அருகில் இருக்கும் உண்மையை அறிய மறுக்கும் அறிவு: ஆச்சார்யாள் அருளமுதம்!

abinav vidhya theerthar - 2026

10 முட்டாள்கள் ஒரு ஆற்றைக் கடந்து செல்ல வேண்டியிருந்தது ஆற்றின் கரையை அடைந்ததும் அவர்கள் எல்லோரும் பத்திரமாக ஆற்றைக் கடந்து விட்டார்களா என்று நிச்சயம் செய்து கொள்வதற்காக அவர்களுள் ஒருவன் எல்லோரையும் எண்ண ஆரம்பித்தான் அவன் மற்றவர்களை எல்லாம் எண்ணிவிட்டு தன்னை எண்ண மறந்து விட்டதால் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்துவட்டதாக அவன் முடிவு செய்தான்.

அதனால் அவர் மிகுந்த மன வேதனைக்கு உள்ளானான். ஒருவேளை எண்ணிக்கையில் ஏதாவது தவறி நேர்ந்திருக்கும் என்று சந்தேகப்பட்டு மற்றொரு மூடனை எண்ண சொன்னான். அவனும் எண்ணத்தொடங்கினான் ஆனால் அவனும் அதே தவறை செய்ததால் ஒருவன் இறந்துவிட்டதாக முடிவு செய்து கொண்டார்கள். அதன் விளைவாக துக்கம் ஏற்பட்டு அழ ஆரம்பித்தார்கள். அவ்வழியே சென்று கொண்டிருந்த ஒருவன் அவர்களின் அழுகை ஓசையைக் கேட்டு பரிதாபப்பட்டு அவர்கள் அருகில் வந்து விசாரித்தான்.

மூடர்களின் ஒருவன் நாங்கள் பத்து பேராக கிளம்பி நதியை கடந்து வந்தோம் ஆனால் இப்பொழுது 9 பேர் தான் இருக்கிறோம் ஒருவன் ஆற்றில் மூழ்கி இறந்து விட்டான் அந்தத் துயரத்திற்காக அழுகிறோம் என்று காரணம் சொன்னான். அவர்களுடைய வினோதமான கூற்றைக் கேட்டு அவன் சிரித்தான் வழிப்போக்கன்.

இப்பொழுது இங்கே எத்தனை பேர் இருக்கிறீர்கள் என்று நான் தெரிந்து கொள்வதற்காக தயவுசெய்து மற்றொருமுறை எல்லோரையும் எண்ணிப்பாருங்கள் என்று கேட்டுக்கொண்டான். இதற்கு முன்னர் இருவர் எண்ணியதை போலவே இவனும் எண்ணிஒன்பது என்று சொல்லி நிறுத்தினான்.

அப்பொழுது வழிப்போக்கன் இல்லை பத்தாவது மனிதன் இறக்கவில்லை என்று தெரிவித்தான். அவனுடைய வார்த்தைகளை கேட்டதும் அவர்கள் அனைவருக்கும் நம்பிக்கை பிறந்தது உடனே சட்டென்று அவன் எண்ணியவனைக் கைகாட்டி நீதான் அந்த பத்தாவது மனிதன் என்று கூறினான். வழிப்போக்கன் கூறின வார்த்தையின் உட்கருத்து புரிய ஆரம்பித்ததும் துவண்டு போயிருந்த அவர்கள் முகங்கள் மகிழ்ச்சியில் பிரகாசித்தன.

எப்படி கதையில் ஒவ்வொரு மூடனும் தன்னை கணக்கில் சேர்த்துக்கொள்ள மறந்தாலும் அதேபோல் நாம் நம்முடைய உண்மையான ஸ்வரூபமான இரண்டற்ற பரமாத்மாவை மறந்து இருக்கிறோம். அவர்களுக்கு உதவி புரிய வந்த வழிப்போக்கனைப் போன்று குரு சிஷ்யனை பார்த்து வரம்புக்குட்பட்டவனாகவும், துக்கப் படுபவனாகவும் உன்னை நினைத்துக் கொண்டிருப்பது தவறு. இருப்பாகவும் சைதன்யமாகவும் ஆனந்தமாகவும் உள்ள பரமாத்மா நீ என்று கூறுகிறார். பரிசுத்தமான மனதை உடைய சிஷ்யன் குருவின் வார்த்தைகளை கேட்ட மாத்திரத்தில் ஞானத்தை அடைந்து விடுவான். கீழ்நிலையில் இருக்கும் சிஷ்யனோ அவநம்பிக்கையும் மற்றும் தவறான கருத்துக்களையும் போக்கிக் கொள்வதற்காக நீண்ட காலம் குருசேவையையும், ஆன்மீக சாதனைகளையும் சிரத்தையுடன் செய்து கொண்டு வர வேண்டும். அதன்பின் அவன் பேருண்மையை நேரடியாக உணர்ந்து கொள்வான்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 25 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Entertainment News

Popular Categories