வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)

(எல்லோர் உள்ளத்தையும் …ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கடுமையான கோடை  காலம்.

சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க  பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். நல்ல தாகம். தரிசனம் செய்ய வேண்டும் என்ற பேராவலில் தாகத்தைப் பொருட்படுத்தாமல் வந்திருந்தார்கள்.

பெரியவா ஒரு சிஷ்யரிடம்  அவர்களுக்குக் காசி வில்வப்பழ ரசம் கொடுக்கச் சொன்னார்கள். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்! பெரியவாளின் கருணையை எண்ணி மனம் குளிர்ந்தார்கள்.

உடனே பெரியவா, தனக்கு விசிறிக் கொண்டிருந்த சிஷ்யரைக் கூப்பிட்டு, அதே பனை விசிறியால்  அந்த பக்தர்களுக்கும் விசிறச் சொன்னார்கள்.

திடுக்கிட்டுப் போன அவர்கள்,”அபசாரம்,அபசாரம்….பெரியவாளுக்கு உபயோகப்படுத்துகிற அதே விசிறியால், எங்களுக்கு  விசிறக் கூடாது. நாங்கள் சாதாரண ஜனங்கள்”என்று ஒரு குரலாகப் பிரார்த்திக் கொண்டார்கள்.

பெரியவா சொன்னார்கள்; “எல்லோருடைய சரீரத்திலும் பகவான் தான் ஆத்மாவாக இருந்து கொண்டிருக்கிறார் விசிறிக்கு எல்லா சரீரமும் ஒன்றுதான்!”

உபநிடத வாக்கியம் போலிருந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு,பக்தர்கள் பரவசமடைந்தார்கள்.

பெரியவா தொடர்ந்து சொன்னார்கள்

“இப்போ எல்லா இடத்திலேயும், எலெக்ட்ரிக் ஃபேன், ஃபிரிஜ் …இப்படி வந்துவிட்டது. அதனால அதிதிகளை உபசரிக்கிற முறை கூட மறந்துடுத்து!… விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்… இதெல்லாம் மறந்தே போச்சு! குழந்தைகளுக்குப் புரிய மாட்டேங்கறது. அதனால் தான் ஜூஸ் கொடுத்து விசிறச் சொன்னேன். இதைப் பார்க்கிற சில பேர்களாவது, நம்ம பண்பாட்டைச் செயல்படுத்துவா.”

” வில்வ விருக்ஷம் ரொம்ப உத்கிருஷ்டமானது. வில்வ தளத்திலே ஸ்வர்ணம் இருக்கிறதாக வைத்ய சாஸ்திரம் சொல்றது.சிவ நிர்மால்ய வில்வதளம் தினமும்  ஸ்வகரித்தால் தங்கபஸ்மம் சாப்பிட்ட மாதிரி உடம்பு பிரகாசிக்குமாம்!…வில்வப்பழம் தலையிலே தேய்த்துக் குளிக்கணும். அவ்வளவு குளிர்ச்சி. கண்ணுக்கு ரொம்ப நல்லது.

” இப்போ வில்வ மரமே அபூர்வமாகப் போயிடுத்து. சிவன் கோயில்களில் கூட கிழமாகிப் போய்விட்ட சில மரங்கள் தான் இருக்கு.வில்வக் கன்று வைத்து வளர்த்தால் ரொம்பப் புண்ணியம் – ஸ்ரீ வ்ருக்ஷம். அதனாலே த்ரவ்யாபிவிருத்தின்னு பிரசாரம் பண்ணினால் கூடத் தேவலை….”

பெரியவா பேசி முடிக்கிற சமயத்தில், ஒரு வேளாளப் பெண்மணி வந்தாள்.அவளும் களைத்திருந்தாள். வில்வப்பழ ரசமும், மோரும் கொடுக்கும்படி சிஷ்யரிடம் கூறினார்கள் பெரியவா.

வெளியே தகிக்கிற வெயில் தான்.

ஆனால் பெரியாவாளின் உள்ளுக்குள்ளே பனிமழையல்லவா, பொழிந்து கொண்டிருக்கிறது.

எல்லோர் உள்ளத்தையும்… ஏ.ஸி. யாக்குவது, பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி!.. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

Topics

பஞ்சாங்கம் மே 17 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Entertainment News

Popular Categories