ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி: ஹாங்காங்கிடம் போராடி வென்றது இந்தியா

01 Sep19 Asia cup - 2026

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை போராடி வீழ்த்தியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 45 ரன் சேர்த்தனர். ரோகித் 23 ரன் எடுத்து (22 பந்து, 4 பவுண்டரி) எசான் கான் பந்துவீச்சில் நிஸாகத் வசம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து, தவான் – அம்பாதி ராயுடு ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு116 ரன் சேர்த்து அசத்தினர். ராயுடு 60 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எசான் நவாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெக்கெச்னியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தவான் ஒருநாள் போட்டிகளில் தனது 14வது சதத்தை நிறைவு செய்தார். தவான் 127 ரன் (120 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த டோனி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

தினேஷ் கார்த்திக் 33 ரன் (38 பந்து, 3 பவுண்டரி), புவனேஷ்வர் குமார் 9 ரன்னில் வெளியேற, ஷர்துல் தாகூர் டக் அவுட்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்தது. கேதார் ஜாதவ் 28 ரன் (27 பந்து, 1 சிக்சர்), குல்தீப் யாதவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹாங்காங் பந்துவீச்சில் ஸ்பின்னர் கிஞ்சித் திவாங் ஷா (22 வயது) 9 ஓவரில் 39 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இவர் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 50 ஓவரில் 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. நிஷாஹத் கான், அன்சுமன் ராத் நிதானமாக விளையாடி முதல் விக்ெகட் 174 ரன் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அன்சுமன் ராத் 73 ரன்னிலும், நிஷாஹத் கான் 92 ரன்னிலும் அவுட்டாகினர். அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக ஹாங்காங் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories