IPL 2025: வெற்றிப் பாதையில் மும்பை அணி

ipl 2025 games - 2026

ஐ.பி.எல் 2025 – மும்பை vs டெல்லி
வான்கடே மைதானம், மும்பை – 21.05.2025

முனைவர் கு.வை. பாலசுப்பிரமணியன்

மும்பை இந்தியன்ஸ் அணி (180/5, சூர்யகுமார் யாதவ் 73, திலக் வர்மா 27, ரியன் ரிக்கிள்டன் 25, நமன் தீர் 24, வில் ஜேக்ஸ் 21, முகேஷ் குமார் 2/48, சமீரா, ரஹ்மான், குல்தீப் தலா ஒரு விக்கட்), டெல்லி கேபிடல்ஸ்  அணியை (18.2 ஓவர்களில் 121, சமீர் ரிஸ்வி 39, விபின் நிகம் 20, அஷுதோஷ் ஷர்மா 18, கே.எல். ராகுல் 11, மிட்சல் சாண்ட்னர் 3/11, பும்ரா 3/12, போல்ட், தீபக் சாஹர், வில் ஜேக்ஸ், கர்ண் ஷர்மா தலா ஒரு விக்கட்) 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

          பூவாதலையா வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதனால் மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் மட்டையாட வந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா (5 பந்துகளில் 5 ரன், 1 ஃபோர்) மூன்றாவது ஓவரில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு தொடக்கவீரரான ரியன் ரிக்கிள்டன் (18 பந்துகளில் 25 ரன், 2 சிக்சர்) வில் ஜேக்ஸ் (13 பந்துகளில் 21 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) உடன் இணைந்து அணியின் ஸ்கோரை நிலைப்படுத்தினார். அவருக்குப் பின் ஆட வந்த சூர்யகுமார் யாதவ் (43 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 73 ரன், 7 ஃபோர், 4 சிக்சர்) இறுதிவரை ஆடி அனிக்கு வலு சேர்த்தார்.  

ALSO READ:  தேசத்துக்கு அவப்பெயர் ஏற்படுத்துவதிலேயே குறியாக இருக்கும் காங்கிரஸ்!

அவருக்குப் பின்னர் வந்த திலக் வர்மா (27 பந்துகளில் 27 ரன், 1 ஃபோர், 1 சிக்சர்), ஹார்திக் பாண்ட்யா (3 ரன்), நமன் தீர் (8 பந்துகளில் 24 ரன், 2 ஃபோர், 2 சிக்சர்) என அடித்து ஆடியதால் மும்பை அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கட் இழப்பிற்கு 180 ரன் எடுத்தது.

          181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கோடு இரண்டாவதாகக் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் மட்டையாளர்கள் எவரும் நிலைத்து ஆடவில்லை. சமீர் ரிஸ்வீ (35 பந்துகளில் 39 ரன், 6 ஃபோர், 1 சிக்சர்) மற்றும் விப்ராஜ் நிகம் (11 பந்துகளில் 20 ரன், 3 ஃபோர், 1 சிக்சர்) ஆகிய இருவர் மட்டுமே சற்று பொறுப்போடு ஆடினர். மும்பை அணியின் பந்துவீச்சாளர்கள் மிட்சல் சாண்ட்னர் மற்றும் பும்ரா அற்புதமாக பந்துவீசி தலா மூன்று விக்கட்டுகள் எடுத்தனர்.

டெல்லி அணியில் கே.எல். ராகுல், முதலில் விளையாட வரவில்லை. அந்த அணி பேட்டிங் செய்த போது அவர் தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் அவர் இன்று சோபிக்கவில்லை. இறுதியில் டெல்லி அணி 18.2 ஓவர்களில் 121 ரன் எடுத்து, அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது. எனவே மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

ALSO READ:  மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்! 

சூர்யகுமார் யாதவ் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். இந்த வெற்றியால் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் நாலாவது இடத்திற்கு வந்துள்ளது. மும்பை, டெல்லி அணிகள் பஞ்சாப் அணியோடு தனது கடைசி ஆட்டங்களை ஆடும். அந்த இரண்டு ஆட்டங்களும் பிளேஆஃப் சுற்று எந்த அணி செல்லும் என்பதை முடிவு செய்யுமா எனப் பார்க்கவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

Topics

பஞ்சாங்கம் மே 25 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தமிழக பாஜகவுக்கு எந்த இஸம் சரியாக இருக்கும்?

ஹெச்.ராஜாயிஸமா? பொன்னாரிஸமா? தமிழிசையிஸமா? முருகனிஸமா? அண்ணாமலையிஸமா?

பஞ்சாங்கம் மே 24 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

பஞ்சாங்கம் மே 23 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கோயிலைச் சுரண்டும் ஊழல் பெருச்சாளிகள் மீது நடவடிக்கை தேவை!

எங்கேயிருந்தும் யாரிடமிருந்தும் குறைகள், குற்றச் செயல்கள் குறித்து ஆதாரங்கள் வெளிவந்தால் தமிழக அரசு உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

விஜயின் வெற்றி – அதிர்ஷ்டமா? ஆளுமையா?

இலங்கை ஜெயராஜ் - இலக்கியப் பேச்சாளர்கேள்வி: விஜய்யின் தேர்தல் வெற்றியினைப் பார்த்தீர்களா?...

செங்கோட்டை – பெங்களூரு கோடைக்கால சிறப்பு ரயில் இயக்கம்!

பெங்களூரு-செங்கோட்டை - பெங்களூரு கன்டோன்மென்ட் இடையே ஒரு வழி சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கம்!

வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அருணாச்சல பிரதேசம்

சுதர்சன் ஜி தான் அருணாச்சல பிரதேசத்துக்கு வந்த முதல் சர்சங்கசாலக். 2007 ல் அவர் அந்த மாநிலத்திற்கு விஜயம் செய்தார் . 2011 ல் முதன்முதலாக அந்த மாநிலத்தில் சங்க சிக்ஷா வர்க எனப்படும் இருபது நாட்கள் நடைபெறும் பயிற்சி முகாம் நடந்தது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பயிற்சி பெற்றனர்.

Entertainment News

Popular Categories