ஆன்மீக கேள்வி பதில் – கணபதி சஹஸ்ரநாமம் கூட லலிதா சகஸ்ரநாமம் போல் ரகசியமானதா?

சஹஸ்ரநாமங்கள் அனைத்தும் ருஷிகள் அருளியவை. ஒவ்வொன்றும் சிறப்பானவையே! எந்த ஐயமும் இல்லை.

சகஸ்ரநாமம் என்ற அமைப்பில் ஒரு சிறப்பு உள்ளது. எந்த தெய்வமானாலும் உபாசனை செய்யும் போது மந்த்ரம், யந்த்ரம், விக்ரஹம் என்பவை முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. அது மட்டுமல்ல. அந்த தெய்வத்தோடு தொடர்புடைய ஞானத்தைக் கூட நாம் அறியவேண்டும். ரூபம் குணம் லீலை மகிமை தத்துவம் என்ற தெய்வ இயல்புகளான ஐந்து அம்சங்களைத் தெரிந்துகொண்டு ஆராதித்தால் பலன் அமோகம்.

இந்த ஐந்து அம்சங்களின் இயல்பை விவரித்தால் அது பல நூல்களாக விரியும். அந்த ஞானம் அனைத்தையும் ஒவ்வொரு நாமத்திலும் பொதித்து வைத்துள்ளார்கள் ரிஷிகள். ஒவ்வொரு நாமத்திற்கும் பொருள் விளக்கினால் அந்த தெய்வம் குறித்த இந்த ஐந்து அம்சங்களும் தெரியவரும்.

லலிதா ஸகஸ்ர நாமத்திற்கு ரஹஸ்ய நாமம் என்று பெயர். வேறு எந்த சகஸ்ரநாமத்திற்கும் அந்தப் பெயர் இல்லை. ரகசிய நாமம் என்றால் சொற்களுக்கு நிகண்டு அர்த்தம் கூறுவது மட்டுமேயல்ல… சாஸ்திர குறியீடுகள் மறைந்துள்ளன என்று பொருள். லலிதா சகஸ்ரநாமம் அனைத்தும் குறியீட்டு நாமங்களே! சாஸ்திர ஞானம் இல்லாவிட்டாலோ ஸ்ரீவித்யையின் சிறப்புகள் தெரியாவிட்டாலோ லலிதா சகஸ்ரநாமங்களுக்குப் பொருள் கூற இயலாது.

மீண்டும் அத்தகைய கனம் பொருந்தியது கணபதி சகஸ்ரநாமம். கணபதிக்குத் தொடர்புடைய உபாசனை ஞானம் இல்லாவிட்டால் இந்த நாமங்களுக்குப் பொருள் கூறுவது கடினம். வெறும் நிகண்டுப் பொருள், சாகித்தியப் பொருள் கூறினால் போதாது. அக்காரணத்தால்தான் இதற்குக் கூட அத்தகைய முக்கியத்துவம் காணப்படுகிறது.

ALSO READ:  தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

கணபதி சகஸ்ரநாமங்களை கவனித்தால் ஒருபுறம் மந்திர சாஸ்திரம்… மறுபுறம் அற்புதமான கவித்துவம்… இன்னொருபுறம் சாஸ்திரத் தொடர்பான மகிமை… ஒவ்வொரு அக்ஷரத்திலும் காணப்படுகிறது. எண்ணிக்கையின் வரிசைப்படி சில நாமங்கள் சிறப்பாக விளங்குகின்றன.

கணபதி சஹஸ்ரநாமங்களில் விஸ்வ ரகசியங்கள் அனைத்தும் மறைந்துள்ளன. கணபதிக்கு தொடர்புடைய திவ்ய லோகம், மந்திர விசேஷங்கள் அவற்றில் காணப்படுகின்றன.

லலிதா ஸஹஸ்ரநாம பாஷ்யம் எழுதிய பாஸ்கரராயர் கணபதி சகஸ்ரநாமத்திற்கும் “கத்யோதிநீ வ்யாக்ய” என்ற பெயரில் பாஷ்யம் எழுதி உள்ளார்.

மிகச் சிறப்பான சகஸ்ரநாமங்கள் இவை. மகிமை பொருந்தியவை. மிகவும் ஆழமான அர்த்தங்கள் கொண்டவை. சாஸ்திரத்துக்கு இருக்கும் சிறப்பு இந்த ஸ்தோத்திரத்திற்கும் உள்ளது.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 19 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

ஆடிப் பூர நாளில் நந்தவனத்தில் எழுந்தருளிய ஆண்டாள்!

ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவில் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தை முன்னிட்டு ஆண்டாள் திரு ஆடி பூர நந்தவனத்தில் எழுந்தருளல் நிகழ்வு இன்று சனிக்கிழமை விமர்சையாக நடைபெற்றது.

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் மத்திய பாஜக அரசு: நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன்!

விளையாட்டுக்கு முன்னுரிமை கொடுக்கும் கட்சி மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு-மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாரமன் பேசினார்.

உணவுப் பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள்!

உணவுப்பொருட்களை நஞ்சில்லாமல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் கடவுளுக்கு நிகரானவர்கள் உங்களை வணங்குகிறேன்-சம்பா மிளகாய் மதிப்புக்கு கூட்டப்பட்ட உற்பத்தி நிறுவனமான குளோபல் சில்லி அக்ரோ பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்தை திறந்து வைத்து

பஞ்சாங்கம் ஜூலை 18 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

திருச்சூரில் உள்ள ஸ்ரீ வடக்குநாதர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கர்கடகம் முதல் நாள் நடைபெறும் 'ஆனையூட்டு' விழா மிக பிரபலமான சமூக விழாவாகும்.

வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

‘விவேக் எக்ஸ்பிரஸ்’ போல், வாஞ்சி எக்ஸ்பிரஸ் என இந்த ரயிலுக்கு பெயர் சூட்டி தினசரி இயக்கினால், மக்கள் மத்தியில் சுதந்திரப் போராட்ட வீரரின் பெயரை நினைவூட்டுவதாகவும், நாட்டின் விடுதலைக்கு நம் தென்னகம் செய்த தியாக வரலாறு மக்கள் மனதில் பதியும் வகையிலும் அமையும்!

சுஷ்ருதர் சிலைத் திறப்பு சொல்லும் சேதி!

மாறாக அறிவை தொகுத்து அதை அடுத்தடுத்த தலைமுறைக்கு கொண்டு சென்றதன் மூலமாக வாழ்ந்தன. அறிவியல் ஆர்வம், அறிவார்ந்த ஒழுக்க நெறி ஆகியவற்றின் குறியீடாக இருக்கும் சுஷ்ருதரின் பாரம்பரியம் தொடர்ந்து உத்வேகம் அளித்து வருகிறது.

Entertainment News

Popular Categories