ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்..!

lalithambal - 2026

லலிதா ஸஹஸ்ர நாமத்தில் மூன்றாவது நாமம் : ‘சிதக்னி குண்ட சம்ப்பூதா’.

சித்_அக்னி_குண்ட_சம்ப்பூதா- ஞானமாகிய யாக குண்டத்திலிருந்து தோன்றியவள்

பண்டாசுரனிடம் தோல்வியுற்ற தேவர்கள் தேவியைக் குறித்து நடத்திய யாகத்தில், தனது உடற்பகுதிகளை அறுத்து முதலில் ஹோமம் செய்தார்கள். பின்னர் தங்களையே ஹோமம் செய்யத் தொடங்கியதும் தேவியாகப்பட்டவள் அக்னி குண்டத்திலிருந்து வெளிப்பட்டாள்.

அகந்தையையும் மமதையையும் இழந்து ‘தான்’ என்ற உணர்வையே தேவிக்கு அர்ப்பணம் செய்த அக்னிகுண்டமே அந்த அக்னியே  ஞானாக்கினி

மமதைக்கும் அகந்தைக்கும் காரணமாக நிற்கின்ற ஸ்தூல – ஸூக்ஷ்ம – காரண சரீர தொடர்பு கொண்ட “நான்” என்ற உணர்வையே தேவர்கள் ஹோமம் செய்திட, உண்மையான “நான்” ஆகிய தேவி அந்த ஞானாக்னியிலிருந்து தோன்றினாள்.

இதையே பகவத்கீதையில் கிருஷ்ணா பரமாத்மா,
“ஜ்ஞாநாக்நி: ஸர்வகர்மாணி பஸ்மஸாத்குருதே அர்ஜுன” (4 – 37) என்கிறார்.

மனம், புத்தி, உடலுடன் ஆத்மாவுக்குத் தொடர்பில்லை என்கிற ஞானம் ஒருவனுக்குத் தோன்றிய பின்னர், பிராரப்தக் கர்மத்தின் பயனாக மனம், புத்தி, உடல் இவற்றுடன் சுக துக்கங்களின் தொடர்பு ஏற்பட்டாலும் அவனது மனதில் மகிழ்ச்சி – துக்கம் என்கிற விகாரங்கள் ஏற்படாது. இப்போது செய்யும் கர்மங்களிலும் ‘தான் கர்த்தா’ என்ற அபிமானமும், மமகாரமும், பற்றும், வாசனையும், அழிந்து போய்விட்டதால் அவை மனப் பதிவுகளை ஏற்படுத்தாது. மனப்பதிவுகளே ஏற்படாதபோது விருப்பு – வெறுப்புகள், மகிழ்ச்சி – துயரங்கள், என்ற விகாரங்களும் ஏற்படாது. ஆகவே எல்லா விகாரங்களும், கர்மங்களும், அதன் பலன்களும் சேர்ந்தே அழிந்துவிடும். பஸ்மாமாகி விடும்.

இதில், ஞானாக்கினி என்பது தத்வ ஞானம்.

– எஸ்.பிரேமா 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

Topics

சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

உலக பிரசித்தி பெற்ற கேரளாவில் உள்ள தனித்துவம் வாய்ந்த சபரிமலை சுவாமி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Entertainment News

Popular Categories