அக்.28ல் புளியறை தட்சிணாமூர்த்தி ஆலயத்தில் குருபெயர்ச்சி விழா!

T T K - 2026

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள புளியறை ஸ்ரீதட்சிணாமூர்த்தி கோவிலில் வரும் 28ஆம் தேதி குருபெயர்ச்சி விழா நடைபெறுகிறது.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு வரும் அக்டோபர் 28ஆம் தேதி திங்கட்கிழமை பிரதமை திதியும், சுவாதி நட்சத்திரமும், அமிர்த யோகமும் கூடிய தினத்தில் இரவு 12.57க்கு குருபகவான் (வியாழன் பகவான்) விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குள் பிரவேசம் செய்கின்றார் !

T T K 2 - 2026

இதை முன்னிட்டு, அக்.26ஆம் தேதி சனிக்கிழமை காலை 6.00 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம், தீபாராதனையும் 27ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணிக்கு மகா கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், சுதர்சன ஹோமம். ஆதனைத் தொடர்ந்து மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மாலை 5.00 மணிக்கு சிறப்பு மேளம், 5.30க்கு சிறப்பு அபிஷேகம், 7.00 மணிக்கு சகஸ்ரநாம அர்ச்சனை ஆகியவை நடைபெறுகிறது.

28ஆம் தேதி திங்கட்கிழமை காலை 10.00 மணிக்கு தேவார இன்னிசை, மதியம் 12.00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், மாலை 5.00 மணிக்கு நாம சங்கீர்த்தனம், 7.00 மணிக்கு ருத்ர ஏகாதசி, இரவு 10.00 மணிக்கு சிறப்பு மேளம், இரவு 12.57க்கு குருபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு பிரவேசம் ஆகியவை நடைபெறும்! தொடர்ந்து குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடைபெறும்.

குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு 27, 28 ஆகிய தேதிகளில் அதிகாலை 5.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரையிலும், மாலை 4.30 மணியிலிருந்து இரவு 8.30 மணி வரையிலும் திரு நடை திறந்திருக்கும்

28ஆம் தேதி குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு அதிகாலை 3.00 மணி முதல் இரவு 12.57 குரு பெயர்ச்சி சிறப்பு அபிஷேகம் தீபாராதனைக்கும் பின்பும் 3.00 மணி வரையில் திரு நடை திறந்திருக்கும்.

T T K 3 - 2026

இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட இணை ஆணையர், செயல் அலுவலர், தக்கார் அன்புமணி, ஸ்ரீகாரியம் ரத்தினவேலு மற்றும் கோவில் பணியாளர்கள் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

SENGOTTAI TNTC - 2026

புளியறை ஆலயத்துக்குச் செல்வதற்கு சிறப்பு பேருந்து வசதிகள் செய்யப் பட்டுள்ளன. தென்காசி, செங்கோட்டை ஆகிய பகுதிகளில் இருந்து நகரப் பேருந்துகள், ரூட் பஸ்கள் உள்ளன.

திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டை கொல்லம் நெடுஞ்சாலையில் செங்கோட்டையிலிருந்து சுமார் 8 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

TRIAN R - 2026

திருநெல்வேலி – கொல்லம், கொல்லம் – திருநெல்வேலி, மதுரை – செங்கோட்டை, செங்கோட்டை – மதுரை, திருநெல்வேலி – செங்கோட்டை, செங்கோட்டை – திருநெல்வேலி பயணியர் இரயில் வசதி உள்ளது. ரயில்களில் ஏறி, செங்கோட்டை ரயில் நிலையத்தில் இறங்கினால், இங்கிருந்து ஆட்டோ வசதி நிறைய உள்ளது. ஷேர் ஆட்டோக்களில் புளியறை கோயிலுக்குச் செல்லலாம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories