December 6, 2025, 3:53 AM
24.9 C
Chennai

பாடி – திருவலிதாயம் ஆலயத்தில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை!

padi thiruvalidhayam guru temple - 2025

குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் நாளை மறுநாளிலிருந்து 31ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

சென்னை குரு தலம் என்று போற்றப் படுகிறது திருவலிதாயம் – பாடி! குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம் நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார்.

அதன்படி திருவலிதாயம் வந்த குரு பகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். அதனால், இந்த தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.

guru bhagavan thiruvalidhayam1 - 2025

இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.

சென்னை -பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து நாளை மறுநாள் அதிகாலை 3.48க்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை முன்னிட்டு இந்தக் கோவிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் தொடங்கி 31-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது

guru bhagavan thiruvalidhayam - 2025

காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை, மாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஒருவருக்கு 400 ரூபாய் கட்டணம்.

வரும் 31ம் தேதி குரு பரிகார ஹோமம் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories