திருப்புகழ் கதைகள்: உதிரம் உண்ட காளி

thiruppugazh stories - 2026

திருப்புகழ்க் கதைகள் பகுதி 301
– முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

குமரகுருபர முருக – சுவாமி மலை

     அருணகிரிநாதர் அருளிச்செய்துள்ள இருநூற்றிப் பதிமூன்றாவது திருப்புகழான “குமரகுருபர முருக” எனத் தொடங்கும் திருப்புகழ் சுவாமிமலை தலத்துப் பாடலாகும். இத்திருப்புகழில் அருணகிரியார் “சுவாமிநாதா, பொதுமகளிர் வசமாகி அழியாமல், உமது திருவடியைத் துதித்து உய்ய அருள்புரிவாயாக” என வேண்டுகிறார். இனி திருப்புகழைக் காணலாம்.

குமரகுரு பரமுருக குகனே குறச்சிறுமி

கணவசர வணநிருதர் கலகா பிறைச்சடையர்

குருவெனந லுரையுதவு மயிலா எனத்தினமு ……முருகாதே

குயில்மமொழிநன் மடவியர்கள் விழியா லுருக்குபவர்

தெருவிலந வரதமன மெனவே நடப்பர்நகை

கொளுமவர்க ளுடைமைமன முடனே பறிப்பவர்க ….ளனைவோரும்

தமதுவச முறவசிய முகமே மினுக்கியர்கள்

முலையிலுறு துகில்சரிய நடுவீ திநிற்பவர்கள்

தனமிலியர் மனமுறிய நழுவா வுழப்பியர்கண் …… வலையாலே

சதிசெய்தவ ரவர்மகிழ அணைமீ துருக்கியர்கள்

வசமொழுகி யவரடிமை யெனமா தரிட்டதொழில்

தனிலுழலு மசடனையு னடியே வழுத்தஅருள் ……தருவாயே

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

சமரமொடு மசுரர்படை களமீ தெதிர்த்தபொழு

தொருநொடியி லவர்கள்படை கெடவே லெடுத்தவனி

தனில்நிருதர் சிரமுருள ரணதூள் படுத்திவிடு ……செருமீதே

தவனமொடு மலகைநட மிடவீ ரபத்திரர்க

ளதிரநிண மொடுகுருதி குடிகா ளிகொக்கரிசெய்

தசையுணவு தனின்மகிழ விடுபேய் நிரைத்திரள்கள் …… பலகோடி

திமிதமிட நரிகொடிகள் கழுகா டரத்தவெறி

வயிரவர்கள் சுழலவொரு தனியா யுதத்தைவிடு

திமிரதிந கரஅமரர் பதிவாழ் வுபெற்றுலவு …… முருகோனே

திருமருவு புயனயனொ டயிரா வதக்குரிசி

லடிபரவு பழநிமலை கதிர்கா மமுற்றுவளர்

சிவசமய அறுமுகவ திருவே ரகத்திலுறை …… பெருமாளே.

     இத்திருப்புகழின் பொருளாவது – போரில் ஊக்கமுடன் அசுர சேனைகள் போர்க்களத்தில் எதிர்த்தபோது, ஒரு நொடிப் பொழுதுக்குள் அவ்வசுரசேனை அழியுமாறு வேற்படையைத் திருக்கரத்தில் எடுத்து, அசுரர் தலைகள் யாவும் அற்றுப் பூமியில் உருளுமாறு பகைவரைப் பொடிப்படுத்திய செருக்களத்தில் பேய்கள் புலையுணவின் விருப்பத்தால் கூத்தாடவும், வீரபத்திரர்கள் ஆரவாரிக்கவும், நிணங்களை யுண்டு உதிரத்தைக் குடிக்கும் காளியானவள், இறந்துபட்ட அசுரர்களது தசைகளை உண்டு மகிழ்ச்சியுறுமாறு ஏவப்பட்ட, கர்ஜிக்கின்ற பலகோடிப் பேய்களின் வரிசையாகவுள்ள கூட்டங்கள் பேரிரைச்சலும் ஆடலும், நரிகளும், காக்கைகளும், கழுகுகளும், கூத்தாடவும், உதிர வெறிக்கொண்ட வயிரவர்கள் சுழன்று ஆடவும், ஒப்பற்ற சர்வசங்காரப் படையை விடுத்தருளிய அஞ்ஞான இருளை அகற்றும் மெய்ஞ்ஞான மார்த்தாண்டரே; மாலயனாதி வானவர்கள் சேனைகளாக அவர்கட்குத் தலைமை பூண்டு உயிர்கள் தோறும் நின்று உலவிவருகின்ற முருகக் கடவுளே;

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

     திருமகளைத் தழுவும் திருமாலும், பிரமதேவரும், ஐராவத ஊர்தி உடைய இந்திரனும் தேவரீருடைய திருவடியைப் புகழ்ந்து துதித்து நிற்கின்ற பழநியம்பதியிலும், கதிர்காமத்திலும் மேவி வளர்கின்ற சிவசமயச் செல்வமே; ஆறுமுகத்தரசே; திருவேரகத்தில் எழுந்தருளியுள்ள பெருமிதமுடையவரே; குமாரக் கடவுளே; குருபரரே; முருகப்பெருமானே; குகமூர்த்தியே; வள்ளிமணவாளரே; சரவணபவரே; நிருதர் குலகால; பிறைமுடிப் பெருமானாகிய சிவமூர்த்திக்குக் குருவென்று உலகம் புகழ் “ஓம்” என்னும் முதலகரத்திற்குப் பொருள் விரித்துரைத்த ஞானசக்திதரரே என்று வாயாரத் துதித்து நெஞ்சார நினைத்து உள்ளம் உருகாமற்படிக்கு, மாதர்கட்கு அடிமையாகிச் சுழன்று திரிகின்ற அறிவிலியாகிய அடியேனை, தேவரீருடையத் திருவடியையே துதித்து உய்யுமாறு ஆண்டருள்புரிவீர்.

     இத்திருப்புகழில் அருணகிரியார் உதிரம் உண்ட காளியைப் பற்றிப் பாடுகிறார். காளி ஏன் உதிரம் உண்ண வேண்டும்? நாளை காணலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் ஜூன் 12 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories