February 20, 2026, 11:48 PM
26.7 C
Chennai

மகன், மருமகனுடன் இணைந்து கணவனைக் கொன்ற மனைவி! காரணம்..!

kanavani kondra manivi - 2026

சொந்த கணவரையே மகன் மற்றும் மருமகனின் மூலம் மனைவி கொலை செய்திருப்பது நாகப்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டத்தில் தரங்கம்பாடிக்கருகேயுள்ள புதுப்பேட்டை எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் மதியழகன். இவர் மீனவகுடும்பத்தை சேர்ந்தவர். அப்பகுதியில் மேடை அலங்கார கடை நடத்தி வருகிறார்.

இவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவ்விருவருக்கும் 22 ஆண்டுகளுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றது. இத்தம்பதியினருக்கு மோனிஷா என்ற மகளும், விமல் மற்றும் வருண் என்ற மகன்களும் உள்ளனர்.

கணவன் மனைவி இடையே அடிக்கடி பலத்த சண்டைகள் ஏற்பட்டு வந்ததால், 5 ஆண்டுகளுக்கு முன்னர் இருவரும் பிரிந்தனர். விஜயலட்சுமி தன்னுடைய மகன்களுடன் வசித்து வருகிறார். கணவருக்கு போட்டியாக மேடை அலங்கார கடையை அமைத்து நடத்தி வந்தார்.

விஜயலட்சுமியின் கடை சற்று நஷ்டத்தில் போக தொடங்கியது உடனடியாக அவர் கணவர் மீது ஆத்திரம் கொண்டு அவருடைய வாகனத்தை தீ வைத்து கொளுத்தி விட்டார். அதிர்ச்சி அடைந்த மதியழகன் இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

பின்னர் விசாரணையில் தன் குடும்பத்தினரே இந்த செயலை செய்திருப்பது தெரிந்தவுடன் வழக்கை திரும்ப பெற்றுக்கொண்டார். ஆவணி மாதத்தில் மதியழகனின் வியாபாரம் நன்றாக நடந்தது. ஆனால் விஜயலட்சுமியின் வியாபாரம் சரியாக இல்லாமல் இருந்தது. இதனால் பொறாமை கொண்ட விஜயலட்சுமி தன் கணவரை கொலை செய்ய திட்டமிட்டார்.

26-ஆம் தேதியன்று வழக்கம்போல கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்று கொண்டிருந்த மதியழகன் மறுநாள் காலையில் படுகாயமடைந்து சாலையோரத்தில் சடலமாக கிடந்தார் சம்பவம் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து அவருடைய உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மதியழகனின் தாயார் விஜயலட்சுமி தான் தன் மகனுடைய கொலையானதற்குக் காரணம் என்று காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விஜயலட்சுமியிடம் நெடுநேரம் நடத்திய விசாரணையில் விஜயலட்சுமி தன்னுடைய சதித்திட்டத்தால் தான் மதியழகன் இறந்தார் என்பதை ஒப்புக் கொண்டுள்ளார்.

அன்று இரவு வீட்டுக்கு வந்துகொண்டிருந்த மதியழகன் விஜயலட்சுமியின் தம்பி மகனான சத்ரியன் என்பவரும் விமலும் முகமூடி அணிந்தபடி பின் தொடர்ந்து சென்றுள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு சென்ற போது அவரை தாக்கியுள்ளனர். நிலைதடுமாறி கீழே விழுந்தவுடன் தங்களிடம் இருந்த இரும்பு கம்பியால் மதியழகனை தாக்கியுள்ளனர். மதியழகன் படுகாயமடைந்து உயிரிழந்ததை உறுதி செய்த பின்னர் 3 பேரும் அங்கிருந்து தலைமறைவாகி விட்டனர்.

விஜயலட்சுமியிடம் வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்ட காவல்துறையினர், 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவமானது நாகப்பட்டினம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

Topics

டிரம்ப் போட்ட வரி செல்லாது! உலகளாவிய வரிகளை ரத்துசெய்த அமெரிக்க உச்ச நீதிமன்றம்!

9 நீதிபதிகள் கொண்ட அமர்வு வரிகளை ரத்துசெய்து உத்தரவிட்டனர். 6 நீதிபதிகள் டிரம்ப்புக்கு எதிராகவும், 3 பேர் வரிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தீர்ப்பு வழங்கினர்

பஞ்சாங்கம் பிப்.20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழ்த் தாயைக் காத்த தனயன்

ஆக, உ.வே.சா. என்பதற்குப் பழந்தமிழை உயிர்ப்பித்த வேதியர் சாமிநாதையர் என்றும் பொருள்கொள்ளலாம்.

பஞ்சாங்கம் பிப்.19 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மோடி வரும் நாளில்… புதிய ரயில்கள்..?

அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூருக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக, தூத்துக்குடி - திருச்செந்தூர் இடையே புதிய அகல ரயில் பாதை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

T20 WC 2026: சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய அணிகள்!

இன்று 18.02.2026, டெல்லியில் காலை 1100 மணிக்கு தென் ஆப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றாது. எதிர்பார்த்தது போல தென் ஆப்பிரிக்க அணி வெற்றிபெற்றது.

பஞ்சாங்கம் – பிப்.18 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

உணவே மருந்து! சர்க்கரை, இதய நோய்களில் இருந்து காத்துக் கொள்க!

இவ்வாறு உணவை சரிவிகிதமாக எடுத்து உடன் உடற்பயிற்சியையும் சேர்த்தால், நோயின்றி வாழ்வீர்கள் என்பது திண்ணம்.

Entertainment News

Popular Categories