ஆன்மிக சரித்திரம்: வரதன் வந்த கதை (பகுதி – 3)

varadharajaperumal - 2026

தேவகுரு ப்ருஹஸ்பதி !!

” ப்ருஹதீ வாக் தஸ்யா : பதி :” (ப்ருஹதீ = வாக்குகள் ) என்கிறபடியே “வாக்குகளுக்குத் தலைவர்” என்று புகழப்படுகிறார் . ஆகச்சிறந்த பண்டிதர்களுக்குள்ளே சிறந்தவர் இவர் !

” புரோதஸாம் ச முக்யாம் மாம் வித்தி பார்த்த ப்ருஹஸ்பதிம் ” ( கீதை 10-24 )

( புரோஹிதர்களுக்குள்ளே தேவர்களுக்கு குருவான வாக்குகளை தன் வசத்திலுடையவரான ப்ருஹஸ்பதி ஆகிறேன் நான் ! ( ப்ருஹதாம் பதி : கிராம் பதிர்ஹ்யஸௌ – தாத்பர்ய சந்த்ரிகையில் தேசிகன் ) என்றான் கண்ணனும் !

“புரோஹிதர்” என்றால் நம் நன்மையை ( நமக்கும் ) முன்னாலேயே உத்தேசித்துச் செயல்படுபவர் என்றே பொருள் !

ஆம் ! தேவர்களின் நன்மைக்காக பாடுபடுபவர் புரோஹிதரான ப்ருஹஸ்பதி !

அவர் தான் தேவர்களையும் , ரிஷிகளையும் மற்றும் முனிவர்களையும் அழைத்துக் கொண்டு ஸத்யலோகம் வந்துள்ளார் !

அனைவரும் ஒரு பிரச்சினையையும் சுமந்து வந்துள்ளது சேவகன் மூலமாக பிரமனுக்கு உணர்த்தப்பட்டது !

என்ன கலகம் என்று நான்முகன் கேட்கவும் சேவகன் சொன்னது இது தான் !

சிற்சில யாகங்களில் , ப்ராணிகளைப் பலியிட வேண்டிய கட்டளைகள் உண்டு .
ஆடு, வெள்ளாடு , குதிரை இவற்றின் வபை ( சதை ) மற்றும் மாம்ஸங்களைக் கொண்டு ( சில வகை ) யாகங்கள் செய்யப்பட வேண்டும் என்று சாத்திரங்கள் விதிக்கின்றன !

யாகத்திற்காக அழைத்து வரப்படும் அந்தப் பிராணிகளை ” யாகப்பசு ” என்றே அழைப்பர்கள் ! ( பசு என்றால் பசு மாடு என்று பொருளல்ல ! மிருகம் என்றே பொருள் )

உதாரணமாக , கல்ப சூத்திரங்களின் படி அச்வமேத யாகத்தில் , மூன்று தினங்கள் முக்யமானவையாம் .

சதுஷ்டோமம், உக்த்யம், அதிராத்ரம் போன்ற வேள்விகள் அம் மூன்று நாள்களில் விதிப்படிச் செய்யப்பட வேண்டும் !

மேலும் ஜ்யோதிஷ்டோமம் முதலான பற்பல வேள்விகளைச் செய்ய வேண்டும்.

அவற்றில் குதிரையின் உள் அவயவத்தை ( உடல் உள் உறுப்புகள் ) ஆஹுதியாக வேள்வியில் சேர்க்க வேண்டும் என்றெல்லாம் நியமங்கள் உண்டு !

பிரச்சினை இது தான் !!

ரிஷி முனிவர்களில் சிலர் , அவ்வகை வேள்விகளில் உண்மையான ம்ருகத்தை பலியிடத் தேவையில்லை ; அதற்கு பதில் பிஷ்ட பசு ( = மாவினால் ஒரு ம்ருகத்தை ) ( ஆடு, குதிரை ) செய்து அதனையே வேள்விகளில் சேர்க்கலாம் என்றனர் !

தேவர்களோ , இல்லையில்லை உண்மையான ம்ருகத்தினைக் கொண்டே யாகங்கள் நிறைவேற்றப் பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தனர் !

இதுவே சண்டைக்கான காரணம் ! தற்சமயம் பிரமன் தலையில்(களில் ) விழுந்திருக்கிறது . தேவ குரு ப்ருஹஸ்பதியோ அக்கினிப் பிழம்பாகத் திகழ்கிறார் .. நியாயம் கேட்டு வந்திருக்கிறார் !

அவர் பார்வையே பிரமனை பயமுறுத்துகிறது !

பிரமன் தன்னுள் எண்ணலானான்.. வாக்குகளுக்குத் தலைவி ( வாக் தேவி – ஸரஸ்வதி ) சற்று முன்பு தான் கோபித்துக் கொண்டு வெளி நடப்பு செய்தாள் !

இப்போது வாக்குகளுக்குத் தலைவர் ( ப்ருஹஸ்பதி ) கோபத்தோடு வந்திருக்கிறார் ! தாயும் மனைவியும் ஒரே நேரத்தில் கடுங்கோபம் கொண்டால் ஒருவன் எப்படிக் கலங்கிப் போகிறானோ அப்படித் தவித்தான் பிரமன் ! கைகளைப் பிசைந்தான்..

சரி ..ப்ருஹஸ்பதி தான் கோபமாயிருக்கிறார் .. மற்ற ரிஷி முனிவர்கள் ?? அவர்களைப் பார்த்தால் ப்ருஹஸ்பதியின் கோபமே தேவலை போலும் !!

நிஜமான ம்ருகமா ? மாவினால் ஆன ம்ருகமா ?? இந்த நீயா நானாவில் நிலை குலைந்து போனான் அஜன் !

கடைசியில் , தேவர்கள் நம் சாதி தானே ! எனவே அவர்களையும் ப்ருஹஸ்பதியையும் பின்பு சமாளித்துக் கொள்ளலாம் என்றெண்ணினானோ என்னவோ ; மாவினால் ஆன பிஷ்ட பசுவினால் வேள்வி செய்வதே நலம் என்று தீர்ப்பளித்து விட்டான் !

” ரிஷி முனிவர்கள் , ” நாவலிட்டுழி தருகின்றோம் “தேவர் தம்” தலைகள் மீதே ” என்று சந்தோஷத்தால் ஆரவாரம் செய்யத் தொடங்கினர்..

தேவர்களோ பிரமனுக்குச் சாபம் கொடுக்க வேண்டி ஸபை கூட்டினர் !!

என்ன சாபம் ?!

விரைவில் ….
எழுத்து: ஸ்ரீ உ.வே அக்காரக்கனி ஸ்ரீநிதி

குறிப்பு: இந்தத் தொகுப்பு விரைவில் நூலாக்கம் பெறுவதால், இதனை அச்சுக்கு எடுத்துக் கையாள வேண்டாமே!

Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami With his Thiruttagappanaar (in the framed photo )
Sri U.Ve Thirumalai Ananthan Pillai Akkarakkani Srinidhi Swami
With his Thiruttagappanaar (in the framed photo )

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories