spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஆன்மிகம்ஆன்மிகச் செய்திகள்நவராத்திரி ஸ்பெஷல்: நவசக்திகள் தரும் நலன்கள்!

நவராத்திரி ஸ்பெஷல்: நவசக்திகள் தரும் நலன்கள்!

- Advertisement -
golu
golu

அன்னையின் ஒன்பது சக்திகளின் த்யான ஸ்லோகங்கள் !

நவராத்திரியில் ஒன்பது தினங்களும் பூஜிக்க வேண்டிய அன்னையின் சக்திகள் பின்வருமாறு. குமாரி, திரிமூர்த்தி, கல்யாணி, ரோகிணி, காளிகா, சண்டிகா, சாம்பவி, துர்க்கா, சுபத்திரா. இவர்களைப் பூஜிக்கையில் இந்த சக்திகளுக்கு மூலகாரணியான பராம்பிகையை உரிய தியான ஸ்லோகங்களால் தியானித்து பின்னர் பூஜை, ஜபம், ஹோமம் போன்றவற்றை இந்த சக்திகளுக்குச் செய்யவேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த 9 சக்திகளின் தியான ஸ்லோகத்தையும் அதன் பொருளுடனும் இப்பதிவினை நிறைவு செய்வோம்.

குமாரரூய ச தத்வானி யாரூ ருஜத்யயி லீலாய
காதிநபிச தேவாம்ரூதான் குமாரிம் பூஜயாம்யஹம்

குழந்தையினுடைய விளையாட்டுக்களைப் போல் எவள் செய்கிறாளோ, பிரம்மன் முதலான தேவர்கள் எந்த சக்தியின்லீலையால் சிருஷ்டி-ஸ்திதி-சம்ஹாரங்களைச் செய்கிறார்களோ அந்த சக்தியான குமாரியை நான் பூஜிக்கிறேன்

சத்யரதிபிரூ த்ரிமூர்த்திர் யாத்தர்ஹி நாநாரூவரூபிணி
த்ரிகால வ்யாபிநி சக்திரூ த்ரிமூர்த்திம் பூஜயாம்யஹம்

சத்வம் முதலான குணங்களால் அநேக ரூபங்களாகவும், ஸ்ருஷ்டி, ஸ்திதி சம்ஹாரம் போன்ற செயல்களாகவும், காலை, உச்சி, மாலை போன்ற காலங்களாகவும் வியாபித்திருக்கும் சக்தியான த்ரிமூர்த்தியை பூஜிக்கிறேன்.

கல்யாண காரிணீ நித்யம் பக்தானாம் பூஜிதாநிசம்
பூஜயாமி சதாம் பக்த்யா கல்யாணீம் சர்வகாமதாம்

பக்தர்களால் எப்போதும் பூஜிக்கப்பட்டு, அவர்களுக்கு எந்த சக்தியால் மங்களங்களை அருளுகிறாளோ அந்த சக்தியைக் கல்யாணியை வணங்குகிறேன்.

ரோஹயந்தீச பீஜாநி பிராக்ஜன்ம சஞ்சிதாநிவை
யாதேவீ சர்வபூதானாம் ரோஹிணீம் பூஜயாம்யஹம்

பல பேதங்களுடைய சகல பிராணிகளின் பூர்வ ஜென்ம கர்மங்களாகிய பாபங்களை எந்த சக்தியால்நிவர்த்தி செய்கிறாளோ அந்த சக்தியான ரோஹிணியை நான் பூஜிக்கிறேன்.

காளிகாலயதே சர்வம் பிரஹ்மாண்டம்ஸ சராசரம்
கல்பாந்த சமயேயாதாம் காளிகாம் பூஜயாம்யஹம்

மஹா-பிரளய காலத்தில் அண்ட-சராசரங்களையும் எந்த சக்தியால் சம்ஹரிக்கின்றாளோ அந்தசக்தியான காளியை பூஜிக்கிறேன்.

சண்டிகாம் சண்ட ரூபாஞ்ச சண்ட முண்ட விநாசிநீம்
தாம்சண்ட பாபஹரிணீம் சண்டிகாம் பூஜயாம்யஹம்

சண்ட-முண்டர்களை வதைத்து அதன் மூலமாக பாதகங்களை தவிர்த்திட எந்த சக்தியானவள் காரணமாகிறாளோ அந்த சக்தியான சண்டிகாவைப் பூஜிக்கிறேன்.

அகாரணாத் சமுத்பத்திர் யந்மயை: பரிகீர்த்திதா
யஸ்யாஸ்தாம் சுகதாம் தேவீம் சாம்பவீம் பூஜயாம்யஹம்

பரபிரம்மத்தின் விருப்பப்படி எந்த சக்தியினால் திருவுருவங்களை உருவாக்குகிறாளோ அந்தசக்தியான சாம்பவியை நான் பூஜிக்கிறேன்.

துர்க்காத்ராயதி பக்தம்யா ஸதா துர்க்கதிநாசினீ
துர்ங்ஞேயா சர்வ தேவானாம் தாம் துர்க்காம் பூஜயாம்யஹம்

துர்க்கதியை நீக்குபவளாய், தேவர்களாலும் காணப்படாதவளாகவும், பக்தர்களின் துயர் துடைப்பவளாகவும்எந்த சக்தி இருக்கிறாளோ அந்த சக்தியை துர்க்காவாக பூஜிக்கிறேன்.

சுபத்ராணி ச பக்தானாம் குருதே பூஜிதாசதா
அபத்ரநாசிநீம் தேவீம் சுபத்ராம் பூஜயாம்யஹம்

தனது பக்தர்களுக்கு மங்களங்களைத் தருபவளும், அமங்கலத்தைப் போக்குபவளுமான சக்தியைசுபத்ரா என்ற பெயரில் பூஜிக்கிறேன்.

இவ்வாறு தேவியை ஒவ்வொரு நாளும் மேலே சொன்ன விதத்தில் தியானித்து, சகல உபசாரங்களும் செய்து பூஜிக்க வேண்டும். நவராத்ரி ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாவிட்டால், சப்தமி, அஷ்டமி, நவமி ஆகிய மூன்று தினங்களிலாவது செய்யலாம். தினம் பூஜை செய்ய இயலாதவர்கள் இந்த மூன்று நாட்கள் செய்தாலே 9 நாட்கள் செய்த பலனை அடைவார்களாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe