December 6, 2025, 6:51 AM
23.8 C
Chennai

IND Vs BAN 2nd TEST: மூன்றாம் நாளில் முத்தாய்ப்பான ஆட்டம்

ind ban test 1 - 2025

இந்தியா வங்கதேசம் – இரண்டாவது டெஸ்ட்
மூன்றாம் நாள் – 23.12.2022

-முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

வங்கதேச அணி முதல் இன்னிங்ஸ் 227 (மொமிநுல் ஹக் 84, உமேஷ் யாதவ் 4/25, அஷ்வின் 4.71) ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்க்ஸ் 231 (சாகீர் ஹசன் 51, லிட்டன் தாஸ் 73, நூருல் ஹசன் 31, டஸ்கின் அகமது 31, அக்சர் படேல் 3/68, அஷ்வின், சிராஜ் தலா 2 விக்கட்) இந்திய அணி முதல் இன்னிங்க்சில் 314 (ரிஷப் பந்த் 93, ஷ்ரேயாஸ் ஐயர் 87, ஷாகிப் அல் ஹசன் 4/79, டைஜுல் இஸ்லாம் 4/74);

இரண்டாவது இன்னிங்க்ஸ் (23 ஓவர் முடிவில் 45/4, அக்சர் படேல் 26*, மெஹதி ஹசன் மிராஸ் 3/12)

இரண்டாவது டெஸ்டின் மூன்றாவது நாள் மாலையில் பங்களாதேஷ் நான்கு விரைவான விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம் ஆட்டத்தை இரண்டு அணிகளுக்கும் சாதகமான சூழ்நிலையை அமைத்துள்ளது. மெஹிதி ஹசன் மிராஸ் மூன்று விக்கட் எடுத்து அதனைச் செயல்படுத்தியுள்ளார்.

145 ரன்கள் என்ற இலக்கை அடைய தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இந்திய அணி, ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 45 ரன்களுக்குச் சரிந்தது. இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் ‘ஷகிப் அல் ஹசன்’ வீசிய பந்தை 2 ரன்களுக்கு எட்ஜ் செய்த கே.எல்.ராகுலின் விக்கெட்டுடன் பங்களாதேஷ் தனது வெற்றிக்கான ஆட்டத்தைத் தொடங்கியது. பின்னர் மெஹிடி விக்கெட்டுகள் எடுத்தார். முதலில் சேதேஷ்வர் புஜாரா 6 ரன்களில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

சில ஓவர்களுக்குப் பிறகு, மெஹிடியின் பந்து வீச்சைத் தவறவிட்ட, சுப்மான் கில் கிரீஸுக்கு வெளியே வந்தபோது, நூருல் ஹசன் எளிதான ஸ்டம்பிங்கை முடித்தார். கில் 34 பந்துகள் விளையாடினார். அடுத்து விழுந்த கோஹ்லியின் விக்கெட் வங்காளதேச ரசிகர்களுக்கும் வீரர்களுக்கும் அதிக மகிழ்ச்சியைத் தந்தது, வங்கதேச அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் இன்று 64.2 ஓவர்களில் மீதமுள்ள 3 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.

அஷ்வின் மற்றும் மொஹமது சிராஜ் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றிய போதிலும், வங்கதேச அணி கடுமையாக போராடியது. இந்தியா பீல்டிங் பிழைகளை செய்தது, குறிப்பாக கோஹ்லி, ஸ்லிப்பில் மூன்று வாய்ப்புகளை கைவிட்டார்.

லிட்டன் தாஸ் இன்று வங்கதேச அணியின் எதிர்ப்பை வழிநடத்தினார், அதிகபட்சமாக 73 ரன்கள் எடுத்தார், சாகிர் ஹசன் 51 ரன்கள் எடுத்தார். அதே நேரத்தில் எட்டாவது விக்கெட்டுக்கு லிட்டன் மற்றும் தஸ்கின் ஜோடி 60 ரன்களைச் சேர்த்தது. 29 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சருடன் 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிட்டன் நூருலுடன் ஏழாவது விக்கெட்டுக்கு 46 ரன்கள் சேர்த்திருந்தார். கவர், மிட்-ஆன் மற்றும் மிட்விக்கெட் மூலம் சில கவர்ச்சிகரமான ஷாட்களுடன் லிட்டன் ஏழு பவுண்டரிகளை அடித்தார்,

மூன்றாம் நாள் தொடக்கம் மோசமாக இருந்த போதிலும், வங்கதேசம் இரண்டாவது செஷனில் 120 ரன்கள் சேர்த்தது. இந்திய அணி வெற்றி பெற இன்னும் 100 ரன்கள் தேவை. அக்சர் படேலும் ஜெயதேவ் உனக்டக்டும் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். ரிஷப் பந்த், ஷ்ரேயாஸ் ஐயர், அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது சிராஜ் ஆகியோர் இன்னமும் ஆடவுள்ளனர். நாளை இந்திய அணி வெற்றி பெற அதிக வாய்ப்பு உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories