
எம்பெருமான் நாராயணன் எத்தனையோஅவதாரங்கள்
செய்தருளினால், அவைகளில்
பத்து அவதாரங்கள்
மிகவும் போற்றப்படுகின்றன
அந்தப் பத்தில் ஈடு இணையற்ற அவதாரமாக மிகவும் போற்றப் பெறும் அவதாரம் ஸ்ரீ நரசிம்ம அவதாரம் ஆகும்.
இந்த அவதாரத்தின் மாபெரும் பெருமைகளை ‘சொல்லில் வடிக்க முடியாது. இருந்தாலும் இவ்வாறு எழுதுகிறோம் என்றால்,
வாஸல்யமேவ பவதோ முகரீ கரோதி”
என்று ஸ்வாமி ஸ்ரீதேசிகன் அருளியது போல அவனுடைய இன்னருள்தான் இதற்குக் காரணம்.
இந்த அவதாரத்தின் பெருமையை விளக்கும் ஸ்ரீ மத் பாகவதத்தில் ஸப்தம ஸ்கந்தத்தில் உள்ள ஸ்லோகம் ஸ்ரீநருஸிம்ஹனைப் போன்றே மிகவும் உயர்ந்து விளங்குகின்றது.
ஸத்யம் விதாதும் நிஜப்ருத்ய பாஷிதம்
வ்யாபதிம் ச பூதேஷ்வகிலேஷு சாத்மந:/
அத்ருச்யதாதியத்புத ரூபமுத்வஹந்
ஸதம்பே ஸ்பாயாம் ந மருகம் ந மாநுஷம் !
ஆழ்பொருளைத் தன்னுள் கொண்ட
அற்புதமான சுலோகரத்னம் இது.
உலகில் ஸாமாந்யமாக ஸ்ரீந்ருஸிம்ஹ அவதாரம் எதற்காக ஏற்பட்டது என்று கேள்வி கேட்டால் உடனே பதில் என்ன
கிடைக்கும்? எல்லோரும் என்ன சொல்வார்கள்? ஸ்ரீபிரகலாதனை ரக்ஷிப்பதற்காக என்பார்கள். ஆனால் இங்கு ஸ்ரீவியாஸ பகவான் அருளியுள்ளதை நாம் நன்கு கவனித்தல் வேண்டும்ண்டும்.
ஸ்ரீந்ருஸிம்ஹ அவதாரம் ஸ்ரீபிரகலாதனை ரக்ஷிப்பதற்காக அல்ல.
மாறாக, ஸ்ரீபிரகலாதனின் வார்த்தையை ரக்ஷிப்பதற்காகத்தான் என்பதைத் தெளிவாகத் தெரிவித்தருள்கிறார்.
ஸ்ரீபிரகலாதனை அக்னியில் தள்ளியபோதும், மலை மீதிருந்து உருட்டிக் கீழே தள்ளிய போதும் அந்த எம்பெருமான் அவனை ரக்ஷிக்கவில்லையா?
தற்போது ஸ்ரீபிரகலாதன் ‘எங்குமுளன் கண்ணன்’, எம்பெருமாள் எங்கும் நிறைத்திருக்கிறான், அவன் இல்லாத இடம் என்பதே இல்லை என்கிறாள். எம்பெருமானின் பெருமையைப் பேசுகிறான்.
தற்போது எம்பெருமான் தோன்றவில்லை என்றால் எம்பெருமானுடைய ஸர்வ வ்யாபகத்வத்திற்கு (எங்கும் பரவியிருக்கும் தன்மை) இழுக்கு ஏற்பட்டுவிடும். எனவே எம்பெருமான் ஸ்ரீபிரகலாதனின் வார்த்தையைக் காப்பதற்கே வந்து தோன்றினான் என்கிற உண்மைப் பொருளை நாம் நன்கு உணர வேண்டும்.

நிஜப்ருத்யனான (உண்மை பக்தனான) ஸ்ரீபிரகலாதனின் வார்த்தையை மெய்ப்பிப்பதற்காக மானிடம் கலந்த சிங்க ரூபத்துடன் எங்கும் நிறைந்தான்.
வந்தது ஒரு தூணிலிருந்துதான். ஆனால் மீதி எல்லா இடங்கலேயும் இன்றும் ஸ்ரீநர்ஸிம்ஹ ரூபியாக எம்பெருமான் விளங்கிக் கொண்டிருக்கின்றான் என்பதை ‘ஸ்ரீவர பஞ்சாசத்’ என ஸ்தோத்திரத்தில் ஸ்ரீதேசிகன் இவ்வாறு
கூறி அருள