“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”

“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை”

“தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு”.-பெரியவாள்)

சொன்னவர்;ஸ்ரீமடம் பாலு.
தொகுத்தவர்;டிஎஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

“என் அம்மாவுக்குப் புத்தி ஸ்வாதீனம் இல்லை. வாசற்கதவைத் திறந்தபடி போட்டுவிட்டு எங்காவதுபோய் விடுகிறாள். அப்புறம் தேடிக் கண்டுபிடிக்க வேண்டியிருக்கு. வீட்டில் வேறு யாரும் இல்லை.அவளை மடத்திற்குக் கொண்டு வந்து விட்டு வைக்கலாமா?” என்று முறையிட்டார் கோபாலன் என்ற பக்தர்.

பெரியவாளிடம். “நல்லவேளை….எங்கேயாவது காட்டிற்குக் கொண்டு போய், விட்டு விடலாமா என்று கேட்காமல், என்னிடம் கொண்டு வந்து விட்டுவிடலாமா? – என்று கேட்கத் தோன்றியதே உனக்கு!”–பெரியவாள்.

“தாயார் என்பவள் தெய்வம். தாயாருக்கு மேல் தெய்வமில்லை. ஏகாதசிக்கு மேல் விரதமில்லை என்று பழமொழியே உண்டு”.-பெரியவாள். “தாயார்கள் பாடு இம்மாதிரி ஆயிடுத்து…” என்று சொல்லிக்கொண்டே உள்ளே சென்று, சிறிது நேரம் கழித்து வெளியே வந்தார்கள்.

அதற்குள் கோபாலனின் மனம் படாத பாடு பட்டுவிட்டது. பெரியவாளிடம் அபசாரப்பட்டு விட்டோமோ? அதனால், மேலும் அதிகக் கஷ்டங்கள் வருமே?-என்ற கவலையும் வந்தது.

பெரியவா திரும்பி வந்ததும் மறுபடியும் காலில் விழுந்தார் கோபாலன். “ரொம்ப மன்னிக்கணும் பெரியவா. என் தாயாரைப் பற்றி தவறுதலா சொல்லிட்டேன்” என்று கெஞ்சினார்.

பெரியவா சாந்தமாக அறிவுரை சொன்னார்கள்.

வயோதிக காலத்தில் பெற்றோர்களைக் காப்பாற்ற வேண்டியது பிள்ளைகளின் கடமை.தாய் – தந்தையர் சாபம் குடுத்தால் குடும்பம் வீணாகப் போயிடும். தனியாக உன்னால் உன் அம்மாவைக் கவனித்துக் கொள்ளமுடியவில்லைன்னா, ஒரு ஆசாமியை ஒத்தாசைக்கு வெச்சுக்கோ.”-பெரியவாள்.

“பெரியவாளின் கட்டளையை மீறமாட்டேன்” என்று கூறி பிரசாதம் பெற்றுச் சென்றார், கோபாலன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

Topics

பஞ்சாங்கம் – மார்ச் 18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

விருதுநகரில் 15.45கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்..

விருதுநகர் சூலக்கரையில் தேர்தல் பறக்கும் படையினரால் ₹14 .2கோடி மதிப்பிலான தங்க...

ஸ்ரீவில்லிபுத்தூரில் பெரிய மாரியம்மன் திருக்கோவில் பூக்குழி திருவிழா..

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் நகரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பெரிய மாரியம்மன்...

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Entertainment News

Popular Categories