு பகுதிகளில் வைத்துக் கட்டி, இரவு முழுவது ஊற வைக்க வலி மாயமாய் மறையும்.

வழி #2
எலுமிச்சைகளின் தோலை சீவி எடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியில் வைத்து, துணி பயன்படுத்தி கட்டி, சில மணிநேரம் ஊற வைப்பதன் மூலமும் மூட்டு மற்றும் இடுப்பு வலி குறையும்.

எலுமிச்சையின் தோலை சீவி எடுத்த பின், எஞ்சிய எலுமிச்சையின் சாற்றினைப் பிழிந்து ஜூஸ் தயாரித்து குடித்தால் சில நன்மைகள் கிடைக்கும். அந்த நன்மைகளை கீழே காண்போம்.

நன்மை #1
எலுமிச்சையில் உள்ள ப்ளேவோனாய்டுகள், பல்வேறு வகையான புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கும். எனவே முடிந்தால் தினமும் ஒரு டம்ளர் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

நன்மை #2
எலுமிச்சை ஜூஸ் செரிமான பிரச்சனைகளான வயிற்றுப் போக்கு அல்லது மலச்சிக்கல் போன்ற வயிறு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளைத் தடுக்கும். ஆகவே வயிற்று பிரச்சனைகள் வராமல் இருக்க எலுமிச்சை ஜூஸ் குடியுங்கள்.

நன்மை #3
எலுமிச்சை ஜூஸின் முக்கிய நன்மை, அது கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் மற்றும் உடலில் இருந்து டாக்ஸின்களை வெளியேற்றும். அதோடு, இந்த ஜூஸ் கல்லீரலில் பித்த நீரின் உற்பத்தியை அதிகரித்து கொழுப்புக்களை எளிதில் கரைக்கச் செய்யும்.

நன்மை #4
எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தும். எனவே சளி, காய்ச்சல் போன்ற வைரஸ் தொற்றுகளைத் தடுக்க எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள். இதனால் சிறுநீர் பாதையில் தொற்றுகள் ஏற்படாமலும் இருக்கும்.

நன்மை #5
உடலில் போதுமான அளவு பொட்டாசியம் இல்லாத போது, உயர் இரத்த அழுத்த பிரச்சனையை சந்திக்க நேரிடும். எலுமிச்சையில் பொட்டாசியம் போதுமான அளவு இருப்பதால், இதன் ஜூஸை அடிக்கடி குடிக்க உயர் இரத்த அழுத்த பிரச்சனையைக் குறைக்கலாம்.

நன்மை #6
எலுமிச்சை ஜூஸ் பல் வலி மற்றும் ஈறு நோய்களில் இருந்து நிவாரணம் அளிப்பதோடு, வாயை புத்துணர்ச்சியுடனும், துர்நாற்றமின்றியும் வைத்துக் கொள்ளும். முக்கியமாக, இந்த ஜூஸைக் குடித்தும் பற்களைத் துலக்க வேண்டாம். இதனால் அதன் முழு நன்மையையும் பெற முடியாமல் போகும்.

நன்மை #7
எலுமிச்சையில் வளமான அளவில் பெக்டின் நார்ச்சத்து உள்ளது. இதனால் அடிக்கடி பசி ஏற்படும் உணர்வு தடுக்கப்பட்டு, கண்ட உணவுகளின் மீதுள்ள நாட்டம் குறைந்து, உடல் எடை குறைய உதவும். எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், தினமும் எலுமிச்சை ஜூஸைக் குடியுங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories