‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!

‘ரூட்’ மாற்றின மகாபெரியவா!

( மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு (சிறு வயதில் நடந்த அனுபவம்)

(பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?)

கட்டுரை-ரா.வேங்கடசாமி62049358 894495094236897 3477664543176392704 n 3 - 2026
காஞ்சி மகானின் கருணை உள்ளம் புத்தகத்திலிருந்து
புதிய தட்டச்சு-வரகூரான் நாராயணன்

மகா பெரியவாளின் பக்தையான செல்லம்மா பாட்டிக்கு பல வருடங்களுக்கு முன் (இளமையில்)ஏற்பட்ட அனுபவம்.

அப்போது மகான் ஹைதராபாத் அருகே ஒரு சிறு ஊரில் முகாமிட்டிருந்தார்.
அப்போது செல்லம்மாவுக்கு சிறுவயது. அவரது தந்தை ஒரு மகாவித்வான். வசதிமிக்கவர். அதனால் செல்லம்மாள் நிறைய நகைகள் அணிந்து கொண்டு இருப்பார்.
மகானைத் தரிசிக்க வந்த தந்தையும்,மகளும், அந்தக் கருணைவள்ளலின் அருளைத் தொடர்ந்து சில நாட்கள் அந்த ஊரில் தங்கினர்.

செல்லம்மாவுக்கு எல்லாமே மகான்தான். அப்படி ஓர் ஈடுபாடு,இளமையில் வந்தது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 13 - திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

ஒருநாள் பிற்பகலில் தனது உறவினர் இருவருடன் செல்லம்மா சில சாமான்கள் வாங்கி வர கடைத்தெருவிற்கு போயிருந்தார். எல்லா சாமான்களையும் விடாமல் வாங்க,பல கடைகள் ஏறி இறங்க வேண்டியதாயிற்று.அதனால் நேரம் அதிகமாகி மாலை மறைந்து லேசாக இருள் பரவ ஆரம்பித்தது.

தங்கள் இருப்பிடம் திரும்ப ஒரு டேங்கா வேண்டும் என்றும், குதிரை வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு, அதில் ஏறிப் புறப்பட்டனர். சிறிது நேரந்தான் வண்டி நேர்பாதையில் சென்றது. பிறகு திடீரென திசைமாறி மிகவும் அருகில் இருந்த ஜனநடமாட்டம் இல்லாத தெருவிற்குள் நுழைந்தது.வண்டியில் இருந்த பெண்கள்
பயந்து விட்டனர்.அவர்கள் பதறிப்போய் வண்டிக்காரனிடம் “இந்த வழியில் ஏன் போகிறாய்” என்று கேட்ட போது, அவன் சிரித்துக்கொண்டே, வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்தான். அத்துடன் நில்லாது பெண்களைப் பார்த்து விஷமமாகச் சிரித்தான்.அவன் பார்வை செல்லம்மா மீதும், அவள் போட்டிருந்த நகைகள் மீதும் படர்ந்தது.

பெண்கள் பயத்தோடு என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டு இருந்தனர்.
அதே சமயம் மகான் மாலை வேளையில் பூஜை ஆரம்பிக்க இருந்தார்.அவரது கண்கள் சுற்றி அமர்ந்திருந்த பக்தர் கூட்டத்தின் மீது படர்ந்தது. பின் தன் அருகில் இருந்த சிப்பந்தியிடம், “வித்வானும் பெண்ணும் எங்கே?” என்று கேட்டபோது, “சில பொருட்கள் வாங்க அவர்கள் கடைக்குச் சென்று இருக்கிறார்கள்” என்று பதில் வந்தது.

ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 11 - சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

“இது புது ஊராயிற்றே…அவர்களுக்கு பாஷை கூடப் புரியாதே….நீ உடனே வண்டியை எடுத்துக் கொண்டு போய், அவாளைப் பார்த்துட்டு வா ” என்றார்.

புறப்பட இருந்தவரை திடீரென அழைத்து, போகும் மார்க்கத்தைக் கேட்ட பின்னர் மகான் சொன்னார்.

“வேண்டாம்…நீ நேர் வழியில் போகாதே…அதுக்குப் பக்கத்தில் ஒரு குறுக்கு சந்து இருக்கும் பார்….. அப்படிப் போ…” என்றார்.

பக்தர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்று மகானுக்குத் தெரியாதா?

வண்டிக்காரன் பெண்களைப் பார்த்து வக்ரமாகச் சிரித்த அதே நேரத்தில் மடத்துச் சிப்பந்தி அங்கே வந்து நிற்க …வண்டிக்காரன் பயந்து போய் வண்டியை ஓட்டிக்கொண்டு போய் விட்டான். செல்லம்மாளும் மற்றவர்களும் அன்று மகானால் காப்பாற்றப்பட்டனர்.

வண்டிக்காரன் கெட்ட எண்ணத்துடன் இருக்கிறான் என்று தெரிந்தவுடன்.செல்லம்மாள் ஒரே ஒரு வினாடி மகானை நினைத்ததன் விளைவு இது.

தன்னை மனதார நம்பிய பக்தர்களை என்றுமே அவர் கைவிட்டதே இல்லை
ALSO READ:  பஞ்சாங்கம் ஜூலை 12 - ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

Topics

FIFA 2026: காலிறுதி ஆட்டங்கள்

அரையிறுதி ஆட்டங்களில் முதல் ஆட்டம் இன்று (14.07.2026) ஆர்லிங்க்டனில் ஃபிரான்சு, ஸ்பெயின் அணிகளுக்கிடையே நடைபெறுகிறது. இரண்டாவது ஆட்டம் நாளை (15.07.2026) அர்ஜெண்டைனா, இங்கிலாந்து அணிகளுக்கிடையே அட்லாண்டாவில் நடைபெறுகிறது.    

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா?

கலப்புத் திருமணம் ஜாதியை ஒழிக்குமா? ஒழிக்காது. இரு தரப்பின் ஜாதிகளில் ஏதோவொன்றையே பலப்படுத்தும்.

பஞ்சாங்கம் ஜூலை 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

IND Vs ENG T20: தொடர் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி!

இதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் வென்றது.

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Entertainment News

Popular Categories