‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!

‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!

( மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு (சிறு வயதில் நடந்த அனுபவம்)

(பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?)

கட்டுரை-ரா.வேங்கடசாமி62049358 894495094236897 3477664543176392704 n 3 - 2026
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு பல வருடங்களுக்கு முன் (இளமையில்)ஏற்பட்ட அனுபவம்.

அப்போது மகான் ஹைதராபாத் அருகே ஒரு சிறு ஊரில் முகாமிட்டிருந்தார்.
அப்போது செல்லம்மாவுக்கு சிறுவயது. அவரது தந்தை ஒரு மகாவித்வான். வசதிமிக்கவர். அதனால் செல்லம்மாள் நிறைய நகைகள் அணிந்து கொண்டு இருப்பார்.
மகானைத் தரிசிக்க வந்த தந்தையும்,மகளும், அந்தக் கருணைவள்ளலின் அருளைத் தொடர்ந்து சில நாட்கள் அந்த ஊரில் தங்கினர்.

செல்லம்மாவுக்கு எல்லாமே மகான்தான். அப்படி ஓர் ஈடுபாடு,இளமையில் வந்தது.

ஒருநாள் பிற்பகலில் தனது உறவினர் இருவருடன் செல்லம்மா சில சாமான்கள் வாங்கி வர கடைத்தெருவிற்கு போயிருந்தார். எல்லா சாமான்களையும் விடாமல் வாங்க,பல கடைகள் ஏறி இறங்க வேண்டியதாயிற்று.அதனால் நேரம் அதிகமாகி மாலை மறைந்து லேசாக இருள் பரவ ஆரம்பித்தது.

தங்கள் இருப்பிடம் திரும்ப ஒரு டேங்கா வேண்டும் என்றும், குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு, அதில் ஏறிப் புறப்பட்டனர். சிறிது நேரந்தான் வண்டி நேர்பாதையில் சென்றது. பிறகு திடீரென திசைமாறி மிகவும் அருகில் இருந்த ஜனநடமாட்டம் இல்லாத தெருவிற்குள் நுழைந்தது.வண்டியில் இருந்த பெண்கள்
பயந்து விட்டனர்.அவர்கள் பதறிப்போய் வண்டிக்காரனிடம் “இந்த வழியில் ஏன் போகிறாய்” என்று கேட்ட போது, அவன் சிரித்துக்கொண்டே, வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான். அத்துடன் நில்லாது பெண்களைப் பார்த்து விஷமமாகச் சிரித்தான்.அவன் பார்வை செல்லம்மா மீதும், அவள் போட்டிருந்த நகைகள் மீதும் படர்ந்தது.

பெண்கள் பயத்தோடு என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டு இருந்தனர்.
அதே சமயம் மகான் மாலை வேளையில் பூஜை ஆரம்பிக்க இருந்தார்.அவரது கண்கள் சுற்றி அமர்ந்திருந்த பக்தர் கூட்டத்தின் மீது படர்ந்தது. பின் தன் அருகில் இருந்த சிப்பந்தியிடம், “வித்வானும் பெண்ணும் எங்கே?” என்று கேட்டபோது, “சில பொருட்கள் வாங்க அவர்கள் கடைக்குச் சென்று இருக்கிறார்கள்” என்று பதில் வந்தது.

“இது புது ஊராயிற்றே…அவர்களுக்கு பாஷை கூடப் புரியாதே….நீ உடனே வண்டியை எடுத்துக் கொண்டு போய், அவாளைப் பார்த்துட்டு வா ” என்றார்.

புறப்பட இருந்தவரை திடீரென அழைத்து, போகும் மார்க்கத்தைக் கேட்ட பின்னர் மகான் சொன்னார்.

“வேண்டாம்…நீ நேர் வழியில் போகாதே…அதுக்குப் பக்கத்தில் ஒரு குறுக்கு சந்து இருக்கும் பார்….. அப்படிப் போ…” என்றார்.

பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?

வண்டிக்காரன் பெண்களைப் பார்த்து வக்ரமாகச் சிரித்த அதே நேரத்தில் மடத்துச் சிப்பந்தி அங்கே வந்து நிற்க …வண்டிக்காரன் பயந்து போய் வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். செல்லம்மாளும் மற்றவர்களும் அன்று மகானால் காப்பாற்றப்பட்டனர்.

வண்டிக்காரன் கெட்ட எண்ணத்துடன் இருக்கிறான் என்று தெரிந்தவுடன்.செல்லம்மாள் ஒரே ஒரு வினாடி மகானை நினைத்ததன் விளைவு இது.

தன்னை மனதார நம்பிய பக்தர்களை என்றுமே அவர் கைவிட்டதே இல்லை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

Topics

பஞ்சாங்கம் மே 16 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வேண்டுமென்றே விஜய்யை வம்புக்கு இழுக்கும் உதயநிதி!

ஆனந்த் வெங்கட் -சனாதனம் ஒழிக்கப்படவேண்டும் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறார் உதயநிதி....

சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்: சட்டசபையில் உதயநிதி பேச்சு!

உதயநிதியின் பேச்சுக்கு அரசியல் மட்டத்தில் கடும் எதிர்ப்புகளை பாஜக., மற்றும் இந்து இயக்கங்கள் பதிவு செய்து வருகின்றன.

தமிழக பாஜக.,வுக்கான பஞ்ச சீலக் கொள்கைகள் இவையாக இருக்கட்டும்!

பி.ஆர். மகாதேவன்அதிமுக 2006-ல் வாங்கிய வாக்குகள் : சுமார் ஒரு கோடியே...

கோயில்கள் வருமானம், சீரமைப்பு குறித்தும் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்!

புதிய அரசு இந்து சமய அறநிலையத் துறையில் நடைபெற்ற அனைத்து வித நடவடிக்கைகள் குறித்தும் முழுமையான வெள்ளை அறிக்கை வெளியிட்டு, உரிய நடவடிக்கை

717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!

வழிபாட்டுத் தலங்கள் அருகிலுள்ள 276 கடைகள், கல்வி நிறுவனங்கள் அருகிலுள்ள 186 கடைகள், பேருந்து நிலையங்கள் அருகிலுள்ள 255 கடைகள் இரு வாரத்திற்குள்

பஞ்சாங்கம் மே 12 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

“We are all one”, this realization of oneness is attained in the Varg : Atul Limaye

"We are all one", this realization of oneness is attained in the Varg – Atul LimayeJi - Karyakarta Vikas Varg-Dwitiya inaugurated in Nagpur

Entertainment News

Popular Categories