மேலதிகாரியை புகழ்வது மட்டும் செய்து வேலை செய்யாமல் இருக்கலாமா?

melathikari - 2026

ஸ்ரீ ஸ்ரீ அபிநவ வித்யாதீர்த்த மகா சாமிகள் கூறிய ஐந்து லட்சணங்கள்

சங்கர பகவத் பாதர் அருளியுள்ள சிவானந்த லஹரியில் பக்தியின் தரத்தைப் பற்றி பலவாறு அருளியிருக்கிறார்
அங்கோலம்… என் தொடங்கும் அந்த ஸ்லோகம்

athi sankarar - 2026

பக்குவம் வந்ததும் மலர்கள் மலர்ந்து காய்த்து பறப்பதுபோல் பக்தி உணர்வும் மக்கள் உள்ளத்தில் இயல்பாக வளர வேண்டும் சிவபெருமானின் அருள் திறத்தை விளக்கும் இந்த ஸ்லோகங்கள் ஒன்றில் பக்தியின் இயல்பு பற்றி மிக அழகாக வர்ணித்துள்ளார்.

அங்குலம் என்று தொடங்கும் அந்த ஸ்லோகம் அங்கோலம் என்று ஒரு மரம் இருக்கிறது அதன் தன்மை மிக விசேஷமானது மரத்தில் இருந்து உதிர்ந்து விழுந்த விதை இந்த மரத்தின் அடிப்பாகத்தை நோக்கி செல்லும் அடி மரத்தில் உள்ள கோந்து போன்ற ஒரு பசை பொருள் விதைகளை எடுத்துக் கொள்ளும் அந்த விதையின் இயற்கை தன்மை இது.

apinava vidhya theerthar - 2026

இந்த ஸ்லோகத்தின் பொருள் எப்படி ஓர் அங்கோல மரத்தின் விதை மரத்திடம் செல்கிறதோ இரும்புத்துண்டு காந்தத்திடம் செல்கிறதோ பதிவிரதையான ஒரு பெண்மணி தன் கணவன் விஷயத்தில் அபிமானம் வைத்து இருப்பாளோ எப்படி ஓர் இளங்கொடி ஒரு மரத்தை சுற்றி கொள்கிறதோ இப்படி ஒரு ஆறு கடலை சென்று அடைகிறதோ அதே போல் மனதின் எண்ணங்கள் எல்லாம் இறைவனின் பாதாரவிந்தங்களில் போய் நிலைப்பதற்கு பக்தி என்று பெயர்.

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

அங்கோலம் நிஜ பீஜ சந்ததி அங்கோல மரத்தின் விதை அந்த மரத்தில் இருக்கும் கோந்து போன்ற ஒன்றில் ஒட்டிக்கொண்டு விடும் அதேபோல் முதல் நிலையில் பகவான் பக்தனுக்கு ஆதரவு கொடுத்து தன்னுடைய பக்கம் பக்தனுடைய மனத்தை திரும்புவான்.

sringeri - 2026

இரண்டாவதாக முதல் உதாரணத்தில் பக்தன் ஏதாவது முயற்சி செய்ய வேண்டியிருந்தது இரண்டாவது உதாரணத்தில் பக்தனின் மனம் இறைவனிடம் இயற்கையாகவே செல்கிறது காந்தத்தின் பின்பக்கம் எப்படி இரும்புத்துண்டு போகுமோ அதேபோல பக்தி விஷயத்திலும் சற்று பயிற்சி ஆகிவிட்டால் இறைவனைப் பற்றி நினைத்துக் கொண்டே இருந்தால் மனம் தானாகவே அங்கே செல்லும்.

மூன்றாவதாக இறைவனிடம் தானாகவே மனம் சென்று கொண்டிருந்தால் அவனை பற்றிய கவனம் இருந்து கொண்டே இருக்கும் அதாவது பதிவிரதை எப்படி தன் கணவனை பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பாள் அதேபோல் பக்தனும் இருப்பான்.

நான்காவதாக ஒரு கொடி மரத்தை எப்படி சுற்றி அந்த மரத்திற்கு ஒரு அழகு ஏற்படும் அதேபோல் பக்தன் உத்தமமான பக்தி செலுத்தி வந்தால் பக்தனுக்கு மட்டுமன்றி இறைவனுக்கே ஒரு சோபை ஏற்படும்.

ALSO READ:  திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஐந்தாவதாக உத்தமமான பக்தி ஒரு கடலில் போய்ச் சேர்ந்த பிறகு அதற்கு நதி என்ற பெயரே இல்லை பக்தன் இறைவனிடம் அளவு கடந்த பக்தி வைத்தால் அவனோடு அவன் ஐக்கியமாகி விடுவான் இதுதான் உத்தமமான பக்தியின் உயர்ந்த நிலை

இறைவனின் நாமத்தை ஜபித்துக் கொண்டே இருந்தால் போதும் நித்ய கர்மா ஏன் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்கள் இது சரியல்ல நித்ய கர்மாவைச் செய்து வருவதே சிறந்த வழியாகும்

sringeri 1 - 2026

ஒரு எஜமானனும் அவனுக்கு ஒரு வேலையாளும் இருப்பதாக வைத்துக்கொள்வோம் அந்த வேலைக்காரன் எஜமானன் சொல்கின்ற வேலையை மேற்கொள்ளாமல் எஜமானனை மட்டும் முகஸ்துதி செய்து போற்றிக் கொண்டே இருந்தால் அப்படிப்பட்ட வேலைக்காரனிடம் எஜமானனுக்கு திருப்தி ஏற்படுமா?

நம் எல்லோருக்கும் இறைவன் தான் எஜமான் அவன் வேதத்தின் மூலமாகவும் சாஸ்த்திரத்தின் மூலமாகவும் நாம் எப்படி வாழவேண்டும் என்று கூறியிருக்கிறான்.

ஆகையால் நாம் நமக்கு உள்ள நித்திய கர்மாக்களை சரிவர செய்து வரவேண்டும் இதே சமயத்தில் இறைவனின் நாமங்களை பஜித்து வந்தால் அதிக பலன் கிடைக்கும்

ALSO READ:  பங்குனி உத்திர ஆராட்டு விழாவுக்கு தயாராகிறது பம்பை!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories