கோவிந்த பட்டாபிஷேகம்!

maharanyam sri muralidhara swami - 2026

துணிந்து தவறு செய்துவிட்டுப் பிறகு உணர்ந்தால், அவர்களது மனமே அவர்களைக் கொன்று விடும். ப்ரும்மா அப்படித்தான் துடித்துப்போனார்.

ஆனால் தேவேந்திரனுக்கோ இது பழக்கமான ஒன்று. இருந்தாலும் இப்போது நேரடியாக பகவானிடமே அபசாரப்பட்டுவிட்டதால், தனியாகச் செல்ல பயந்துகொண்டு காமதேனுவை அழைத்துச் சென்றான்.

தனியாக கோவர்தன மலைமீது ஒயிலாக அமர்ந்திருந்த கோபாலனை நோக்கி காமதேனு ஓடினாள். அவள் பின்னாலேயே தயங்கி தயங்கிச் சென்ற இந்திரன் பகவானின் சரணங்களில் விழுந்தான். ஐராவதத்தை சற்று தொலைவில் நிறுத்திவைத்திருந்தான்.

கண்ணன் முறுவலோடு பேசாமல் இருக்க மன்னித்து விடும்படி ப்ரார்த்தனை செய்தான். கண்ணனோ, நீ செய்வது மகத்தான பணி. என் நியமனத்தில் இருந்துகொண்டு நீ சேவை செய்கிறாய் என்று எப்போதும் நினைவில் கொள் என்றான்.

காமதேனு அழ ஆரம்பித்தாள்.  கோலோக நாதனாக இனி இந்திரனை ஏற்க முடியாது. என் குழந்தைகளான பசுக்களையும் பச்சிளம் கன்றுகளை கொல்லத் துணிந்தான் இந்த இந்திரன். இனி நீரே எமது தலைவர். கோலோக நாதனாக உமக்கே பட்டாபிஷேகம் செய்கிறோம் என்றாள்.

ALSO READ:  பாஜக.,விலிருந்து விலகி, பழைய இயக்கத்தை புதுப்பித்தார் அண்ணாமலை!

பகவான் இந்திரனைப் பார்க்க, அவன் தலையைக் கவிழ்ந்துகொண்டு
அப்படியே செய்யலாம் ஸ்வாமி என்றான். உடனே ஐராவதத்தை திரும்பிப் பார்க்க அது ஆகாச கங்கை தீர்த்தத்தை கண்ணன் மீது வர்ஷித்தது. முப்பத்து முக்கோடி தேவர்களும் ஆகாயத்தில் சூழ்ந்து நின்று

கோவிந்த கோவிந்த என்ற நாமத்தை இசைக்க, காமதேனுவும் தன் க்ஷீரத்தால் பகவானுக்கு அபிஷேகம் செய்தது.

பகவான் கோவிந்தன் என்ற திருநாமத்தோடு கோலோக நாதனாக விளங்கினான். கோலோகத்தில் பகவான் ராதையுடன் அமர்ந்து ஆயிரக்கணக்கான பக்தர்களுடன் இன்றும் சேவை சாதித்துக்கொண்டிருக்கிறான்.

Kannan - 2026

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் மதுரகீதம்

ராகம் : குறிஞ்ஜி
தாளம் : ஆதி

பல்லவி
அபிஷேகம் அபிஷேகம் – இன்று நம்
ப்ரேமிக வரதனுக்கு பட்டாபிஷேகம் || அ ||

சரணம்
1) இந்திரன் வந்து தலை வணங்க
காமதேனு பால் பொழிய
ஆகாச கங்கையுடன் ஐராவதமும் வர
தேவர்கள் பாட்டுப் பாடி பூமாரி பொழிய
– கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||

2) மூன்றெழுத்து ப்ரணவம் போல் நாமமிது
மூன்று மாயையையும் போக்கி
மூன்றுலகத்தையும் காக்கும்
– கோவிந்த பட்டாபிஷேகம் || அ ||

ALSO READ:  இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

மஹாரண்யம் ஸ்ரீ ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜியின் உபன்யாசத்தில் கேட்ட ரஸானுபவங்களில் சில…

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Topics

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம்; நடவடிக்கை தேவை!

கோயில் கருவறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் படம் வைக்கப்பட்ட விவகாரத்தில், பக்தர்கள் முகம் சுளித்துள்ளனர். இச்செயலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’

பஞ்சாங்கம் ஜூன் 26 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

வருமானத்தில் கலக்கும் வந்தேபாரத் ரயில்கள்! தென் மாநிலங்களில் அதிக வரவேற்பு!

பாரதத்திலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்ட நடுத்தர அதிவேக ரயில் இது. அந்த வகையில் இந்திய ரயில்வே தற்சார்பு நிலையை எட்டி இருப்பதற்கான அடையாளம் தான் வந்தே பாரத் ரயில்களின் வளர்ச்சி!

மதுரை டிவிஎஸ் நகர் கோதண்ட ராமர் கோவிலில் மகா சம்ப்ரோக்ஷணம்!

மதுரை மாவட்டம், பழங்காநத்தம் அருகே உள்ள டிவிஎஸ் நகர் பகுதியில் அமைந்துள்ள மதுரை டிவிஎஸ் குடும்பத்திற்கு சொந்தமான அருள்மிகு கோதண்ட ராமர் திருக்கோவிலில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக நடைபெற்றது.

பஞ்சாங்கம் – ஜூன் 24 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories