December 6, 2025, 6:07 PM
26.8 C
Chennai

விநாயகர் சதுர்த்தி: வழிபட உகந்த மலரும், உகந்த திதியும்..!

chekatti vinayakar
chekatti vinayakar

மகா கணபதிக்கு உகந்த மலர்கள்.

ஆனை முருகனுக்கு அறுகைப் போலவே பிடித்தமானவை என்று. இருபத்தோரு மலர்களைச் சொல்கிறது கணபதி பூஜா மந்திரம்.

அந்தப் பூக்கள்: புன்னை, மந்தாரை, மகிழம்பூ. பாதிரி, தும்பை, ஊமத்தை, சம்பங்கி, மாம்பூ. தாழம்பூ, முல்லை, கொன்றை, எருக்கு. செங்கழுநீர், செவ்வரளி, வில்வம், அரளி, குருந்தை, பவளமல்லி, ஜாதிமல்லி, மாதுளம்பூ. கண்டங்கத்தரிப்பூ ஆகியவை.

அருணாச்சலேஸ்வரர் அருள்பாலிக்கும் திருவண்ணாமலையை வலம் வரும் வழியில், ஓர் அதிசய விநாயகர் காணப் படுகிறார். ‘தலையைத் திருக தனம் கொடுக்கும் விநாயகர்’ என்பது இவரது திருப்பெயர். இந்த விநாயகரின் தலையை தனியாக எடுக்கலாம். விநாயகரின் தலையை தனியாக எடுத்தால் உள்ளே கையளவு சுரங்கம் உண்டு. அந்தச் சுரங்கத்தில் காசுகளைப் போட்டு மீண்டும் எடுத்துக்கொண்டால் செல்வம் சேரும் என்ற ஐதிகம் நிலவுவதாகச் சொல்கின்றனர்.

என்ன திதிக்கு எந்த கணபதி?

குறிப்பிட்ட திதி வரும் தினங்களில் கணபதியைக் குறிப்பிட்ட வடிவில் வழி படுவது கூடுதல் பலன் தரும் என்பது. புராணங்கள் கூறும் ஐதிகம். அவை:

அமாவாசை திருத கணபதி

பிரதமை பால கணபதி

த்விதியை தருண கணபதி

திருதியை பக்தி கணபதி

சதுர்த்தி வீர கணபதி

பஞ்சமி சக்தி கணபதி

சஷ்டி த்விஜ கணபதி

சப்தமி சித்தி கணபதி

அஷ்டமி உச்சிஷ்டகணபதி

நவமி விக்கினகணபதி

தசமி ஷிப்ர கணபதி

ஏகாதசி ஹேரம்பகணபதி

த்வாதசி லக்ஷ்மி கணபதி

த்ரையோதசி மகா கணபதி

சதுர்த்தசி விஜய கணபதி

பௌர்ணமி திருத்யகணபதி

சீர்காழியில் இருந்து திருநாங்கூர் செல்லும் பாதையில் உள்ள திருமணிக் கூடம் என்னும் வைணவப் பதியில் உள்ள இம்மூர்த்தி, சுயம்பு வடிவாய்த் தெற்கு நோக்கி அமர்ந்துள்ளார். இந்த விநாயகருக்கு அபிஷேகம் செய்யப் பெறும் நீர், கீழே வழிந்தோடாமல் சிலையின் உள்ளே சென்று விடுவதாகக் கூறப்படுகிறது.

திருச்சி மணச்சநல்லூரிலிருந்து பத்து கி.மீ. தொலைவிலிருக்கும் திருப்பைஞ்ஞீலி என்னும் திருத் தலத்தில் உள்ள எமன் கோயிலின் நுழைவாசலுக்கு முன், விநாயகர் தெற்குதிசை நோக்கி நின்ற நிலையிலிருக்கிறார்.

இவர், இடது காலை ஊன்றி வலது காலைத்தூக்கி உதைக்கும் நிலையில் உள்ளார். அதாவது தெற்கு திசையில் உள்ள எமன் இங்கு வந்தால் எதிர்ப்புத் தெரிவிக்க, உதைக்கும் தோற்றமாம்.

ராமபிரான் தலைமையில் 4000 முனிவர்கள் அசுவமேதயாகம் இயற்றிய போது விநாயகரை வழிபட மறந்தமையால் இடையூறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் விநாயகரை வழிபட, யாகம் நிறைவுபெற்றது. யாகத்தில் விநாயகர் தாமும் ஒருவராக கலந்து கொண்டமையால் 4001 விநாயகர்’ எனப் பெற்றார்.

ஆனைமுகனுக்கு சுடச்சுட அப்பம்’

கேரளாவில் கொட்டாரக் கரைசிவன் கோயிலுக்கு சற்று தொலைவில் மணிகண்டேஸ்வரம் கோவில் உள்ளது. இக்கோயிலில் ‘உன்னியப்பம்’ எனும் பிரசாதம் விநாயகர் முன்னிலையிலேயே தயாரிக்கப்பட்டு உடனுக்குடன் சுடச்சுட அவருக்கு நைவேத்தியம் செய்யப் படுகிறது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories