குடியுரிமை திருத்தச் சட்டத்தின் மீதான தனது எதிர்ப்பின் போது, திமுக., தலைவர் மு.க. ஸ்டாலின் தனது பேச்சில், யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் எல்லோரும் சமம்னு பொருள். மோடி வெளிநாடுகளில் சென்று திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசுகிறார்… யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று! என்கிறார்.
இது கடந்த இரு தினங்களாக சமூகத் தளங்களில் பெரும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. .
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால்… அனைவரும் சமம் என்று பொருளா?!
எல்லாம் என் ஊரே… எல்லோரும் என் நட்புகளே! மக்களே! என்று பொருள். இதில் எங்கே சமமும் சமத்துவமும் வந்தது!
Dr.AnbumaniArmy ????(PSMF????)????????????????
@AMRarmy
“யாதும் ஊரே யாவரும் கேளிர்”
என்றபாடலை கணியன் பூங்குன்றனார் புறநாநூற்றில் எழுதியதாக பலநூற்றாண்டு காலம் நம்மை ஏமாற்றியவர்களுக்கு.
அது,திருக்குறள்தான் என்று தக்க ஆதாரத்தோடு என்நண்பன் பதிலடி கொடுத்துள்ளார்.