29-03-2023 1:14 PM
More
    Homeஆன்மிகம்ஆன்மிகக் கட்டுரைகள்முப்போதும் ராமநாமம்! மன அமைதி நிச்சயம்!

    To Read in other Indian Languages…

    முப்போதும் ராமநாமம்! மன அமைதி நிச்சயம்!

    ramar 1
    ramar 1

    1931 ஆம் ஆண்டு முதல் இன்று வரையிலும் இங்கே தினமும் 12 மணி நேரம் விடாமல் ராமநாம கீர்த்தனை நடைபெற்றுக்கொண்டே இருக்கிறது;

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ராம நாம கீர்த்தனை நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது; முதல் 30 நிமிடங்கள் பெண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்; அடுத்த 30 நிமிடங்கள் ஆண்கள் மட்டும் கீர்த்தனை செய்கிறார்கள்;

    இந்த ராம நாம கீர்த்தனையில் நாமும் பங்கு பெறலாம்; அப்படி பங்கு பெற நாம் செய்ய வேண்டியது முன்பதிவு செய்வது மட்டுமே!

    அப்படி முன் பதிவு செய்தால், இந்த ஆஸ்ரமத்தில் தங்கிட அறை கிடைக்கும்; உணவும் கிடைக்கும்; இலவசமாக! தனியாக செல்லலாம்; தம்பதியாகச் செல்லலாம்; நண்பர்களாகச் செல்லலாம்;

    Ananda asiramam
    Ananda asiramam

    ராம நாமத்தை ஜபிக்க வரும் பக்தர்களுக்காக ஆஸ்ரமமே செய்திருக்கும் அற்புதமான ஏற்பாடு;
    இந்த ஆஸ்ரமத்தில் அதிகபட்சமாக மூன்று நாட்கள் தங்கலாம்;

    1931 முதல் தொடர்ந்து ராம நாம கீர்த்தனைகள் நடைபெற்று வருவதால், இந்த ஆஸ்ரமம் முழுவதும் கோடிக்கணக்கான எண்ணிக்கையில், லட்சக்கணக்கான மனிதர்களின் ஜப எண்ணிக்கை காற்றில் பரவியிருப்பதை உணர முடிகிறது;

    இங்கே மூன்று நாட்கள் தங்கியிருப்பதன் மூலமாக, நமது நீண்ட நாள் மன உளைச்சல் தானாகவே குணமாகிவிடும்;

    சிலருக்கு நிலையான மன உறுதி கூட சீர்குலைந்து போயிருக்கும்; அதுவும் சரியாகிவிடும்; ஆழ்ந்த மன நிம்மதி பெற விரும்புபவர்கள் இங்கே ஒருமுறை வந்தால் போதும்;

    Ananda asiramam kerala
    Ananda asiramam kerala

    சிலருக்கு ஒரே நாளில் மன அமைதியைப் பெற முடியும்;கடந்த 10 மாதங்களில் செய்த ஆன்மீக ஆராய்ச்சியின் முடிவு இது;

    இந்த ஆசிரமத்தை ஆரம்பித்தவர் சமர்த்த ராமதாஸரின் வம்சாவழியைச் சேர்ந்தவர்;(சமர்த்த ராமதாஸர்,மகாராஷ்டிர மாநிலத்தில் தேசபக்தியைத் தூண்டிய வீரசிவாஜியின் குரு ஆவார்) இல்லத்துறவியாக இருந்த இவர்,இந்தியா முழுவதும் நடந்தே பயணித்தவர்;

    ணராம நாம கீர்த்தனையை தனது தந்தையிடம் இருந்து பெற்றவர்; தனது வாழ்நாளில் சில கோடி தடவை ஜபித்தவர்;

    இவருக்கு நயன தீட்சை வழங்கிய குரு ரமணமகரிஷி;

    இவருடைய சீடர்தான் விசிறிச்சாமியார் என்று அழைக்கப்படும் யோகிராம்சுரத்குமார் ஆவார்;

    அந்த ராம நாம கீர்த்தனை:

    ஓம் ஸ்ரீராம ஜெய ராம ஜெய ஜெய ராமா

    இந்த ஆஸ்ரமம் அமைந்திருக்கும் இடம்;
    மூன்று மாநிலங்கள் சந்திக்கும் இடத்தில் அமைந்திருக்கிறது; உலகம் முழுவதும் இருந்து ராம பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்;

    ஆனந்த ஆஸ்ரமம், காஞ்சன்கோடு, கேரளா;

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    five × one =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,033FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,634FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவு..

    நடிகர் அஜித்குமாரின் தந்தை பி.சுப்ரமணியம் மறைவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். நடிகர் அஜித்குமாரின்...

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    Latest News : Read Now...