ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி: ஹாங்காங்கிடம் போராடி வென்றது இந்தியா

01 Sep19 Asia cup - 2026

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை போராடி வீழ்த்தியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 45 ரன் சேர்த்தனர். ரோகித் 23 ரன் எடுத்து (22 பந்து, 4 பவுண்டரி) எசான் கான் பந்துவீச்சில் நிஸாகத் வசம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து, தவான் – அம்பாதி ராயுடு ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு116 ரன் சேர்த்து அசத்தினர். ராயுடு 60 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எசான் நவாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெக்கெச்னியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தவான் ஒருநாள் போட்டிகளில் தனது 14வது சதத்தை நிறைவு செய்தார். தவான் 127 ரன் (120 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த டோனி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

தினேஷ் கார்த்திக் 33 ரன் (38 பந்து, 3 பவுண்டரி), புவனேஷ்வர் குமார் 9 ரன்னில் வெளியேற, ஷர்துல் தாகூர் டக் அவுட்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்தது. கேதார் ஜாதவ் 28 ரன் (27 பந்து, 1 சிக்சர்), குல்தீப் யாதவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹாங்காங் பந்துவீச்சில் ஸ்பின்னர் கிஞ்சித் திவாங் ஷா (22 வயது) 9 ஓவரில் 39 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இவர் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 50 ஓவரில் 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. நிஷாஹத் கான், அன்சுமன் ராத் நிதானமாக விளையாடி முதல் விக்ெகட் 174 ரன் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அன்சுமன் ராத் 73 ரன்னிலும், நிஷாஹத் கான் 92 ரன்னிலும் அவுட்டாகினர். அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக ஹாங்காங் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 24 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

Entertainment News

Popular Categories