ருஷி வாக்கியம் (37) – வாழ்க்கை ஒரு வரம்!

jara1 - 2026
“மா புரா ஜர ஸோம்ருதா: !” – அதர்வண வேதம்.

“ஓ மனிதா! நீ கிழத்தன்மையடைவதற்குள் மரணமடையாதே!”

இந்த வாக்கியத்தின் மூலம் மனிதன் பரிபூரணமான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற வேதத்தின் வாழ்த்து வெளிப்படுகிறது.

“தீர்க்காயுஷ்மான் பவ!” என்று பெரியவர்கள் ஆசீர்வதிப்பது நம் சமுதாயத்தின் இன்றியமையாத வழக்கம்.

ஆயுள் என்பது ஒரு வாய்ப்பு. உயிர் பிழைத்திருந்தால் எந்தக் கணத்திலாவது நம்மிடம் திடீரென்று மாற்றம் ஏற்பட்டு உத்தமமான நிலையை அடைய முயற்சிக்க இயலும். அதனால்தான் வாழ்க்கையைப் போன்று மிகவும் மதிப்புடையது வேறொன்றுமில்லை என்கிறார்கள்.

வாழ்க்கையின் மதிப்பை வேதக் கலாச்சாரம் தெளிவாகவும் மிக அழகாகவும் எடுத்துரைக்கிறது. அனைத்து இந்திரியங்களும் புஷ்டியாக பணிசெய்து வாழ்க்கை முழுவதும் தார்மீக புத்தியோடு தர்ம வழியில் சம்பாதித்து இகலோகத்திலும் பரலோகத்திலும் நிறைநிலை எய்தும் வழியை வேதம் போதிக்கிறது.

மனிதனுக்கு பால்யம், கௌமாரம், யௌவனம், வயோதிகம் என்ற நான்கு நிலைகள் உள்ளன. இந்த நான்கையும் மனிதன் முழுமையாக அனுபவிக்க வேண்டும். அகால மரணத்தின் வாயிற்படக்கூடாது. எப்படிப்பட்ட பலவீனமான கணத்திலும் வாழ்க்கையின் மீது விரக்தியை வளர்த்துக் கொள்ளக் கூடாது. வாழ்வின் மீது அன்பும் விருப்பமும் மிகவும் முக்கியம். சரியான சிந்தனைகளோடு கூடிய ஜீவிதம் மிக இன்றியமையாதது.
வாழ்வின் இந்தக் கணம் மிக கடினமானதாக தோன்றினாலும் அடுத்த கணம் மிக அதிக சுகமாக தோன்றக்கூடும். எனவே எந்த நேரத்திலும் வாழ்க்கையை வெறுக்கக்கூடாது.

ALSO READ:  பராபவ - பெயர் எப்படி இருந்தாலும், நன்மை பயக்கட்டும்!

ஜீவிதம் ஒரு வரம். பால்யம், கௌமாரம், யௌவனம், வயோதிகம் – இவற்றில் ஏற்படும் பல்வேறு அனுபவங்களையும், ஒவ்வொரு நிலையிலும் சாதிக்க வேண்டிய கடமைகளையும் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும். வாழ்க்கை முழுவதும் கடமையாற்றுவதில் இருந்து விலகக்கூடாது. எந்த கணத்தில் வாழ்க்கை முடிந்து போனாலும் அதன் பிறகு செய்ய வேண்டிய கடமை எதுவுமற்று இருக்க வேண்டும். எனவே பரிபூரண முழுமையான வாழ்க்கையை வாழ விரும்ப வேண்டும்.

முதுமை வேறு. கிழத்தன்மை வேறு. கிழத்தன்மை என்றால் க்ஷீணித்துப் போவது. முதியவராதல் என்றால் பெரியவராவது. முதுமை சகஜமாக வரக்கூடியது. ஆனால் ‘ஜரா’ என்னும் கிழத்தன்மை நடத்தையில் ஏற்படும் தவறுகளால் விரைவாகவே ஏற்படக்கூடியது. சரியான உணவு, சரியான பொழுதுபோக்கு, ஆரோக்கியமான பழக்க வழக்கங்கள், உடற்பயிற்சி, நேர்மறை எண்ணங்கள், யோகாப்பியாசம் போன்றவை இல்லாவிட்டால் வயோதிகத்திற்கு பதில் சரீரம் கிழத்தன்மையடைகிறது.

நாம் முதுமையில் கூட கிழவனாகாமல் இருக்க முடியும். மீதியுள்ள மூன்று நிலைகளிலும் வெறும் போகத்தை அனுபவித்ததை மட்டுமே முக்கியமாக கருதாமல் சரியான வரைமுறையோடு கூடிய நியமங்களை கடைபிடித்து வந்தால் முதுமை, கிழத்தன்மை அடையாது. க்ஷீணித்து, உடல் குன்றி, நோய்வாய்ப்பட்ட சரீரம் ‘ஜரா’ என்னும் கிழத்தன்மையின் இயல்பு.
jara2 - 2026

ALSO READ:  வெல்டன் அமித்ஷா… வாழ்த்துகள் அண்ணாமலை!

ஆயின், “ஜாதஸ்ய ஹித்ருவோ ம்ருத்யு: !” – “மரணம் கட்டாயம் சம்பவிக்க கூடியது”. அதற்கு முந்தைய அவஸ்தை ‘ஜரா’. அது இயல்பாகவே நேர கூறியதுதான். இத்தனை ஆண்டுகள் கஷ்டப்பட்டு சாதனை செய்த தேகம் இயற்கையின் இயல்பாக இறுதியாக கிழத்தன்மைக்கு உட்படுகிறது. அத்தகைய நிலைமை வந்த பிறகு மரணம் ஏற்பட வேண்டும். அதுவரை மரணத்தை அருகில் நெருங்க விடக்கூடாது.

இலை உதிரும் முன்பு பழுத்துப் போகும். முதுமையின் இறுதி நிலையில் ‘ஜரா’ வந்து சேரும். அது வரை வாழ்ந்து வரத்தான் வேண்டும். அதற்குள் மரணம் வந்து விடக் கூடாது. இது நம்முடைய தீர்க்காயுளை விரும்பும் வேதமாதாவின் ஆசீர்வசனம்.

நீண்ட ஆயுளுக்கு தர்மம் இன்றியமையாதது. தர்ம மயமான ஸ்ரீராமனின் அரசாட்சியில் “பெரியவர்கள் பிள்ளைகளுக்கு பிரேத கர்மா செய்ய வேண்டிய நிலை ஏற்படவில்லை” என்று வால்மீகி வர்ணிக்கிறார்.

“ந சஸ்ம வ்ருத்த பாலானாம் ப்ரேத கார்யாணி குர்வதே !” என்கிறார்.

அகால மரணம் ஏற்படக்கூடாது என்று விரும்பினால் அகால மரணங்களுக்கு காரணமான அதர்மங்கள் இருக்கக்கூடாது என்ற பொறுப்பும் எச்சரிக்கையும் கூட முக்கியம்.

ALSO READ:  வெள்ளை அறிக்கை வெளியிடும் முன்... தேர்தல் அறிக்கையைப் பார்க்கவும்!

“வ்ருத்தேஷு சத்ஸ பாலானாம் நாஸீன் ம்ருத்யு பயம் ததா !!” –

“தர்ம மயமான ராமனின் பரிபாலனத்தில் வயோதிகர்கள் உயிரோடு இருக்கையில் பாலகர்கள் மரணமடையவில்லை” என்பது இராமாயணத்தின் வர்ணனை.

திடீர் மரணங்கள், விபத்தினால் ஏற்படும் மரணங்கள் போன்றவை கூட ஏற்படக் கூடாது. அனைவரும் மகிழ்ச்சியுடன் பூரண சுகத்தை அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு தேவையான அடித்தளம் தார்மீகமான வாழ்க்கை என்பதை மறக்கக்கூடாது.

மனிதர்களின் முழுமையான வாழ்க்கையை வேதம் விரும்புகிறது. வேதம் கூறியுள்ள தர்மம் அனைத்தும் அத்தகைய லட்சிய சாதனைக்காகவே என்பதை அறிய வேண்டும்.

தெலுங்கில் – பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா
தமிழில் – ராஜி ரகுநாதன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories