பாடி – திருவலிதாயம் ஆலயத்தில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை!

செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Published:

padi thiruvalidhayam guru temple - 2026

குருபெயர்ச்சியை முன்னிட்டு சென்னை பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் திருக்கோயில் நாளை மறுநாளிலிருந்து 31ம் தேதி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது .

சென்னை குரு தலம் என்று போற்றப் படுகிறது திருவலிதாயம் – பாடி! குருபகவான் தான் செய்த தவறால் தனது தமையனின் மனைவி மேனகையின் சாபம் பெற்றார். அவரைச் சந்தித்த மார்க்கண்டேய மகரிஷி, இந்தத் தலத்தில் உறையும் சிவபெருமானை வணங்கினால் பாவம் நீங்கி, அவருக்கு சாபவிமோசனம் கிட்டும் என்று அருளினார்.

அதன்படி திருவலிதாயம் வந்த குரு பகவான், இங்குள்ள புனித தீர்த்தத்தில் நீராடி, சுவாமியை வணங்கி அருள் பெற்றார். அதனால், இந்த தீர்த்தத்தில் நீராடி சுவாமியை வணங்கினால் தோஷங்கள் நீங்கும் என்பதும், தலத்து தட்சிணாமூர்த்தியை வணங்கினால் பாவங்கள் விலகும் என்பதும் நம்பிக்கை.

guru bhagavan thiruvalidhayam1 - 2026

இந்தத் தலத்தில் குருபெயர்ச்சி விழா சிறப்பாக நடைபெறுகிறது. இறைவனை வணங்கினால் திருமணத்தடை, நோய்கள் போன்றவை நீங்கும் என்றும், தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி வணங்கிட, ஞானம் கிடைக்கும் என்பதும் நம்பிக்கை.சென்னை, பாரிமுனை, கோயம்பேடு, தாம்பரம் ஆகிய இடங்களில் இருந்து பேருந்து வசதி நிறைய உள்ளன.

சென்னை -பாடி திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் கோவில் தொண்டை நாட்டு பாடல் பெற்ற 32 சிவத் தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. குரு பகவான் விருச்சிக ராசியிலிருந்து நாளை மறுநாள் அதிகாலை 3.48க்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். இதை முன்னிட்டு இந்தக் கோவிலில் குருபெயர்ச்சி லட்சார்ச்சனை நிகழ்ச்சிகள் நாளை மறுநாள் தொடங்கி 31-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறுகிறது

ALSO READ:  கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!
guru bhagavan thiruvalidhayam - 2026

காலை 8 மணிக்கு தொடங்கி மதியம் ஒரு மணி வரை, மாலை 4 மணி தொடங்கி இரவு 8 மணி வரை லட்சார்ச்சனை நடைபெறுகிறது. ஒருவருக்கு 400 ரூபாய் கட்டணம்.

வரும் 31ம் தேதி குரு பரிகார ஹோமம் காலை 8 மணி முதல் மதியம் ஒரு மணி வரையும் மாலை 4 மணி முதல் 8 மணி வரையும் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு ஆயிரம் ரூபாய் கட்டணம் என கோயில் நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்!

Related articles

Recent articles

spot_img