திருப்புகழ் கதைகள்: பொம்மலாட்டம்!

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி – 279
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஒருவரையும் ஒருவர் – சுவாமி மலை
பொம்மலாட்டம்

இத்திருப்புகழில் இடம்பெறும் உலையில் இடு மெழுகு அது என வாடி, முன்செய் வஞ்சனையாலே, ஒளிபெறவெ எழுபு மர பாவை துன்றிடும் கயிறு விதம் என மருவி ஆடி என்ற வரிகளில் பொம்மலாட்டக் கலை பற்றி அருணகிரியார் குறிப்பிடுகிறார். கலைகளின் தாயகமாய் திகழ்வது தமிழ்நாடு. அப்படி கலாசாரத்திலும், மரபிலும் முன்னோடியாக திகழும் தமிழகத்திற்கு என்று எப்போதுமே ஒரு தனி அடையாளம் உண்டு. அந்த அடையாளங்களில் ஒன்றுதான் பொம்மலாட்டம்.

மனித நாகரிகத்தின் வளர்ச்சியில் காலம் காலமாய் பொம்மலாட்டத்திற்கு என்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. உலகில் இன்று பல்வேறு நாடுகளில், பல்வேறு பெயர்களில் பொம்மலாட்டத்தை கண்டுகளித்து வருகிறார்கள். இருப்பினும் நாகரிகத்தின் பெயரால் நலிவடைந்து கொண்டிருக்கும் கலையான பொம்மலாட்டத்தின் வரலாறுதான் என்ன?

சீனாவில்தான் பொம்மலாட்டம் தோன்றியது எனச் சீனர்கள் கூறுகிறார்கள். சீனர்களுக்கும் நமக்கும் எல்லைத் தகராறு மட்டும் அல்ல, கலைத் தகராறும் உள்ளது என நாம் இதிலிருந்து புரிந்துகொள்ளலாம். சிலப்பதிகாரத்தில் பொம்மலாட்டம் பற்றிய குறிப்புகள் உள்ளது. இது சும்மார், 2300 ஆண்டுகள் பழமையானது.

இன்றைய அனிமேஷன் படங்களுக்கு, பொம்மலாட்டம் ஒரு முன்னோடி என்று சொல்லலாம். கதாபாத்திரங்கள் பேசுவது, காதலிப்பது, சண்டை இடுவது எல்லாம் பொம்மலாட்டம் மூலம் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லிவிட்டனர் நம் தமிழர்கள். இது கூத்து வகையைச் சேர்ந்தது. மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகளில் நூலைக் கட்டி, திரைக்குப் பின்னால் இருந்து இயக்கியபடி கதை சொல்லும் கதை சொல்லிகளின் ஒரு சுவையான கலை பொம்மலாட்டம். இது பாவைக்கூத்து, மரப்பாவைக்கூத்து, என்ற பெயர்களாலும், தோல் பொம்மலாட்டம், மரப்பொம்மலாட்டம் என இரண்டு வகையிலும் நிகழ்த்தப்படுகிறது பொம்மலாட்டம்.

பெரும்பாலும் பொம்மலாட்டத்தில் இதிகாசமும், புராணக் கதைகளும், சரித்திரக் கதைகளுமே அதிகம் நிகழ்த்தப்படும். குறிப்பாகத் தமிழகத்தில், அருணகிரி நாதர் வரலாறு, சிறுத்தொண்ட நாயனார் கதை, சீதா கல்யாணம், பக்த பிரகலாதன், ஆண்டாள் கல்யாணம், அரிச்சந்திரன் கதை, வள்ளி திருமணம் ஆகியன நிகழ்த்தப்படுகிறது. திருமகள் என்ற பெண் பொம்மலாட்டம் நிகழ்த்தி அசுரர்களையும், பேய்க் கூட்டங்களையும் விரட்டினார் என்பது வாய்மொழியாக விளங்கும் ஒரு புராண கதையாகும்.

அண்மைக் காலத்தில் பொம்மலாட்டத்தை மக்களிடையே பரப்பிய பெருமை திரு கமலஹாசன் அவர்கள் நடித்த தசாவதாரம் என்ற திரைப்படத்தில் இடம் பெற்ற ஒரு பாடலை இங்கே குறிப்பிட வேண்டும். முகுந்தா முகுந்தா எனத் தொடங்கும் அந்தப் பாடல் பொம்மலாட்டம் எப்படி நிகழ்த்தப்படுகிறது என்பதை நமக்குக் காட்டியது. அப்பாடலின் சில வரிகள்

மச்சமாக நீரில் தோன்றி மறைகள் தன்னை காத்தாய்

கூர்மமாக மண்ணில் தோன்றி பூமி தன்னை மீட்டாய்

வாமணன் போல் தோற்றம் கொண்டு வானளந்து நின்றாய்

நரன் கலந்த சிம்மமாகி ஹிரணியனை கொன்றாய்

ராவணன் தன் தலையை கொய்ய ராமனாக வந்தாய்

கண்ணனாக நீயே வந்து காதலும் தந்தாய்

என்ற வரிகளில் திருமாலின் பத்து அவதாரத்தையும் பொம்மலாட்டம் மூலமாகக் காண்பிப்பார்கள். சிறு குடங்களால் இராவணனைக் காட்டியிருப்பார்கள்.

பொம்மலாட்டத்தில் மொத்தம ஒன்பது கலைஞர்கள் வரை இருப்பார்கள். இவர்களில் நான்கு கலைஞர்கள் பொம்மைகளை இயக்கவும், மற்ற நான்கு கலைஞர்கள் இசைக்கலைஞர்களாகவும் இருப்பார்கள். ஒருவர் இவர்களுக்கெல்லாம் உதவியாளராக இருப்பார். பெரும்பாலும் ஆர்மோனியம், தபேலா, மிருதங்கம், ஜால்ரா முகவீணை ஆகிய இசைக்கருவிகள் பயன்படுத்தப்படும்.

தற்போது சிலர் மின் இசைக்கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். நான்கு மீட்டர் அகலம், ஆறு மீட்டர் நீளம், மூன்று மீட்டர் உயரம் கொண்ட மூன்று புறங்கள் அடைக்கப்பட்ட அரங்கில் மரபின் திரிபுகள் கெட்டுவிடாது இந்தக் கலை நிகழ்த்தப்படும். அரங்கின் வலதுபுறத்தில் இசைக்கலைஞர்கள் அமர்ந்திருப்பார்கள்.

முன்புறத்தில் ஒரு மீட்டர் அளவுக்கு இடைவெளி விட்டு கறுப்புத் திரைச்சேலை ஒன்றும் கட்டப்பட்டிருக்கும். இந்தத் திரை, பின்னால் நின்று கொண்டிருக்கும் பொம்மலாட்ட கலைஞர்களின் தலையை மறைக்கும் அளவுக்கு உயரமாக இருக்கும். பொம்மைகள் தொங்குவதற்கான கயிறுகள் கறுப்புத் திரையின் மேல் கட்டப்பட்டிருக்கும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Topics

அச்சத்தில் தமிழக பெண்கள்; திமுக.,வுக்கு பாடம் புகட்ட சரியான நேரம்!

திமுக அரசின் அலட்சியத்தால் கேள்விக்குறியான பெண்கள் பாதுகாப்பு; அச்சத்தில் தமிழகத்தின் பெண்கள் இருப்பதாக,

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

Entertainment News

Popular Categories