அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

T T K - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலில் வரும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை பிரதமை திதியும், சுவாதி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய தினத்தில் இரவு 12.57க்கு குருபகவான் (வியாழன் பகவான்) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் பிரவேசம் செய்கின்றார் !

T T K 2 - 2026

இதை முன்னிட்டு, அக்.26ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனையும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம். ஆதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மாலை 5.00 மணிக்கு சிறப்பு மேளம், 5.30க்கு சிறப்பு அபிஷேகம், 7.00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தேவார இன்னிசை, மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5.00 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 7.00 மணிக்கு ருத்ர ஏகாதசி, இரவு 10.00 மணிக்கு சிறப்பு மேளம், இரவு 12.57க்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் ஆகியவை நடைபெறும்! தொடர்ந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் திரு நடை திறந்திருக்கும்

ALSO READ:  வேளச்சேரி - பிருங்கிமலை எம்ஆர்டிஎஸ்., ரயில் சேவை! பயணிகள் மகிழ்ச்சி!

28ஆம் தேதி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00 மணி முதல் இரவு 12.57 குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00 மணி வரையில் திரு நடை திறந்திருக்கும்.

T T K 3 - 2026

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை ஆணையர், செயல் அலுவலர், தக்கார் அன்புமணி, ஸ்ரீகாரியம் ரத்தினவேலு மற்றும் கோவில் பணியாளர்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

SENGOTTAI TNTC - 2026

புளியறை ஆலயத்துக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நகரப் பேருந்துகள், ரூட் பஸ்கள் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் நெடுஞ்சாலையில் செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

TRIAN R - 2026

திருநெல்வேலி – கொல்லம், கொல்லம் – திருநெல்வேலி, மதுரை – செங்கோட்டை, செங்கோட்டை – மதுரை, திருநெல்வேலி – செங்கோட்டை, செங்கோட்டை – திருநெல்வேலி பயணியர் இரயில் வசதி உள்ளது. ரயில்களில் ஏறி, செங்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கினால், இங்கிருந்து ஆட்டோ வசதி நிறைய உள்ளது. ஷேர் ஆட்டோக்களில் புளியறை கோயிலுக்குச் செல்லலாம்

ALSO READ:  ‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Topics

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

பஞ்சாங்கம் ஜூன் 1 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் – கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

கோடைகால சிறப்பு ரயிலாக திருவனந்தபுரம் வடக்கு - போத்தனூர் மற்றும் போத்தனூர் - திருவனந்தபுரம் சென்ட்ரல் இடையே தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

Entertainment News

Popular Categories