IND Vs AUS ODI: 10 விக்., வித்தியாசத்தில் எளிதில் வென்றது ஆஸ்திரேலியா

ind vs aus odi match - 2026

இந்தியா ஆஸ்திரேலியா- இரண்டாவது ஒருநாள் போட்டி, விசாகப்பட்டினம், 19.03.2023
— முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன் –

ஆஸ்திரேலிய அணி 11 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 121 (மார்ஷ் 66*, ஹெட் 51*) இந்தியா அணியை (26 ஓவரில் 117 ரன்னுக்கு ஆல் அவுட், கோஹ்லி 31, ஸ்டார்க் 5-53, அபோட் 3-23) 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் இந்திய அணியை மட்டையாடச் சொன்னது. ஸ்டார்க் திறமையாகப் பந்துவீசினார். அவரது பந்துகள் நன்றாக ஸ்விங் ஆனது; நல்ல கோணத்தில் அவர் பந்து வீசினார்.

இதனால் அவர் ஷுப்மான் கில், ரோஹித் ஷர்மா ஆகியோரை வெளியேறிச் செல்லும் பந்துகளை ட்ரைவ் செய்யத் தூண்டினார், இதனால் இருவரும் மலிவாக ஆட்டமிழந்தனர். கில் முதலில் வெளியேறினார், முதல் ஓவரிலேயே டக் அவுட் ஆனார், இஷான் கிஷானுக்குப் பதிலாக அணிக்குத் திரும்பிய ரோஹித் ஐந்தாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவர் கால் திசையில் திருப்பிவிட்ட பந்துகள் மூலம் 13 ரன்கள் பெற்றிருந்தார்.

சூர்யகுமார் யாதவ் மும்பை ஒருநாள் போட்டியில் டக் ஆகியிருந்தார். இந்தப் போட்டியிலும் டக் அவுட் ஆனார். ஸ்டார்க் வீசிய வெளியே செல்லும் பந்தை ஆட முயன்ற போது மற்றொரு கோல்டன் டக்கிற்கு எல்பிடபிள்யூ ஆனார். KL ராகுலால் அதிக நேரம் நீடிக்க முடியவில்லை.

ALSO READ:  யானைகள் அணிவகுப்புடன், திருச்சூர் பூரம் விழா கொண்டாட்டம்!

முந்தைய ஆட்டத்தில் அரை சதம் அடித்த இவர் ஸ்டார்க்கிடம் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார். 4 விக்கெட்டுக்கு 48 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்தியாவுக்கு ஒரு நிலையான ஜோடியின் ஆட்டம் தேவைப்பட்டது, ஆனால் அது வரவில்லை. அபோட் வீசிய ஒரு பந்தில் ஹர்திக் பாண்டியா ஸ்டீவன் ஸ்மித் முதல் ஸ்லிப்பில் பிடித்த ஒரு அற்புதமான டைவிங் கேட்சால் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இன்னிங்ஸை மீண்டும் எழுப்ப முயன்றனர், ஆனால் அவர்கள் இந்த முறை தோல்வியடைந்தனர். கோஹ்லி 31 ரன்களில் எல்லிஸிடம் எல்பிடபிள்யூ ஆனார், மேலும் களத்தில் முடிவை மறுபரிசீலனை செய்யவில்லை. எல்லிஸ் பின்னர் விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரியிடம் கேட்ச் கொடுத்து ஜதேஜாவும் ஆட்டமிழந்தார். 7 விக்கெட் இழப்புக்கு 91 ரன்கள் எடுத்திருந்த நிலையில், இந்திய அணி தடுமாற, கூட்டத்தினர் அமைதியாக இருந்தனர்.

அக்சர் படேலின் ஆட்டமிழக்காத 29 ரன்களால் இந்தியா மூன்று இலக்கங்களை எட்டியது. இந்தியா 100 ரன்களைக் கடந்தபோது குல்தீப் யாதவுடன் அவர் முதலில் கவனமாக இருந்தார். ஆனால் குல்தீப் மற்றும் முகமது ஷமி ஆகியோர் அபோட்டிடம் அடுத்தடுத்து வீழ்ந்தபோது, முடிவு விரைவில் வரும் என்பதை அக்சர் உணர்ந்தார்.

ALSO READ:  ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

அவர் ஸ்டார்க்கை அடுத்தடுத்து சிக்ஸர்களுக்கு விளாசினார், 11-வது இடத்தில் இருக்கும் முகமது சிராஜ் ஸ்டார்க்கின் ஐந்தாவது பலியாக ஆனார். ஸ்டார்க் 53 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள், எடுத்து சாதனை செய்தார்.

பின்னர் ஆடவந்த ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்கள் மார்ஷ் மற்றும் ஹெட் ஆகியோருக்கு ஸ்கோர்போர்டு அழுத்தம் இல்லாமல் பேட்டிங் செய்தனர். மார்ஷ் 28 பந்துகளில் அரைசதம் விளாசினார், ஹெட் 29 பந்துகளில் 50ஐ எட்டினார். ஆஸ்திரேலியா 11 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது.

ஒருநாள் தொடரின் மூன்றாவது போட்டி சென்னையில் புதன்கிழமை நடைபெற உள்ளது. தொடர் 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது, மூன்றாவது போட்டி தொடரின் வெற்றியை முடிவு செய்யும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories