#ஜாதிக்கலப்பு | Sri #APNSwami #Writes

WhatsApp Image 2018 12 30 at 9.13.30 AM 1 - 2026

                        ஜாதிக்கலப்பு

     காலையிலிருந்தே ஆகாயத்துக்கும் பூமிக்குமாக எகிறி குதித்துக் கொண்டிருந்தார் ஆத்மநாத ஐயர்.   திருநெல்வேலிகாரர் நல்ல ஆசாரமானவர். தினந்தோறும் காலையில் ஸந்த்யாவந்தனம் தொடங்கி, பூஜைகள் எதையும் விடாமல் செய்து வருபவர்.  ஆபிசிலும் discipline  உடையவர். மொத்தத்தில் வியட்நாம் வீடு சிவாஜியை imagine செய்து கொண்டால் நமது ஆத்மநாத ஐயர் தான்.

 “I am going to write a letter to the Government…” அந்த காலத்து British Englishஐ       அட்சரம் பிசகாமல் அதே Accentடோட அழுத்திச் சொன்னார்.

     “என்ன கவர்மெண்ட்?…… முட்டாள்கள், மடையர்கள்? ப்ளாஸ்டிக்கை ஒழிச்சா மட்டும் போதுமா!! இத ஒழிக்க வேணாமா? என்ன அயோக்யத்தனம்?!! பொறுக்க முடியல! Intolerable!!”

    இப்போ மேஜர் சுந்தர்ராஜன் மாதிரி தமிழயும், இங்க்லீஷையும் மாத்தி மாத்தி சொன்னார்.

ஜாதி கலப்படம், ஜாதி கலப்படம்.  I am going to write to the authorities…

ALSO READ:  பிறரிடம் இருக்கும் அர்ப்பணிப்பு நம்மிடம் ஏன் இல்லை?

    இந்த ப்ராம்மணன் எடுத்ததெற்கெல்லாம் குதிக்கும்னு மீனாட்சி மாமிக்குத் தெரியும்.  ஆனா, இவர் ஜாதி கலப்படம்னு சொன்னதும் மாமிக்கு பகீர்னுத்து!!

    ‘அமெரிக்கால படிக்கிற இவா பையன் வேங்கடேஷ் ஏதாவது ஏடாகூடம் பண்ணிட்டானா!!’

    “நேத்து கூட Skypeல Chat பண்ணச்சே ஒண்ணும் சொல்லலயே?!!”

    “இதென்ன சோதனை! இன்னிக்கு சனி ப்ரதோஷம். நெல்லயப்பருக்கு ஒரு விளக்கு போடணும். அப்படியே திருவேங்கடநாதபுரம் போய், பெருமாளயும் சேவிச்சுட்டு வரணும் மனசுக்குள் வேகமாக வேண்டிண்டாள்!!

    “Idiots…. Stupids…..” அதுக்குள்ள மாமாவின் அர்ச்சனைகள் again and again going on…….

    மாமியின் BP எகிறிண்டேயிருக்கு. வேண்டாத தெய்வமில்லை. வேங்கடேசும் நல்ல பையன் தானே! பெருமாளே!” மனசுக்குள் மறுபடியும் ப்ரார்த்தனை.

    “அதுல வேற இந்த மனுஷன் கோவத்துல கவர்மெண்டுக்கு mail அனுப்பி, அதுல ஏதவது ஜாதி சண்டை வந்துடுமோ! ப்ராம்மணன் எப்படாப்பா மாட்டுவான்னு எல்லாரும் காத்திண்டிருக்காளே! இந்த அசட்டு ப்ராம்மணன் ஏடாகூடமாக ஏதாவது பண்ணக்கூடாதே!!” மறுபடியும் ப்ரார்த்தனை.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

    “ஏன்னா! என்னாச்சு? ஏதோ ஜாதி கீதீன்னு பேசறேளே! ஏதாவது ஜாதிக்கலவரமா?….. நமக்கெதுக்குன்னா வம்பு!!… “அட அசடேன்னு மனசுல சொல்லிண்டே, பொறுமையாக, பக்குவமாக ஆத்துக்காரருக்கு advice பண்ணா..

    “நீ சும்மாயிரு. இத நான் விடமாட்டேன்…. I will lodge the Complaint….” மறுபடியும் மேஜர் சுந்தர்ராஜன்.

    பொறுமையிழந்த மாமி, என்னான்னு சொல்லித் தொலையுங்கோளேன்னு கத்தினாள்….”

    இந்தக் கத்தலில் ச்ருதியிறங்கிய மாமா, மீனாட்சி! நேத்தி சாயங்கலம் மார்கெட்ல பூ வாங்கினேன் நன்னா மொக்கு, மொக்கா பாக்கவே நன்னா இருந்தது ரொம்ப நாளாச்சு… மொக்கு பூவுல பூஜை பண்ணின்னு, வாங்கிண்டு வந்தேன்“.

சரி, அதுக்கென்ன?” – மாமி.

    “அதுக்கென்னவா? நல்ல ஜாதிப்பூ… மலர்ந்தால், கமகமன்னு வாசனை வரும்னு பாத்தால், எல்லாம் கலப்பட பூ டி…. ஜாதிப்பூல மொத்தம் கலப்படம்….. எதுவுமே Original இல்ல… எல்லாம் காட்டுப்பூ… துளி கூட வாசன இல்ல… மொத்த பூவும் waste… definitely, I will complain to the authorities…..

ALSO READ:  ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

     மாமா சொல்லச் சொல்ல, பழையபடி, இது பைத்தியம் … இத ஒண்ணும் பண்ண முடியாதுன்னு மாமி பேசாமல் திரும்பிச் சென்றாள்.  விஷயம் ஒண்ணும் பெரிசா இல்லேன்றதால சாயங்காலம் கோவிலுக்கு போறது கூட reconsideration தான்.

மாமா விடாமல் இங்கிலீஷில் பேசிக் கொண்டிருந்தார்.

இது ஜாதிக்கலப்பூ.

அன்புடன்,

ஸ்ரீ ஏபிஎன் சுவாமி.

Sri APN Swami.

இது போன்ற கட்டுரைகளைப் படிக்க…
https://apnswami.wordpress.comமேலும்… நாட்டு நடப்புகளுடன் சுவையான ஸம்ப்ரதாய விஷயங்களை அறிந்திட https://apnswami.wordpress.com/blogpages/
மற்றவர்களுக்கும் பகிர்ந்திடுங்கள்… உங்கள் கருத்துக்களையும், சந்தேகங்களையும் பதிவு செய்யுங்கள்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

Topics

உசிலம்பட்டி திருமுருகன் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்!

உசிலம்பட்டியில் புகழ்பெற்ற திருமுருகன் திருக்கோவில் புனருந்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்-நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வழிபாடு செய்தனர்.

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

Entertainment News

Popular Categories