விளம்பி வருடம் : விளம்பட்டும் கோடி நலன்களை!

thamizannai - 2026

14/04/2018 மங்களகரமான விளம்பி வருஷம் ஆரம்பம்

மலரும் மங்களகரமான ”விளம்பி” என்கிற புதிய ஆண்டு
14-4-2018 சித்திரை 1-ஆம் நாள் சனிக்கிழமை
வாக்கிய பஞ்சாங்கம்படி காலை 7.00 மணிக்கும்
திருக்கணித பஞ்சாங்கம்படி காலை 8.13 மணிக்கும் பிறக்கிறது…
எனவே 14-4-2018 அதிகாலை 3.00 மணி முதல் பகல் 12.00 மணி வரை
விஷூ புண்ணிய காலமாகும்.

இந்த நேரத்தில் மருந்து நீர் (அருகம்புல்,மிளகு,கீழா நெல்லி வேர்) வைத்து நீராடி நீலம் /சிவப்பு நீற ஆடைகள் அணிந்து கடவுளை வழிபட்டு மங்களமாக மகிழ்வீர்களாக

newyearwish - 2026

சுப காரிய காலம்

14-4-2018 சித்திரை 1 சனி
காலை 11.00 முதல் 12.05 வரை
மதியம் 1.00 முதல் 2.00 மணி வரை
மாலை 6.20 முதல் 8.13 வரை

விளம்பி வருஷ வெண்பா

விளம்பி வருஷ விளைவு கொஞ்சம் மாறி
அளந்து பெய்யும் அரசர் – களங்கமுடன்
நோவால் மெலிவாரே நோக்கரிதாகும் கொடுமை
ஆவா புகல அரிதாம்

விளம்பி வருஷத்தில் அளவில்லா மகிழ்ச்சி பெற ஶ்ரீவேங்கடவனை வணங்கி அருள் பெறுக

பிறக்கப் போகும் இனிய விளம்பி புத்தாண்டு நம் அனைவரின் வாழ்விலும் அன்பையும் மகிழ்ச்சியையும் நோய் நொடி இல்லாத வாழ்வையும் குறைவில்லாத செல்வத்தையும் கொடுக்கும் ஒரு புதிய புத்தாண்டாக மலர வாழ்த்துக்கள்

ALSO READ:  திமுக.,வின் கறுப்புக்கொடி போராட்டம் மகளிர் இட ஒதுக்கீடுக்கான கண் திருஷ்டியை விரட்டும்: பிரதமர் கிண்டல்!

விளம்பியே வருக! வருக!!. விரும்பிய அனைத்தையும் அள்ளி தருக.!

எங்கள் இல்லங்களில் விவாகம் பல நடந்தேறுக

விழைந்தோர்க்கு விடை கிடைக்க வியக்கத் தக்க வகையில் அமையட்டும்

பகவான் ஸ்ரீராமர் பிறந்தது இந்த விளம்பி ஆண்டில்

தமிழ் ஆண்டுகள் மொத்தம் 60 அதில் 32 வது வருடம்  விளம்பி ஆண்டு

எல்லோருக்கும் மங்களங்கள் உண்டாக பகவானை பிரார்த்திக்கிறோம்

சித்திரை மாதம் தான் தமிழ் புத்தாண்டு என ஏன் கொண்டாடப்படுகிறது (14.4.2018)

ஜோதிட சாஸ்திரப்படி மேஷத்தில் பரணி என்ற நட்சத்திரத்தில் கிரகங்களின் அரசன் சூரியன் உச்சம் பெறுகிறார். அதைக் கருத்தில் கொண்டே சித்திரை மாதம் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது.

சூரியன் தனது பார்வையை பூமத்திய ரேகையில் செலுத்தும் இந்த காலத்தில சம அளவு வெப்பத்தை மகர ரேகை மற்றும் கடக ரேகை பகுதிகளிலும் செலுத்தும் என்பதும் இன்னொரு அறிவியல் சூட்சுமம் ஆகும்

இதில் இன்னொரு ஜோதிட சூட்சுமம் என்னவென்றால் கிரகங்களில் அதிக பலம் கொண்ட கேதுவின் நட்சத்திரமான அஸ்வினியில் தனது பயணத்தை தொடங்கி குறைவான பலம் கொண்ட புதனின் நட்சத்திரத்தில் தனது பயணத்தை முடிக்கிறது

ALSO READ:  மதுரையில் கள்ளழகர் தங்கக் குதிரையில் எழுந்தருளல்!

இத்தகைய சிறப்பு கொண்ட சூரியன் பூமியில் இருந்து பார்க்கும் போது தமிழ் புத்தாண்டு அன்று சித்திரை மாத ஆரம்பத்தில் மேஷ ராசி மண்டலத்தில் இருக்கிறார். ஆதாவது பூமியின் நடுப்பகுதில் தனது ஒளிக்கதிர்களை செறிவாக செலுத்தும் காலம் இதுவே!

இதை வேறு விதத்தில் கூற பூமி சூரியனை சுற்றிவரும் நீள்வட்ட பாதையில் சூரியனை நெருக்கி செல்லும் காலம் என்றும் கூறலாம்

மேஷ ராசியில் இருக்கும் அஸ்வினி என்ற நட்சத்திரத்தில் இருக்கும் போதே தமிழ் புத்தாண்டு ஏற்படுகிறது. அஸ்வினி என்ற நட்சத்திரம் குதிரை வடிவம் கொண்டது. சூரியன் எனும் அரசன் குதிரை (அஸ்வினி) மேல் பயணம் செய்கிறார் என்ற உவமையும் இங்கே செய்து பார்க்கலாம்

இந்த புத்தாண்டு தமிழகத்திற்க்கு எப்படி பலனளிக்கப் போகிறது ? …

இந்த விளம்பி ஆண்டில், தமிழகத்தில் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் நடக்கும்!

இந்த விளம்பி வருடம் அதாவது  14/4/2018 முதல் 2019 ஏப்ரல் 13ம் தேதி வரை இந்தக் காலகட்டத்தில் வெப்பம் மிக மிக அதிகமாக இருக்கும்.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

அதேசமயம் போதுமான அளவுக்கு மழை இருக்கும் ஆனால், மழையால் சேதங்களோ பாதகங்களோ ஏற்படாது. முக்கியமாக இந்த விளம்பி வருடத்தில், விவசாயம் செழிக்கும். பொருளாதாரம் ஏற்றம் பெறும்.  இந்திய பங்குச் சந்தை வர்த்தகம் உயரும்!

எல்லாவற்றையும் விட முக்கியமான ஒன்று – தமிழகத்தில் அரசியல் மாற்றம் நிகழும். நல்ல திறமையான ஸ்திரமான ஆட்சி நிர்வாகம் அமையும். தனிநபர் வருமானம் உயரும்~

அவரவர் இல்லத்தில் சுபீட்சம் மலர … மங்களம் பெருக…  இல்லத்தில் உள்ள அனைவரும் சூரிய வழிபாடு மற்றும் குல தெய்வ வழிபாடு செய்து தமிழ் புத்தாண்டை சிறப்பாக கொண்டாடுங்கள்!

வாசகர்கள், விளம்பரதாரர்கள் அனைவருக்கும் தினசரி தளத்தின் இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்.

ஜெய் ஶ்ரீராம்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories