ஸ்ரீ சூக்தம் மந்திரம் அர்த்தம் விளக்கம்

Mahalakshmi Goddess of wealth - 2026

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

ஜாத வேத -எல்லாவற்றையும் அறியும் அக்னி தேவனே, ஹிரண்யவர்ணாம் -பொன் நிறத்தவளும்.
ஹரிணீம் -பாவங்களைப் போக்குபவளும் ,
ஸ்வர்ண ரதஸ்ரஜாம்-தங்கம் மற்றும் வெள்ளி மாலைகளை அணிந்தவளும் ,
சந்த்ராம்- நிலவு போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்னே உருவானவளும்,
லக்ஷ்மீம் -லக்ஷ்மி என்று அழைக்கப்படும் திரு மகளை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்—1

வெள்ளி மாலைகளை அணிந்தவளும் நிலவு போன்றவளும் ,
பொன்மயமானளும் ஆன மகாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||2

ஜாதவேத -அக்னியே ,
அஹம் -நான் ,
ஹிரண்யம் -பொன்னையும் ,
காம் -பசுக்களையும் ,
அஸ்வ -குதிரைகளையும் ,
புருஷான் -உறவினரையும் ,
விந்தேயம் -பெறுவேனோ ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -அந்த மகாலக்ஷ்மியயை,
யஸ்யாம் அனபகாமிநீம் -என்னிடமிருந்து விலகாதிருப்பவளை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்வாய்… .2

அக்னி தேவனே,,
யாருடைய அருளால் ,நான் பொன்னையும் பசுக்களையும், குதிரைகளையும் மற்றும் உறவினரையும் பெறுவேனோ,
அந்த மஹாலக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்வாய்.
அவளை என்னிடமிருந்து விலகாதிருக்கச் செய்வாயாக.

அஸ்வ பூர்வாம் -முன்னால் குதிரைகளும் ,
ரத மத்யாம் -நடுவில் ரதங்களும் ,
ஹச்திநாத ப்ரபோதிநீம் -களிறுகளின் பிளிறல்களை தனது அறிகுறியாகக் கொண்டவளுமான ,
ஸ்ரியம் தேவீம் -மனதிற்கு உகந்தவளுமான ஸ்ரீ தேவியை , உபஹ்வையே -அழைக்கிறேன் .

ஸ்ரீ தேவி -செல்வத்தின் உறைவிடமான திருமகளே ,
மா ஜுஷதாம் -என்னிடம் இன்புற்று உறைவாய் .

முன்னால் குதிரைகள் ,நடுவில் தேர்கள் புடைசூழ வருபவளும் ,யானைகளின் பிளிறலை தன வரவின் முன்னோடியாகக் கொண்டவளும்மான ,மனதிற்கு உகந்த செல்வத்தின் தலைவியாகிய திருமகளை அழைக்கின்றேன் .
திருமகளே !
நீ என்னிடம் மகிழ்ந்து உறைவாயாக .

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||….4

ஸ்மிதாம் -புன்முறுவல் தவழ்பவளும் ,
ஹிரண்யப் ப்ராகாராம் -பொன் மயமான கோட்டையில் உறைபவளும் ,
ஆர்த்ராம் -கருணை நிறைந்தவளும் ,
ஜ்வலந்தீம் -ஒழி வீசுபவளும் ,
த்ருப்தாம் -மன நிறைவுடயளும் ,
தர்பப்பயந்தீம் -தன்னைத் துதிப்போர்க்கு மகிழ்ச்சியை அருளுபவளும்,
பத்மே -தாமரையில் ,
ஸ்திதாம் -நிலை பெற்றவளும் ,
பத்ம வர்ணாம் -தாமரை நிறத்தவளும்,
காம் -யாரோ ,
தாம் ஸ்ரியம் -அந்த மனத்திருக்கு உகந்த லக்ஷ்மியை, திருமகளை,
இஹ -இங்கே,
உபஹ்வையே–வேண்டுகின்றேன்.

குறுநகை தவழ்பவளும் ,பொன் மயமான கோட்டையில் உறைபவளும் , கருணை நிறைந்து ததும்புவளும், ஒளி நிறைந்தவளும் ,
மகிழ்ச்சி நிறைந்தவளும் ,மகிழ்ச்சியைத் தருபவளும், தாமரையில் வீற்றிருப்பவளும் தாமரை நிறத்தவளுமான அந்தத் திருமகளை இங்கே எழுந்தருளுமாறு இறைஞ்சுகின்றேன் .

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

லோகே -உலக வாழ் உயிர்களுக்கு ,
சந்த்ராம் -குளிர்ச்சி வழங்குவதில் நிலவைப் போன்றவளும் ,
பிரபாஸாம் -சிதறும் ஒளி மிக்கவளும் ,
யசஸா -தன மகிமையால்,
ஜ்வலந்தீம் -சுடர் விட்டு ஒளிர்பவளும் ,
தேவ ஜுஷ்டாம் -தேவர்காளால் வழிபடப்படுபவளும்,
உதாராம் -கழிவிரக்கம் நிறைந்தவளும் ,
பத்மிநீம் -தாமரையைத் தாங்கியவளும்,
ஈம் -ஈம் என்னும் பீஜ மந்திரத்தின் பொருளாகத் திகழ்பவளும்,
ஆன,
தாம் ஸ்ரியம் -அந்த மனதிற்குகந்த மகலக்ஷ்மியை ,
அஹம் -நான் ,
சரணம் ப்ரபத்யே -அடைக்கலம் புகுகிறேன் .
த்வாம் -உன்னை ,
வ்ருணே -வேண்டுகிறேன்.
மே -என்னிடமிருந்து ,
அலக்ஷ்மி -வறுமை,
நச்யதாம் – அழியட்டும் .

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

நிலவைப் போன்றவளும் ,ஒளிநிரைந்தவளும் , சுடர்விட்டு ஒளிர்பவளும் ,தேவர்களால் வழிபடப் படுபவளும் கருணை மிக்கவளும் ,தாமரையைத் தாங்கியவளும் ,ஈம் என்னும் பீஜ மந்திரந்தின் பொருளாக உள்ளவளும் ஆகிய அந்த மகாலக்ஷ்மியை நான் சரணடைகிறேன்.

தேவியே!
என் வறுமை விலகி அழிய அருள்வாய் .

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீ ||

ஆதித்யவ’ர்ணே – சூரியனின் நிறத்தவளே ,
தவ-உனது ,
தபசக -தவத்தால் ,
வனஸ்பதி ‘கானகங்களுக்குத் தலைவனாகிய ,
பில்வக வ்ருக்ஷ -வில்வ மரம் ,
அதிஜாதக -உண்டாயிற்று .
அத -அதே போல் ,
தபஸா -தவத்தால்,
தஸ்ய -அதன்,
பலானி -பலத்தால், விளைவாக, பழங்கள் ,
மாயா -அறியாமை ஆகிய ,-
அந்தராயாக -எனது உள்ளத்தில் உள்ள அகத்தடயையும் ,
அ’லக்ஷ்மீஃ -அமங்கலமாகிய .
பாஹ்யா -புறத்தடயையும்,
நுதந்து -அழிக்கட்டும்.

கதிரவன் நிறத்தவளே ,காட்டிற்குத் தலைவனான வில்வ மரம் உன் தவத்தால் உண்டாயிற்று .
அதன் பழங்கள் அறியாமையாகிய அகத்தடயையும், அமங்கலமாகிய புறத்தடையையும் உன் தவத்தாலே அழிக்க்கட்டும் .

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||
7

தேவஸகஃ’குபேரனும் ,
கீர்திச்ச -புகழின் தேவனும் ,
மணின சஹ -என்னை நாடி வர வேண்டும் .
அஸ்மின் -இந்த ,
ராஷ்ட்ரே‌-நாட்டில் ,
ப்ராதுர் பூத அஸ்மின் -பிறந்திருக்கிறேன் .
மே -எனக்கு ,
கீர்த்திம்- பெருமையும் ,
ரிதிம் -செல்வமும் ,
ததாது வழங்குவாய் .

செல்வதிர்க்குத் தலைவனான குபேரனும் புகழின் தேவனும் என்னை நாடி வர நீண்டும்.
உனது அருளும் கருணையும் நிறைந்த இந்த நாட்டில் பிறந்திருக்கிறேன் .
நீ எனக்குப் பெருமையும் செல்வமும் தருவாய் .

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் || 8

க்ஷுத்பி’பாஸாம’லாம் -பசியினாலும் தாகத்தினாலும் இளைத்தவளும் ,
ஜ்யேஷ்டாம-( உனக்கு மூத்தவளும் ), முன்னால் பிறந்தவளுமான ,
அலக்ஷ்மீம் -செல்வதிலிருந்து விலகிய மூதேவியை ,
அஹம் -நான் ,
மீ க்ருஹாத் -எனது இல்லத்திலிருந்து
நாசயாமி -விலக்குகிறேன் .
சர்வாம் -எல்லா ,
அபூதிம் -ஏழ்மையையும் ,
அசம்ருத்திம் ச -வறுமையையும் ,
நிர்ணுத -அகற்றி அருளுக .
பசி தாகத்தினால் மெலிந்தவளும் ,லக்ஷ்மிக்கு முன்னால் பிறந்தவளுமான மூதேவியை நான் விளக்குகிறேன் .
எனது இல்லத்திலிருந்து அனைத்து எழ்மைகளையும் வறுமைகளையும் அகற்றி அருள்வாய் .

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||…9

கம்தத்வாராம்-நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,
துராதர்ஷாம் -வெல்லவே முடியாதவளும் ,
நித்ய புஷ்டாம் -நிதமும் வலிமையை தருபவளும் ,
கரீஷிணீம் அனைத்தும் நிறைந்தவளும் ,
சர்வ பூதானாம் -எல்லா உயிர்களுக்கும் ,
ஈஸ்வரீம் -தலைவியும் ஆன ,
தாம் ஸ்ரியம் -அந்த மகாலக்ஷ்மியை ,
இஹ -இங்கே ,
உபஹ்வையே–எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன் .
நறுமணத்தின் இருப்பிடமானவளும் ,எவராலும் வெல்லப்பட முடியாதவளும் , என்றும் இனிமையைத் தருபவளும்,
அனைத்தும் நிறைந்தவளும் ,அனைத்து உயிர்களின் தலைவியுமான, மகாலக்ஷ்மியை இங்கே எழுந்தருளப் பிரார்த்திக்கிறேன்

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||..10.

ஸ்ரீ -திருமகளே !,
மனசஹ -மனத்தில் எழும் ,
காமம் -ஆசைகளையும் ,
ஆகூதிம் -தருமத்திற்கு முரணாகாத ஆசைகளையும், மகிழ்ச்சிகளையும் ,
வாக்-வாக்கில் ,
சத்யம் -உணமையையும் ,
பசூனாம் -பசுக்களாலும் ,
அன்னச்ய -உணவினாலும் ,
அசீமகி ,-அனுபவிக்க வேண்டும் .
மயி -எனக்கு ,
கீர்த்தி -பெருமை ,
ஸ்ரயதாம் -உண்டாகட்டும் .
திருமகளே !
தருமத்திற்குப் புறம்பாகாத எனது நல்ல ஆசைகளையும், மகிழ்ச்சியையும் ,வாக்கில் உண்மையையும்,
பசுக்களின் மற்றும் உணவின் நிறைவால் ,ஏற்படுகின்ற இன்பத்தை நான் நுகர வேண்டும் .
எனக்கு புகழ் உண்டாகட்டும் .

ALSO READ:  குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||..11

கர்தமே’ன. கர்த்தமரே (கர்தம முனிவரே ),
கர்தமேன -உமக்கு (கர்த்தமராகிய )
பிரஜா பூதா -மகளாய்ப் பிறந்த மகாலக்ஷ்மி ,
மயி -எனக்கு ,என்னிடம்,
சம்பவ -தோன்ற வேண்டும் .
பத்ம மாலினீம் -தாமரைப்பூக்களினால் ஆன மாலை அணிந்தவளும் ,
ஸ்ரியம் -செல்வத்திற்கு தலைவியுமான ,
மாதாம் -அன்னையும்
மே -என் ,
குலே- என் குலத்தில் ,
வாசய -தங்கச் செய்ய வேண்டும் .
கர்த்தமரே !
உமது மகளான லக்ஷ்மி என்னிடம் வர வேண்டும் .
தாமரை மாலை அணிந்தவளும் ,செல்வத்தின் தலைவியும் அன்னயுமாகிய அவளை என் குலத்தில் தங்கச் செய்ய வேண்டும்.

சிக்லீத -சிக்லீதரே (முனிவர்,லக்ஷ்மியின் மகன் )|
ஆபஹ -தண்ணீர் ,
ச்னிக்தானி ;சிறந்த உணவுப் பொருள்களை ,.
ஸ்ருஜந்து -விளைவிக்கட்டும் .
மே -எனது ,
க்ருஹே -எனது இல்லத்தில் ,
வசஹ -வசிக்க வேண்டும் .
ச -மேலும் ,
தேவீம் -தேவியும் ,
மாதரம் -உலகிற்கு அன்னையும் ஆன ,
ஸ்ரியம் -உங்கள் தாயாகிய திருமகளை ,
மே -என் .
குலே -குலத்தில் ,
நிவாசய – எப்போழ்தும் வாழும்படி அருள வேண்டும் .
லக்ஷ்மியின் மகனான சிக்லீதரே !
நீர் சிறந்த உணவுப் பொருள்களை விளைவிக்கட்டும் .
நீங்கள் என் இல்லத்தில் வசிக்க வேண்டும் .
தேவியும் உங்கள் அன்னையுமான மகாலக்ஷ்மியை என் குலத்தில் நிலைத்து வாழ அருள வேண்டும் .

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
…13.

ஜாத வேத -அக்னியே !,
ஆர்த்ராம் -கருணை நிரம்பிய மனமுடயவளும் ,
புஷ்கரிணீம் -தாமரை மலர்கள் நிரம்பிய தடாகத்தில் வசிப்பவளும் ,
புஷ்டிம்-உணவூட்டி அனைவரையும் வளர்ப்பவளும் ,
பிங்கலாம் -குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,
பத்ம மாலீநீம் -தாமரை மாலை அணிந்தவளும் ,
சந்திராம் -நிலவைப் போன்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன்மயமானவளுமான ,
லக்ஷ்மீம் -மகா லக்ஷ்மியை ,
மே -என்னிடம் ,
ஆவஹ -எழுந்தருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !

கருணை நிரம்பிய மனதை உடையவளும் ,தாமரை மலரில் உறைபவளும் , உலகை ஊட்டி வளர்ப்பவளும்,
குங்குமத்தின் நிறத்தை உடையவளும் ,தாமை மாலை அணிபவளும் ,பொன் மயமானவளுமான திருமகளை ,
என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||..14

ஜாத வேத -அக்னியே !,
ய-யார் ,
ஆர்த்ராம் -கருனைநிரம்பிய மனத்தவளும் ,
கரிணீம் -செயல் திறத்தில் கம்பீரமானவளும் ,
யஷ்டீம் -தருமத்தை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,
சுவர்ணாம் -உருக்கிய பசும்பொன் நிறத்தை உடையவளும் ,
ஹேம மாலீனினீம் -பொன் மாலை அணிந்தவளும் ,
சூர்யாம் -பகலவன் போல் பிரகாசிக்கின்றவளும் ,
ஹிரண்மயீம் -பொன் மயமானவளும் ,
ஆன ,
லக்ஷ்மீம் -மகாலக்ஷ்மீயை ,
மே -என்னிடம்,
ஆவஹ -எழுந்து அருளச் செய்ய வேண்டும்.
அக்னியே !

கருணை நிரம்பியவளும் ,செயல் திறத்தில் கம்பீரமானவளும் , நீதியை நிலை நிறுத்த செங்கோல் ஏந்தியவளும் ,அழகிய நிறத்தை உடையவளும் ,பகலவன் போல் பிரகாசிப்பவளும் ,பொன் மயமான லக்ஷ்மியை என்னிடம் எழுந்தருளச் செய்ய வேண்டும் .

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||..14.

ஜாத வேத -அக்னியே !,
யஸ்யாம் -யாரால் ,
பிரபூதம் -அளவிட முடியா ,
ஹிரண்யம் -பொன்னும் ,
காவஹ -பசுக்களும் ,
தாஸ்ய -பணிப் பெண்டிரும் ,
அஸ்வான் -குதிரைகளும் ,
புருஷான் -பணியாட்களும் ,
அஹம் -நான் ,
விந்தேயம்-பெறுவேனோ,
தாம் -அந்த ,
லக்ஷ்மீம் -திருமகளை ,
மே அனபகாமீநீம் -என்னிடமிருந்து விலகாதிற்குமாறு ,
ஆவஹ -செய்தருள வேண்டும் .
அக்னி தேவனே !
யாரால் அளவிட முடியாத பொன்னும் , பசுக்களும் ,பணிப் பெண்டிரும் ,குதிரைகளும் மற்றும் பணியாட்களையும் நான் பெறுவேனோ ,அந்த திருமகள் ,என்னை விட்டு விலகாதிருக்க அருள வேண்டும் .

ALSO READ:  அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

மஹா லக்ஷ்மியை அறிந்து கொள்வோம் ,
திருமாலின் துணைவியாம் அவளை த்யாநிப்போம் ,
அந்தத் திருமகள் நம்மைத் தூண்டுவாளாக .
ய சுசி ..
..
இதனின்று பலஸ்ருதி ,
ஆகவே பொருள் இங்கு தரப்படவில்லை.

ஓம் || ஹிர’ண்யவர்ணாம் ஹரி’ணீம் ஸுவர்ண’ரஜதஸ்ர’ஜாம் | சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||
தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷ்மீமன’பகாமினீ”ம் |

யஸ்யாம் ஹிர’ண்யம் விம்தேயம் காமஶ்வம் புரு’ஷானஹம் ||
அஶ்வபூர்வாம் ர’தமத்யாம் ஹஸ்தினா”த-ப்ரபோதி’னீம் |
ஶ்ரியம்’ தேவீமுப’ஹ்வயே ஶ்ரீர்மா தேவீர்ஜு’ஷதாம் ||

காம் ஸோ”ஸ்மிதாம் ஹிர’ண்யப்ராகாரா’மார்த்ராம் ஜ்வலம்’தீம் த்றுப்தாம் தர்பயம்’தீம் |
பத்மே ஸ்திதாம் பத்மவ’ர்ணாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

சம்த்ராம் ப்ர’பாஸாம் யஶஸா ஜ்வலம்’தீம் ஶ்ரியம்’ லோகே தேவஜு’ஷ்டாமுதாராம் |
தாம் பத்மினீ’மீம் ஶர’ணமஹம் ப்ரப’த்யே‌உலக்ஷ்மீர்மே’ னஶ்யதாம் த்வாம் வ்று’ணே ||

ஆதித்யவ’ர்ணே தபஸோ‌உதி’ஜாதோ வனஸ்பதிஸ்தவ’ வ்றுக்ஷோ‌உத பில்வஃ |
தஸ்ய பலா’னி தபஸானு’தம்து மாயாம்த’ராயாஶ்ச’ பாஹ்யா அ’லக்ஷ்மீஃ ||

உபைது மாம் தேவஸகஃ கீர்திஶ்ச மணி’னா ஸஹ |
ப்ராதுர்பூதோ‌உஸ்மி’ ராஷ்ட்ரே‌உஸ்மின் கீர்திம்று’த்திம் ததாது’ மே ||

க்ஷுத்பி’பாஸாம’லாம் ஜ்யேஷ்டாம’லக்ஷீம் னா’ஶயாம்யஹம் |
அபூ’திமஸ’ம்றுத்திம் ச ஸர்வாம் னிர்ணு’த மே க்றுஹாத் ||

கம்தத்வாராம் து’ராதர்ஷாம் னித்யபு’ஷ்டாம் கரீஷிணீ”ம் |
ஈஶ்வரீக்ம்’ ஸர்வ’பூதானாம் தாமிஹோப’ஹ்வயே ஶ்ரியம் ||

மன’ஸஃ காமமாகூதிம் வாசஃ ஸத்யம’ஶீமஹி |
பஶூனாம் ரூபமன்ய’ஸ்ய மயி ஶ்ரீஃ ஶ்ர’யதாம் யஶஃ’ ||

கர்தமே’ன ப்ர’ஜாபூதா மயி ஸம்ப’வ கர்தம |
ஶ்ரியம்’ வாஸய’ மே குலே மாதரம்’ பத்மமாலி’னீம் ||

ஆபஃ’ ஸ்றுஜம்து’ ஸ்னிக்தானி சிக்லீத வ’ஸ மே க்றுஹே |
னி ச’ தேவீம் மாதரம் ஶ்ரியம்’ வாஸய’ மே குலே ||

ஆர்த்ராம் புஷ்கரி’ணீம் புஷ்டிம் ஸுவர்ணாம் ஹே’மமாலினீம் |
ஸூர்யாம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

ஆர்த்ராம் யஃ கரி’ணீம் யஷ்டிம் பிம்கலாம் ப’த்மமாலினீம் |
சம்த்ராம் ஹிரண்ம’யீம் லக்ஷ்மீம் ஜாத’வேதோ ம ஆவ’ஹ ||

தாம் ம ஆவ’ஹ ஜாத’வேதோ லக்ஷீமன’பகாமினீ”ம் |
யஸ்யாம் ஹிர’ண்யம் ப்ரபூ’தம் காவோ’ தாஸ்யோ‌உஶ்வா”ன், விம்தேயம் புரு’ஷானஹம் ||

ஓம் மஹாதேவ்யை ச’ வித்மஹே’ விஷ்ணுபத்னீ ச’ தீமஹி | தன்னோ’ லக்ஷ்மீஃ ப்ரசோதயா”த் ||

ஶ்ரீ-ர்வர்ச’ஸ்வ-மாயு’ஷ்ய-மாரோ”க்யமாவீ’தாத் பவ’மானம் மஹீயதே” | தான்யம் தனம் பஶும் பஹுபு’த்ரலாபம் ஶதஸம்”வத்ஸரம் தீர்கமாயுஃ’ ||

ஓம் ஶாம்திஃ ஶாம்திஃ ஶாம்திஃ’ ||

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

Topics

பஞ்சாங்கம் – மே 27 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

சாவர்க்கரும் ஜனநாயகமும்

சாவர்க்கரை தூற்றும் கம்யூனிஸ்ட்களும் மம்தா பானர்ஜியும் அவரது புரட்சிகர வன்முறை பாதையை பின்பற்றுகிறார்கள். சாவர்க்கரை போற்றும் பாஜக வன்முறை வழியை தவிர்த்து விட்டு ஜனநாயக வழியில் பயணித்து வாகை சூடுகிறது. இது முரணாக இல்லையா ? யார் சாவர்க்கரை பின்பற்றுகிறார்கள் ?

பஞ்சாங்கம் மே 26 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Entertainment News

Popular Categories