கணவனை கழட்டி விட்டுட்டு, கள்ள காதலனோட போய்.. அப்பறம் அவனைக் கொன்று விட்டு.. இன்னொருத்தன் கூட.. என்னத்த சொல்ல..!

Published:

kalla kathal - 2026

காட்பாடி பகுதியை சேர்ந்தவர் சுனில் (28 ) . கொலை முயற்சி உட்பட பல வழக்குகள் இவர் மீது உள்ளது. இந்நிலையில், நேற்று முன் தினம் விருதம்பட்டு பாலாற்றங்கரையில் சுனில் இறந்து கிடந்தார். அவரை யாரோ மிக கொடுமையாக கொன்றுள்ளது தெரியவந்தது.

அதனால் விருதம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் கோகிலாவுக்கும் , சுனிலுக்கும் கள்ள உறவு இருந்துள்ளது தெரியவந்தது. அதனால் கோகிலாவை விசாரிக்கலாம் என்றார் அவர் மாயமாகி இருந்தார்.

அதனால் அவரது செல்போன் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தான் தனியார் ஆம்புலன்ஸ் டிரைவர் மணிகண்டன் என்பவருடன் கடைசியாக பேசியது தெரியவந்தது. மணிகண்டனுக்கும் 28 வயது தான்.

அதனால் மணிகண்டனை போலீசார் தேடி பிடித்த போது இன்னொரு டிரைவர் சதீஷ்குமார் சிக்கினார். அவருக்கும் வயது 28 தான். அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது;

கோகிலாவுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆகிவிட்டது. கணவர் பெயர் இப்ராகிம். விருதம்பட்டில் தம்பதி இருவரும் வசிக்க ஆரம்பித்தனர்.ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். என் சொந்த ஊர் மன்னார்குடி.வேலை தேடி வந்தபோது இப்ராகிம் எனக்கு நண்பனான். இப்ராகிம் மாமியார் வீட்டில் தங்கியிருந்தாலும் , என்னையும் அவனுடனேயே தங்க வைத்து கொண்டான்.

ALSO READ:  பழனி கோயில் நில விவகாரத்தில் கைதானவர் மரணம்; சந்தேகம் எழுவதாக இந்து முன்னணி குற்றச்சாட்டு!

அப்போது தான் கோகிலாவின் நடவடிக்கையை கவனித்தேன். நிறைய பேருடன் நெருக்கமாக பழகினார். அப்படித் தான் சுனிலும் பழகினான். இவர்கள் 2 பேருக்கும் 8 வருஷமாக உறவு இருந்துள்ளது. என் நண்பன் இப்ராகிமுக்கு விஷயம் தெரிந்து துடிச்சு போய்ட்டான். கோகிலாவை கண்டித்தான்.

சுனிலையும் எச்சரித்தான். ஆனால் சுனில், ஆத்திரமடைந்து இப்ராகிமை அடித்து உதைத்தான். அதனால் இப்ராகிம் 2 குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு தனியே போய் விட்டான். இதனால் கோகிலா தனி ஆளாக நிற்கவும் , நான் துணைக்கு போனேன். நானும் , கோகிலாவும் ஒரு வீடு வாடகை எடுத்து தங்கினோம்.

என்னுடன் அவள் நெருங்கி பழகவும், சுனிலிடமிருந்து விலகத் தொடங்கினாள். ஆனாலும் , சுனில் விடவில்லை. தினமும் போதையில் கோகிலாவுக்கு செக்ஸ் தொல்லை தந்தபடியே இருந்தான். அடிக்கடி அவளை அடித்து துன்புறுத்தினான். இதை பற்றி என்னிடம் கோகிலா சொல்லி அழவும் , சுனிலை தீர்த்துக்கட்ட பிளான் பண்ணினோம்.

அதனால் கோகிலா , அவளின் அப்பா முத்து, என் நண்பன் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் ஒளிந்திருந்து சுனிலை அடித்து கொன்றோம். அப்போது சுனில் மதுபோதையில் இருக்கவும் எங்களுக்கு வசதியாக போயிற்று.நடுராத்திரி ஆனதும் சடலத்தை தூக்கி சென்று பாலாற்றங்கரையில் போட்டு விட்டோம்.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

ஆளுக்கு ஒரு பக்கம் தலைமறைவாகி விட்டோம் என்றார். இதையடுத்து மணிகண்டனையும் , சதீஷ்குமாரையும் போலீசார் கைது செய்தனர். கோகிலாவும் , அவரது அப்பாவையும் தேடி வருகிறார்கள்.

Related articles

Recent articles

spot_img