திருப்புகழ் கதைகள்: கானகம் போந்த ராமன்!

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் – 256
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

மருமலரினன் – பழநி
இராமன் கானகம் போந்தான்

இத்திருப்புகழில் திருவொடு பெயர்ந்து, இருண்ட வன மிசை நடந்து, என்ற வரியில் அருணகிரியார் ஸ்ரீ இராமபிரான் இளையாளொடும் இளையானொடும் கானகம் சென்றதை விவரிக்கிறார். மன்னன் தசரதன் உன்னைக் கானகம் போகச் சொன்னான் என கைகேயி இராமனிடத்தில் உரைக்கிறாள்.

ஆழி சூழ் உலகம் எல்லாம்
பரதனே ஆள, நீ போய்த்
தாழ் இரும் சடைகள் தாங்கித்,
தாங்க அரும் தவம் மேற் கொண்டு,
பூழி வெம் கானம் நண்ணிப்,
புண்ணியத் துறைகள் ஆடி,
ஏழ் இரண்டு ஆண்டின் வா ‘என்று
இயம்பினன் அரசன் என்றாள்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், கைகேயி சூழ்வினைப் படலம்)

மன்னவரான எனது தந்தை தசரதன் சொன்னல் என்ன? நீங்கள் சொன்னால் என்ன? இதோ மன்னன் ஆணைப்படி நான் கானகம் செல்கிறேன் எனக்கூறி இராமன் தனது தாய்மார்களிடம் விடைபெற்று, சீதையுடனும் இலக்குவனுடனும் கானகம் செல்லத் தயாராகிறான்.

பிறிது ஓர் மாற்றம் பெருந்தகை பேசலன்;
மறுகி வீழ்ந்து அழ மைந்தரும் மாதரும்
செறுவின் வீழ்ந்த நெடுந் தெருச் சென்றனன் –
நெறி பெறாமை அரிதினின் நீங்குவான்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், நகர் நீங்கு படலம்)

பெருந்தகையான ஸ்ரீ இராமன் வேறு ஒருவார்த்தையும் பேசாதவனாய் ஆடவரும் மகளிரும் மனங்கலங்கி விழுந்து அழுதலால், அவர் கண்ணீரால் சேறாகி வயல் போலக் கிடக்கின்ற பெரிய தெருவின்கண் வழி கிடைக்கப் பெறாமையால் சிரமப்பட்டு நீங்கிச் சென்றான். – எனக் கம்பர் அழகுறக்கூறுவார். மேலும் அவர்கள் மூவரும் எவ்வாறு சென்றார்கள் என்பதனை

சீரை சுற்றித் திருமகள் பின் செல,
மூரி விற் கை இளையவன் முன் செல,
காரை ஒத்தவன் போம்படி கண்ட, அவ்
ஊரை உற்றது உணர்த்தவும் ஒண்ணுமோ?
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், நகர் நீங்கு படலம்)

திருமகளாகிய சீதை மரவுரி அணிந்து பின்னால் வர, வலிய வில் ஏந்திய கையை உடைய இலக்குவன் முன்னே செல்ல, கார்மேக வண்ணனாய இராமன் போகும் தன்மையைப் பார்த்த அந்தநகரத்தவர் அடைந்த துன்பத்தை எடுத்துக் கூறவும் இயலுமோ என அத்துயரை எடுத்துக்கூற இயலாது எனச் சொல்லுகிறார் கம்பர். வேறு ஒரு இடத்தில் ஸ்ரீ இராமன், சீதாப்பிராட்டியார், இளையவர் மூவரும் செல்வதை வருணிக்கும்போது

வெய்யோன் ஒளி தன் மேனியின்
விரி சோதியின் மறைய,
பொய்யே எனும் இடையாளொடும்,
இளையானொடும் போனான் –
‘மையோ, மரகதமோ, மறி
கடலோ, மழை முகிலோ,
ஐயோ, இவன் வடிவு!’ என்பது ஓர்
அழியா அழகு உடையான்.
(கம்பராமாயணம், அயோத்தியா கண்டம், கங்கைப் படலம்)

கண்ணுக்கு இடக்கூட்டிய மையோ, பச்சை நிற ஒளிக்கல்லாகிய மரகதமோ, கரையின்கண் அலைகளால் மறிக்கின்ற கடலோ, பெய்யும் கார் மேகமோ, உவமை சொல்லமாட்டாத நிலையாகிய ஐயோ, தன் உருவம் என்று சொல்லப்படுவதாகிய ஒப்பற்ற அழியாத அழகினை உடையன் இந்த ஸ்ரீ இராமன். சூரியனது ஒளியானது தன் திருமேனியிலிருந்து வெளிப்படும் நீல ஒளியில் இல்லை எனும்படியாக மறைந்துவிடும்படி, இல்லையோ என்று சொல்லத்தக்க நுண்ணிய இடையினை உடைய சீதையோடும் தம்பியாகிய இலக்குவனோடும் காட்டு வழியே நடந்து செல்லலானான்.

மை, அடர்ந்து கருநிறம் உடையது; செறிவான கருமைக்கு உவமையாயிற்று, மரகதம் பசுமை நிறம் படைத்ததாய்க் குளிர்ச்சி தருவதாதலின் நிறத்தோடு தண்மைக்கும் ஒப்பாயிற்று. மறிகடல் நீல நிறம் படைத்ததாய் இடையறாது இயங்கிக் கொண்டிருக்கிறது; ஆதலின், இயங்குகின்ற ஸ்ரீ இராமனது சோபைக்கு உவமையாயிற்று, மழை முகில் கருநிறம் படைத்து நீர் என்னும் பயனும் உடைய காரணத்தால் உயிர்களுக்கு நலம் செய்வது ஆதலின் உவமையாயிற்று. கருமையும், தண்மையும், இடையறா இயக்கமும், தண்ணளியாகிய கருணையும் இவற்றுள் தனித்தனி காணல் அன்றி இவை நான்கும் ஒருங்கேயுடைய இராமபிரானுக்கு ஒருங்கே உடையதொரு உவமை காண்டல் அரிதாயினமை பற்றி அதிசயித்து இனி உவமை சொல்ல மாட்டாமையாகிய இரக்கமும் தோன்றி ‘ஐயோ’ என முடித்தார். ஆயினும், அதுவே இராமபிரானது பேரழகை அவர் சொல்லி முடித்ததாக ஆயிற்று.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

ஏப்ரல் ஐந்தாம் தேதி தேரோட்டம், ஏப்ரல் ஆறாம் தேதி தீர்த்த உற்ஸவம் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாகம் மற்றும் அறங்காவலர் குமுவினர் செய்து வருகிறது

ராகுல் – நேரு – கான்ஷிராம்: காங்கிரஸின் வரலாறு சொல்வது என்ன ?

அரசமைப்பு மாநாட்டில் பேசிய ராகுல் காந்தி இந்தியாவின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு உயிரோடு இருந்திருந்தால் அவர் பகுஜன் சமாஜ் கட்சியை ஆரம்பித்த கான்ஷிராமை உத்தர பிரதேசத்தின் முதல்வராக்கி இருப்பார்

பஞ்சாங்கம் மார்ச் 23 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

Entertainment News

Popular Categories