December 5, 2025, 1:22 PM
26.9 C
Chennai

IPL 2025: வெற்றிப் பாதையில் மும்பை அணி

ipl 2025 games - 2025

ஐ.பி.எல் 2025 – மும்பை vs டெல்லி
வான்கடே மைதானம், மும்பை – 21.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (180/5, சூர்யகுமார் யாதவ் 73, திலக் வர்மா 27, ரியன் ரிக்கிள்டன் 25, நமன் தீர் 24, வில் ஜேக்ஸ் 21, முகேஷ் குமார் 2/48, சமீரா, ரஹ்மான், குல்தீப் தலா ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ்  அணியை (18.2 ஓவர்களில் 121, சமீர் ரிஸ்வி 39, விபின் நிகம் 20, அஷுதோஷ் ஷர்மா 18, கே.எல். ராகுல் 11, மிட்சல் சாண்ட்னர் 3/11, பும்ரா 3/12, போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், கர்ண் ஷர்மா தலா ஒரு விக்கட்) 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 5 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான ரியன் ரிக்கிள்டன் (18 பந்துகளில் 25 ரன், 2 சிக்சர்) வில் ஜேக்ஸ் (13 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார். அவருக்குப் பின் ஆட வந்த சூர்யகுமார் யாதவ் (43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) இறுதிவரை ஆடி அனிக்கு வலு சேர்த்தார்.  

அவருக்குப் பின்னர் வந்த திலக் வர்மா (27 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (3 ரன்), நமன் தீர் (8 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) என அடித்து ஆடியதால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

          181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் மட்டையாளர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சமீர் ரிஸ்வீ (35 பந்துகளில் 39 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (11 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய இருவர் மட்டுமே சற்று பொறுப்போடு ஆடினர். மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மிட்சல் சாண்ட்னர் மற்றும் பும்ரா அற்புதமாக பந்துவீசி தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர்.

டெல்லி அணியில் கே.எல். ராகுல், முதலில் விளையாட வரவில்லை. அந்த அணி பேட்டிங் செய்த போது அவர் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் அவர் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன் எடுத்து, அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. எனவே மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் நாலாவது இடத்திற்கு வந்துள்ளது. மும்பை, டெல்லி அணிகள் பஞ்சாப் அணியோடு தனது கடைசி ஆட்டங்களை ஆடும். அந்த இரண்டு ஆட்டங்களும் பிளேஆஃப் சுற்று எந்த அணி செல்லும் என்பதை முடிவு செய்யுமா எனப் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories