வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

வில்வப்பழ ஜூஸும், பனை விசிறியும்

(அதிதிகள் வந்தால், விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்)

(எல்லோர் உள்ளத்தையும் …ஏ.ஸி. யாக்குவது,பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி)

சொன்னவர்; ஸ்ரீமடம் பாலு.
தொகுப்பாளர்;டி.எஸ்.கோதண்டராம சர்மா
தட்டச்சு;வரகூரான் நாராயணன்.

கடுமையான கோடை  காலம்.

சில பக்தர்கள் வியர்க்க, விறுவிறுக்க  பெரியவாள் தரிசனத்துக்கு வந்தார்கள். நல்ல தாகம். தரிசனம் செய்ய வேண்டும் என்ற பேராவலில் தாகத்தைப் பொருட்படுத்தாமல் வந்திருந்தார்கள்.

பெரியவா ஒரு சிஷ்யரிடம்  அவர்களுக்குக் காசி வில்வப்பழ ரசம் கொடுக்கச் சொன்னார்கள். பக்தர்களுக்கு எல்லையில்லாத சந்தோஷம்! பெரியவாளின் கருணையை எண்ணி மனம் குளிர்ந்தார்கள்.

உடனே பெரியவா, தனக்கு விசிறிக் கொண்டிருந்த சிஷ்யரைக் கூப்பிட்டு, அதே பனை விசிறியால்  அந்த பக்தர்களுக்கும் விசிறச் சொன்னார்கள்.

திடுக்கிட்டுப் போன அவர்கள்,”அபசாரம்,அபசாரம்….பெரியவாளுக்கு உபயோகப்படுத்துகிற அதே விசிறியால், எங்களுக்கு  விசிறக் கூடாது. நாங்கள் சாதாரண ஜனங்கள்”என்று ஒரு குரலாகப் பிரார்த்திக் கொண்டார்கள்.

பெரியவா சொன்னார்கள்; “எல்லோருடைய சரீரத்திலும் பகவான் தான் ஆத்மாவாக இருந்து கொண்டிருக்கிறார் விசிறிக்கு எல்லா சரீரமும் ஒன்றுதான்!”

உபநிடத வாக்கியம் போலிருந்த அந்த வார்த்தைகளைக் கேட்டு,பக்தர்கள் பரவசமடைந்தார்கள்.

பெரியவா தொடர்ந்து சொன்னார்கள்

“இப்போ எல்லா இடத்திலேயும், எலெக்ட்ரிக் ஃபேன், ஃபிரிஜ் …இப்படி வந்துவிட்டது. அதனால அதிதிகளை உபசரிக்கிற முறை கூட மறந்துடுத்து!… விசிறியாலே விசிறணும், தீர்த்தம் கொடுக்கணும்… இதெல்லாம் மறந்தே போச்சு! குழந்தைகளுக்குப் புரிய மாட்டேங்கறது. அதனால் தான் ஜூஸ் கொடுத்து விசிறச் சொன்னேன். இதைப் பார்க்கிற சில பேர்களாவது, நம்ம பண்பாட்டைச் செயல்படுத்துவா.”

” வில்வ விருக்ஷம் ரொம்ப உத்கிருஷ்டமானது. வில்வ தளத்திலே ஸ்வர்ணம் இருக்கிறதாக வைத்ய சாஸ்திரம் சொல்றது.சிவ நிர்மால்ய வில்வதளம் தினமும்  ஸ்வகரித்தால் தங்கபஸ்மம் சாப்பிட்ட மாதிரி உடம்பு பிரகாசிக்குமாம்!…வில்வப்பழம் தலையிலே தேய்த்துக் குளிக்கணும். அவ்வளவு குளிர்ச்சி. கண்ணுக்கு ரொம்ப நல்லது.

” இப்போ வில்வ மரமே அபூர்வமாகப் போயிடுத்து. சிவன் கோயில்களில் கூட கிழமாகிப் போய்விட்ட சில மரங்கள் தான் இருக்கு.வில்வக் கன்று வைத்து வளர்த்தால் ரொம்பப் புண்ணியம் – ஸ்ரீ வ்ருக்ஷம். அதனாலே த்ரவ்யாபிவிருத்தின்னு பிரசாரம் பண்ணினால் கூடத் தேவலை….”

பெரியவா பேசி முடிக்கிற சமயத்தில், ஒரு வேளாளப் பெண்மணி வந்தாள்.அவளும் களைத்திருந்தாள். வில்வப்பழ ரசமும், மோரும் கொடுக்கும்படி சிஷ்யரிடம் கூறினார்கள் பெரியவா.

வெளியே தகிக்கிற வெயில் தான்.

ஆனால் பெரியாவாளின் உள்ளுக்குள்ளே பனிமழையல்லவா, பொழிந்து கொண்டிருக்கிறது.

எல்லோர் உள்ளத்தையும்… ஏ.ஸி. யாக்குவது, பெரியவாளுக்கு ரொம்ப ஈஸி!.. .

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories