“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?” ( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 13238992 246319219064254 1237027586143027918 n 1 - 2026

(“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..”-சொன்ன பெரியவாளின் அனுக்ரஹம்) (தெரிந்த சம்பவம்-ஆனால் இது புது நடை)

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை பிரதோஷம் மாமா, மகானின் முன் நிற்கிறார். முகத்தில் சோகம் அப்பி இருந்தது. பார்வையினாலேயே கவனித்து விட்ட மகான்….

“என்ன விஷயம்? ஏதோ விசாரம் இருக்காப்போல இருக்கே….”என்றார்.

“ஒண்ணுமில்லே…என்னான்னு சொல்ல முடியல்லே.. நான் ஒரு இரண்டும் கெட்டானா இருக்கேன்… பெரியவாளையும் பார்த்துண்டே இருக்கணும். அதேசமயம் உத்தியோகத்தையும் கவனிக்கணும். எனக்கு இது சௌகர்யமாபடலை. லௌகீகத்தில் மாட்டிண்டு விழிக்கிறேன்.. எதை விடறது… எத்தை வச்சுக்கிறது. புரியவில்லையே..” என்று மாமா அங்கலாய்க்கிறார்.

“லௌகீகக் கடமைகள் ஒண்ணு இருக்கு…. அதை முடிச்சுட்டு தான் கடவுளை நினைக்கணும். பகவத்கீதையே என்ன சொல்லியிருக்கு… முதலில் கடமையைச் செய்…பிறகு கடவுளை நினை.. அதானே, நீதான் எப்பவுமே என்னையே நினைச்சுண்டு இருக்கியே . உனக்கென்ன கஷ்டம்…?”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

“ஒரு ஆபீசர் இருக்கான்…எனக்கு மேலதிகாரி…”

“ஏன் உன்னை அவன் ரொம்பப் படுத்தறானா?”

“என்னாலே அதையெல்லாம் தாங்கிக்கவே முடியல்லே.. அதைத்தான் சொல்ல வந்தேன்.

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

என்று பெரியவா அழுத்தம் திருத்தமா கேட்டதற்கு பிரதோஷம் மாமாவுக்கு அப்போது அர்த்தம் விளங்கவில்லை.

அடுத்த பிரதோஷத்திற்கு மாமா வரும்போது, அந்த ஆபீசர் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார் என்கிற நல்ல செய்தியோடு வந்தார்.

“எனக்காக மகாப் பிரபு இந்த நல்ல காரியத்தை செய்திருக்கிறேள்.

“நான் என்னடா பண்ணேன்?”

“இப்போ ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்கிறார்… எனக்கு மிகவும் அனுசரணையாக இருக்கார்..”

மகான் பலமாகச் சிரித்தபடி…

“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..” இது ஆனந்த சிரிப்பு.

“பெரியவா அனுக்கிரகத்திலே அவரை அங்கிருந்து மாத்திட்டேள்” என்று பிரதோஷம் மாமா மீண்டும் ஒரு முறை சொல்கிறார்.

“நான் எங்கேடா மாத்தினேன்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஆனந்தமாகச் சிரித்தார் மகான்.

அவரவர்கள் மனதில் உணரும்படியாக மட்டும் பல காரியங்களைப் பெரியவா செய்திருக்கிறார் என்பதே உண்மை.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 06 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

பிரதோஷம் மாமா அடிக்கடி சொல்லுவார்.

“பெரியவாளை எல்லோரும் கொண்டாட வேண்டும். அகில உலகமும் இந்த மகானை உணர வேண்டும். ஆதிசங்கரர் பகவத்பாதாவின் மறு அவதாரம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பரவசம் பொங்கும் குரலில் எடுத்துரைப்பார்… அவரது மனதை அவ்வளவு தூரம் பூரணமாக பெரியவா ஆட்கொண்டிருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

Topics

பஞ்சாங்கம் ஜூலை 11 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

Entertainment News

Popular Categories