December 5, 2025, 6:18 PM
26.7 C
Chennai

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?” ( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

( பிரதோஷம் மாமாவிற்கு அனுக்ரஹம்) 13238992 246319219064254 1237027586143027918 n 1 - 2025

(“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..”-சொன்ன பெரியவாளின் அனுக்ரஹம்) (தெரிந்த சம்பவம்-ஆனால் இது புது நடை)

தொகுத்தவர்-ரா.வேங்கடசாமி
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஒரு தடவை பிரதோஷம் மாமா, மகானின் முன் நிற்கிறார். முகத்தில் சோகம் அப்பி இருந்தது. பார்வையினாலேயே கவனித்து விட்ட மகான்….

“என்ன விஷயம்? ஏதோ விசாரம் இருக்காப்போல இருக்கே….”என்றார்.

“ஒண்ணுமில்லே…என்னான்னு சொல்ல முடியல்லே.. நான் ஒரு இரண்டும் கெட்டானா இருக்கேன்… பெரியவாளையும் பார்த்துண்டே இருக்கணும். அதேசமயம் உத்தியோகத்தையும் கவனிக்கணும். எனக்கு இது சௌகர்யமாபடலை. லௌகீகத்தில் மாட்டிண்டு விழிக்கிறேன்.. எதை விடறது… எத்தை வச்சுக்கிறது. புரியவில்லையே..” என்று மாமா அங்கலாய்க்கிறார்.

“லௌகீகக் கடமைகள் ஒண்ணு இருக்கு…. அதை முடிச்சுட்டு தான் கடவுளை நினைக்கணும். பகவத்கீதையே என்ன சொல்லியிருக்கு… முதலில் கடமையைச் செய்…பிறகு கடவுளை நினை.. அதானே, நீதான் எப்பவுமே என்னையே நினைச்சுண்டு இருக்கியே . உனக்கென்ன கஷ்டம்…?”

“ஒரு ஆபீசர் இருக்கான்…எனக்கு மேலதிகாரி…”

“ஏன் உன்னை அவன் ரொம்பப் படுத்தறானா?”

“என்னாலே அதையெல்லாம் தாங்கிக்கவே முடியல்லே.. அதைத்தான் சொல்ல வந்தேன்.

“அவனாலே உன்னை என்னடா பண்ண முடியும்?”

என்று பெரியவா அழுத்தம் திருத்தமா கேட்டதற்கு பிரதோஷம் மாமாவுக்கு அப்போது அர்த்தம் விளங்கவில்லை.

அடுத்த பிரதோஷத்திற்கு மாமா வரும்போது, அந்த ஆபீசர் டிரான்ஸ்பர் ஆகிவிட்டார் என்கிற நல்ல செய்தியோடு வந்தார்.

“எனக்காக மகாப் பிரபு இந்த நல்ல காரியத்தை செய்திருக்கிறேள்.

“நான் என்னடா பண்ணேன்?”

“இப்போ ஒரு நல்ல ஆபீசர் வந்திருக்கிறார்… எனக்கு மிகவும் அனுசரணையாக இருக்கார்..”

மகான் பலமாகச் சிரித்தபடி…

“உனக்கு அனுசரணையாக இருந்தா நல்லவன்… இல்லாட்டி கெட்டவனாக்கும்..” இது ஆனந்த சிரிப்பு.

“பெரியவா அனுக்கிரகத்திலே அவரை அங்கிருந்து மாத்திட்டேள்” என்று பிரதோஷம் மாமா மீண்டும் ஒரு முறை சொல்கிறார்.

“நான் எங்கேடா மாத்தினேன்?” என்ற கேள்வியைக் கேட்டுவிட்டு, ஆனந்தமாகச் சிரித்தார் மகான்.

அவரவர்கள் மனதில் உணரும்படியாக மட்டும் பல காரியங்களைப் பெரியவா செய்திருக்கிறார் என்பதே உண்மை.

பிரதோஷம் மாமா அடிக்கடி சொல்லுவார்.

“பெரியவாளை எல்லோரும் கொண்டாட வேண்டும். அகில உலகமும் இந்த மகானை உணர வேண்டும். ஆதிசங்கரர் பகவத்பாதாவின் மறு அவதாரம் என்பதை எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும்” என்று பரவசம் பொங்கும் குரலில் எடுத்துரைப்பார்… அவரது மனதை அவ்வளவு தூரம் பூரணமாக பெரியவா ஆட்கொண்டிருந்தார் என்பதன் வெளிப்பாடுதான் இது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories