December 5, 2025, 8:12 PM
26.7 C
Chennai

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டி: ஹாங்காங்கிடம் போராடி வென்றது இந்தியா

01 Sep19 Asia cup - 2025

ஆசிய கோப்பை ஒருநாள் போட்டித் தொடரில், இந்திய அணி லீக் ஆட்டத்தில் ஹாங்காங் அணியை போராடி வீழ்த்தியது. துபாய் சர்வதேச ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச முடிவு செய்தது. இந்திய அணி தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் ஷர்மா, ஷிகர் தவான் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 7.4 ஓவரில் 45 ரன் சேர்த்தனர். ரோகித் 23 ரன் எடுத்து (22 பந்து, 4 பவுண்டரி) எசான் கான் பந்துவீச்சில் நிஸாகத் வசம் பிடிபட்டார்.

இதைத் தொடர்ந்து, தவான் – அம்பாதி ராயுடு ஜோடி அபாரமாக விளையாடி ரன் சேர்த்தது. இருவரும் 2வது விக்கெட்டுக்கு116 ரன் சேர்த்து அசத்தினர். ராயுடு 60 ரன் (70 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி எசான் நவாஸ் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மெக்கெச்னியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, தவான் ஒருநாள் போட்டிகளில் தனது 14வது சதத்தை நிறைவு செய்தார். தவான் 127 ரன் (120 பந்து, 15 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்ப, அடுத்து வந்த டோனி டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார்.

தினேஷ் கார்த்திக் 33 ரன் (38 பந்து, 3 பவுண்டரி), புவனேஷ்வர் குமார் 9 ரன்னில் வெளியேற, ஷர்துல் தாகூர் டக் அவுட்டானார். இந்தியா 50 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 285 ரன் குவித்தது. கேதார் ஜாதவ் 28 ரன் (27 பந்து, 1 சிக்சர்), குல்தீப் யாதவ் (0) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
ஹாங்காங் பந்துவீச்சில் ஸ்பின்னர் கிஞ்சித் திவாங் ஷா (22 வயது) 9 ஓவரில் 39 ரன் விட்டுக் கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இவர் மும்பையில் பிறந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து, 50 ஓவரில் 286 ரன் எடுத்தால் வெற்றி என்ற சவாலான இலக்குடன் ஹாங்காங் அணி களமிறங்கியது. நிஷாஹத் கான், அன்சுமன் ராத் நிதானமாக விளையாடி முதல் விக்ெகட் 174 ரன் எடுத்து வலுவான தொடக்கத்தை கொடுத்தனர். அன்சுமன் ராத் 73 ரன்னிலும், நிஷாஹத் கான் 92 ரன்னிலும் அவுட்டாகினர். அதன் பின் வந்தவர்கள் சொற்ப ரன்னில் அவுட்டாக ஹாங்காங் அணி 8 விக்கெட்டுகளை இழந்து 259 ரன் எடுத்து 26 ரன் வித்தியாசத்தில் இந்தியாவிடம் தோற்றது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories