அருகில் இருக்கும் உண்மையை அறிய மறுக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

10 முட்டாள்கள் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது ஆற்றின் கரையை அடைந்ததும் அவர்கள் எல்லோரும் பத்திரமாக ஆற்றைக் கடந்து விட்டார்களா என்று நிச்சயம் செய்து கொள்வதற்காக அவர்களுள் ஒருவன் எல்லோரையும் எண்ண ஆரம்பித்தான் அவன் மற்றவர்களை எல்லாம் எண்ணிவிட்டு தன்னை எண்ண மறந்து விட்டதால் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவட்டதாக அவன் முடிவு செய்தான்.

அதனால் அவர் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானான். ஒருவேளை எண்ணிக்கையில் ஏதாவது தவறி நேர்ந்திருக்கும் என்று சந்தேகப்பட்டு மற்றொரு மூடனை எண்ண சொன்னான். அவனும் எண்ணத்தொடங்கினான் ஆனால் அவனும் அதே தவறை செய்ததால் ஒருவன் இறந்துவிட்டதாக முடிவு செய்து கொண்டார்கள். அதன் விளைவாக துக்கம் ஏற்பட்டு அழ ஆரம்பித்தார்கள். அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒருவன் அவர்களின் அழுகை ஓசையைக் கேட்டு பரிதாபப்பட்டு அவர்கள் அருகில் வந்து விசாரித்தான்.

மூடர்களின் ஒருவன் நாங்கள் பத்து பேராக கிளம்பி நதியை கடந்து வந்தோம் ஆனால் இப்பொழுது 9 பேர் தான் இருக்கிறோம் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான் அந்தத் துயரத்திற்காக அழுகிறோம் என்று காரணம் சொன்னான். அவர்களுடைய வினோதமான கூற்றைக் கேட்டு அவன் சிரித்தான் வழிப்போக்கன்.

இப்பொழுது இங்கே எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்காக தயவுசெய்து மற்றொருமுறை எல்லோரையும் எண்ணிப்பாருங்கள் என்று கேட்டுக்கொண்டான். இதற்கு முன்னர் இருவர் எண்ணியதை போலவே இவனும் எண்ணிஒன்பது என்று சொல்லி நிறுத்தினான்.

அப்பொழுது வழிப்போக்கன் இல்லை பத்தாவது மனிதன் இறக்கவில்லை என்று தெரிவித்தான். அவனுடைய வார்த்தைகளை கேட்டதும் அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது உடனே சட்டென்று அவன் எண்ணியவனைக் கைகாட்டி நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று கூறினான். வழிப்போக்கன் கூறின வார்த்தையின் உட்கருத்து புரிய ஆரம்பித்ததும் துவண்டு போயிருந்த அவர்கள் முகங்கள் மகிழ்ச்சியில் பிரகாசித்தன.

எப்படி கதையில் ஒவ்வொரு மூடனும் தன்னை கணக்கில் சேர்த்துக்கொள்ள மறந்தாலும் அதேபோல் நாம் நம்முடைய உண்மையான ஸ்வரூபமான இரண்டற்ற பரமாத்மாவை மறந்து இருக்கிறோம். அவர்களுக்கு உதவி புரிய வந்த வழிப்போக்கனைப் போன்று குரு சிஷ்யனை பார்த்து வரம்புக்குட்பட்டவனாகவும், துக்கப் படுபவனாகவும் உன்னை நினைத்துக் கொண்டிருப்பது தவறு. இருப்பாகவும் சைதன்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ள பரமாத்மா நீ என்று கூறுகிறார். பரிசுத்தமான மனதை உடைய சிஷ்யன் குருவின் வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் ஞானத்தை அடைந்து விடுவான். கீழ்நிலையில் இருக்கும் சிஷ்யனோ அவநம்பிக்கையும் மற்றும் தவறான கருத்துக்களையும் போக்கிக் கொள்வதற்காக நீண்ட காலம் குருசேவையையும், ஆன்மீக சாதனைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வர வேண்டும். அதன்பின் அவன் பேருண்மையை நேரடியாக உணர்ந்து கொள்வான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories