December 5, 2025, 7:43 PM
26.7 C
Chennai

அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே!

“அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே”

( சபரிமலை மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் சொன்ன தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் ஸ்ரீமடம் பாலுவிற்கு ஏற்பட்ட உணர்ச்சிப் பெருக்கு)

கட்டுரையாளர்-ரா.வேங்கடசாமி 18194655 1539007332811093 2764588660202570986 n - 2025
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.
நன்றி- குமுதம் லைஃப்ஒரு பகுதி.2017

ஸ்ரீமடம் பாலு மகாபெரியவாளின் நிழல் என்றுதான் சொல்ல வேண்டும். 1954-ம் வருடம் முதல் மகானை மிகவும் கண்ணும் கருத்துமாக கவனித்து வந்தவர்.

ஒரு சமயம்,மகா பெரியவாளுக்கு மார்வலி வந்து அவஸ்தைப்படுவதைக் கண்ணுற்ற பாலு. அதற்காகவே சபரிமலை ஐயப்பனிடம் வேண்டிக் கொண்டார். எனவே சபரிமலை சென்றுவர மகாபெரியவாளிடம் உத்தரவு கேட்டார்.

கேலியான புன்னகையுடன்,

“என்னடா உன் அப்பா,தாத்தா யாராவது சபரி மலைக்குப் போயிருக்காளா? உனக்கென்ன தெரியுமுன்னு நீ போறேங்கறே?” என்று கேட்டார் ஆசார்யா.

“அவா யாரும் போனதில்லே பெரியவா. பெரியவாளுக்கு அடிக்கடி வரும் மார்வலி சரியாகணும்னு ஐயப்பனை வேண்டிண்டேன். அதனாலே மலைக்குப் போயிட்டு வரேன்” என்று மகானிடம் வேண்டி நின்றார் பாலு.

பாலு சொன்னதைக் கேட்ட மகான் சற்று நேரம் யோசிப்பது போலிருந்தது – பிறகு சொன்னார்.

“நீ வெள்ளை வேட்டியோடேயே போலாம் – நீ பிரம்மச்சாரிதானே, அதனாலே தோஷமே இல்லே. ஆனால் மலைக்குப் போனதும் சிகப்புத் துண்டைக் கட்டிக்கோ. வெறும் கையோட போகாதே. தேங்காயும், நெய்யும் கொண்டுபோ” என்று அதிசயிக்கத்தக்க வகையில் ஒரு ஐயப்ப பக்தர் மாலை போட்டுக் கொள்ளும்போதும்,இருமுடி கட்டிக் கொள்ளும் போதும் நடக்கும் சம்பிரதாயங்களை ஸ்ரீமகாபெரியவாளே அனுக்கிரகித்தார்.

பாலு சபரிமலையை அடைந்து ஐயப்ப தரிசனத்திற்குச் சென்றபோது சன்னதியில் இருந்த மேல் சாந்தி என்னும் அர்ச்சகர் இவரை எந்த ஊர் என்று விசாரித்தார். இவர் தான் காஞ்சி மடத்தில் இருந்து வருவதாகச் சொன்னவுடன், “அங்கே பெரிய திருமேனி எப்படி இருக்கார்?” என்று மகாபெரியவாளைப் பற்றி விசாரித்தார். இவர் பெரியவாளுக்காக வேண்டிக் கொள்ளவே வந்ததாகச் சொன்னார். உடனே மேல் சாந்தி சொன்னார்.

“அந்தப் பெரிய திருமேனியாலேதான் இப்போ வெள்ளமோ, பூகம்பமோ இல்லாமே நாடே சுபீட்சமா இருக்கு.என்னோட 24 நமஸ்காரங்களைச் சொல்லு. நீ அந்தத் திருமேனியை விடாதே. அந்த சன்னிதானத்திலேயே இரு.அவர் ஈஸ்வரன் அவதாரம். அவரை விட்டுப் போகாதே.  போகமாட்டேன்னு சத்யம் செய்துகொடு. அப்பத்தான் பிரசாதம் கொடுத்து அனுப்புவேன்.”

மகாபெரியவாளின் உடல் உபாதைக்காக மனசு விசாரத்தோடு சன்னதிக்கு வந்த ஸ்ரீமடம் பாலு, அந்த ஐயப்பன் சன்னதியில் இருந்தே,”அவர் ஈஸ்வர அவதாரம், அவரைவிட்டுப் போகாதே” என்னும் தெய்வவாக்கு தெய்வ ரகசியமாக உணர்த்தப்பட நேர்ந்ததில் அவருக்கு உணர்ச்சிப் பெருக்கினால் கண்களிலிருந்து நீர் பெருகியது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories