“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?” ( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 13238992 246319219064254 1237027586143027918 n 1 - 2026

(“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..”-சொன்ன பெரியவாளின் அனுக்ரஹம்) (தெரிந்த சம்பவம்-ஆனால் இது புது நடை)

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை பிரதோஷம் மாமா, மகானின் முன் நிற்கிறார். முகத்தில் சோகம் அப்பி இருந்தது. பார்வையினாலேயே கவனித்து விட்ட மகான்….

“என்ன விஷயம்? ஏதோ விசாரம் இருக்காப்போல இருக்கே….”என்றார்.

“ஒண்ணுமில்லே…என்னான்னு சொல்ல முடியல்லே.. நான் ஒரு இரண்டும் கெட்டானா இருக்கேன்… பெரியவாளையும் பார்த்துண்டே இருக்கணும். அதேசமயம் உத்தியோகத்தையும் கவனிக்கணும். எனக்கு இது சௌகர்யமாபடலை. லௌகீகத்தில் மாட்டிண்டு விழிக்கிறேன்.. எதை விடறது… எத்தை வச்சுக்கிறது. புரியவில்லையே..” என்று மாமா அங்கலாய்க்கிறார்.

“லௌகீகக் கடமைகள் ஒண்ணு இருக்கு…. அதை முடிச்சுட்டு தான் கடவுளை நினைக்கணும். பகவத்கீதையே என்ன சொல்லியிருக்கு… முதலில் கடமையைச் செய்…பிறகு கடவுளை நினை.. அதானே, நீதான் எப்பவுமே என்னையே நினைச்சுண்டு இருக்கியே . உனக்கென்ன கஷ்டம்…?”

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 15 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

“ஒரு ஆபீசர் இருக்கான்…எனக்கு மேலதிகாரி…”

“ஏன் உன்னை அவன் ரொம்பப் படுத்தறானா?”

“என்னாலே அதையெல்லாம் தாங்கிக்கவே முடியல்லே.. அதைத்தான் சொல்ல வந்தேன்.

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

என்று பெரியவா அழுத்தம் திருத்தமா கேட்டதற்கு பிரதோஷம் மாமாவுக்கு அப்போது அர்த்தம் விளங்கவில்லை.

அடுத்த பிரதோஷத்திற்கு மாமா வரும்போது, அந்த ஆபீசர் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார் என்கிற நல்ல செய்தியோடு வந்தார்.

“எனக்காக மகாப் பிரபு இந்த நல்ல காரியத்தை செய்திருக்கிறேள்.

“நான் என்னடா பண்ணேன்?”

“இப்போ ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்கிறார்… எனக்கு மிகவும் அனுசரணையாக இருக்கார்..”

மகான் பலமாகச் சிரித்தபடி…

“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..” இது ஆனந்த சிரிப்பு.

“பெரியவா அனுக்கிரகத்திலே அவரை அங்கிருந்து மாத்திட்டேள்” என்று பிரதோஷம் மாமா மீண்டும் ஒரு முறை சொல்கிறார்.

“நான் எங்கேடா மாத்தினேன்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஆனந்தமாகச் சிரித்தார் மகான்.

அவரவர்கள் மனதில் உணரும்படியாக மட்டும் பல காரியங்களைப் பெரியவா செய்திருக்கிறார் என்பதே உண்மை.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூன் 14 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பிரதோஷம் மாமா அடிக்கடி சொல்லுவார்.

“பெரியவாளை எல்லோரும் கொண்டாட வேண்டும். அகில உலகமும் இந்த மகானை உணர வேண்டும். ஆதிசங்கரர் பகவத்பாதாவின் மறு அவதாரம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பரவசம் பொங்கும் குரலில் எடுத்துரைப்பார்… அவரது மனதை அவ்வளவு தூரம் பூரணமாக பெரியவா ஆட்கொண்டிருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories