கோவிந்த பட்டாபிஷேகம்!

maharanyam sri muralidhara swami - 2026

துணிந்து தவறு செய்துவிட்டுப் பிறகு உணர்ந்தால், அவர்களது மனமே அவர்களைக் கொன்று விடும். ப்ரும்மா அப்படித்தான் துடித்துப்போனார்.

ஆனால் தேவேந்திரனுக்கோ இது பழக்கமான ஒன்று. இருந்தாலும் இப்போது நேரடியாக பகவானிடமே அபசாரப்பட்டுவிட்டதால், தனியாகச் செல்ல பயந்துகொண்டு காமதேனுவை அழைத்துச் சென்றான்.

தனியாக கோவர்தன மலைமீது ஒயிலாக அமர்ந்திருந்த கோபாலனை நோக்கி காமதேனு ஓடினாள். அவள் பின்னாலேயே தயங்கி தயங்கிச் சென்ற இந்திரன் பகவானின் சரணங்களில் விழுந்தான். ஐராவதத்தை சற்று தொலைவில் நிறுத்திவைத்திருந்தான்.

கண்ணன் முறுவலோடு பேசாமல் இருக்க மன்னித்து விடும்படி ப்ரார்த்தனை செய்தான். கண்ணனோ, நீ செய்வது மகத்தான பணி. என் நியமனத்தில் இருந்துகொண்டு நீ சேவை செய்கிறாய் என்று எப்போதும் நினைவில் கொள் என்றான்.

காமதேனு அழ ஆரம்பித்தாள்.  கோலோக நாதனாக இனி இந்திரனை ஏற்க முடியாது. என் குழந்தைகளான பசுக்களையும் பச்சிளம் கன்றுகளை கொல்லத் துணிந்தான் இந்த இந்திரன். இனி நீரே எமது தலைவர். கோலோக நாதனாக உமக்கே பட்டாபிஷேகம் செய்கிறோம் என்றாள்.

பகவான் இந்திரனைப் பார்க்க, அவன் தலையைக் கவிழ்ந்துகொண்டு
அப்படியே செய்யலாம் ஸ்வாமி என்றான். உடனே ஐராவதத்தை திரும்பிப் பார்க்க அது ஆகாச கங்கை தீர்த்தத்தை கண்ணன் மீது வர்ஷித்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆகாயத்தில் சூழ்ந்து நின்று

கோவிந்த கோவிந்த என்ற நாமத்தை இசைக்க, காமதேனுவும் தன் க்ஷீரத்தால் பகவானுக்கு அபிஷேகம் செய்தது.

பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான். கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.

Kannan - 2026

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்

ராகம் : குறிஞ்ஜி
தாளம் : ஆதி

பல்லவி
அபிஷேகம் அபிஷேகம் – இன்று நம்
ப்ரேமிக வரதனுக்கு பட்டாபிஷேகம் || அ ||

சரணம்
1) இந்திரன் வந்து தலை வணங்க
காமதேனு பால் பொழிய
ஆகாச கங்கையுடன் ஐராவதமும் வர
தேவர்கள் பாட்டுப் பாடி பூமாரி பொழிய
– கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||

2) மூன்றெழுத்து ப்ரணவம் போல் நாமமிது
மூன்று மாயையையும் போக்கி
மூன்றுலகத்தையும் காக்கும்
– கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் சில…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories