தமிழகத்தில் 20 புதிய திரைப்படங்கள் ஆகஸ்ட்டில் வெளியாக வாய்ப்பு

cinema theatre

சென்னை: தமிழகத்தில் வரும் ஆகஸ்ட் மாதம் ஒரேநேரத்தில் 20 புதிய திரைப்படங்கள் வெளியாக வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்தன.

50 நாட்கள் பொதுமுடக்கத்துக்குப் பிறகு போஸ்ட் புரொடெக்சன் எனப்படும் தமிழ்த் திரைப் படங்களின் இறுதி்க் கட்டப் பணிகள் மே 11-ம் தேதி தொடங்கின. இதையடுத்து கோடம்பாக்கம், சாலிகிராமம், வடபழனி உள்ளிட்ட சினி ஏரியாக்களில் உள்ள டப்பிங் ஸ்டூடியோக்கள் திறக்கப்பட்டு, தொழிலாளிகள் வேலைக்குச் சென்றனர்.

கொரோனா அச்சுறுத்தலால் மார்ச் 22-ம் தேதியிலிருந்து தமிழ்த் திரையுலகில் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. சில தினங்களுக்கு முன்பு தொழில்துறையினருக்கு மட்டும், நிபந்தனைகளுடன் தொழில் தொடங்க தமிழக அரசு அனுமதியளித்தது. இதனைத் தொடர்ந்து பெப்சி அமைப்பு மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர்களும் தங்கள் பணிகளை தொடங்க தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

இதை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, மே 11 முதல் இறுதிக் கட்டப் பணிகளுக்கு மட்டும் நிபந்தனைகளுடன் கூடிய அனுமதியை வழங்கியது. இதனால் 50 நாட்கள் முடக்கத்திற்குப் பிறகு தமிழ் திரைப்படப் பணிகள் மே 11-ம் தேதி தொடங்கின.

தற்போது எந்தெந்தப் படத்தின் இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறித்து பெப்சி தொழிலாளர் அமைப்பு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இதி்ல், கொரோனா வைரஸ் பாதிப்பில் தமிழ்த் திரைப்படப் பணிகள் 50 நாட்களுக்குப் பிறகு படப்பிடிப்பு அல்லாத மற்றப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசு விதித்துள்ள முகக் கவசம், கையுறை, கிருமிநாசினி மற்றும் சமூக இடைவெளி ஆகிய நிபந்தனைகளுடன் குரல் பதிவு, படத்தொகுப்பு, கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் போன்ற பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

‘இந்தியன் 2’ படத்தின் எடிட்டிங் பணிகள் 2 இடங்களில் நடைபெற்று வருகின்றன. விஷால் நடித்துள்ள ‘சக்ரா’ படம் மற்றும் ‘ராங்கி’ படத்தின் எடிட்டிங் மற்றும் டிஐ பணிகள், ‘கபடதாரி’ படத்தின் டப்பிங் பணிகள், தர்மராஜ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் எடிட்டிங், ‘வெள்ளை யானை’ படத்தின் சவுண்ட் மிக்ஸிங் ஆகிய பணிகள் மே 11-ம் தேதியன்றே தொடங்கப்பட்டன.

மே 12-ம் தேதியாக இன்று ‘டாக்டர்’ படத்தின் எடிட்டிங், ‘சின்னதா ஒரு படம்’ படத்தின் டப்பிங், ‘மாஸ்டர்’ படத்தின் எடிட்டிங், ‘பென்குயின்’ படத்தின் டப்பிங், ‘பேய் மாமா’ படத்தின் டப்பிங், ‘பாதாம் கீர்’ படத்தின் டப்பிங், ‘ஐபிசி 376’ படத்தின் டப்பிங், மீனாட்சி சினிமாஸ் நிறுவனம் படத்தின் டப்பிங், ‘ரோபர்’ படத்தின் டப்பிங், ‘மாங்கல்ய தோஷம்’ தொடரின் இறுதிக்கட்டப் பணிகள், ‘சூர்ப்பனகை’ படத்தின் எடிட்டிங், ‘சுழல்’ வெப் சீரிஸ் எடிட்டிங், ‘ஐ எண்ட் எம் ஸ்டுடியோஸ்’ படத்தின் டப்பிங், ‘2nd show’ படத்தின் டப்பிங், கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்கும் வெப் சீரிஸின் இறுதிக்கட்டப் பணிகள், ‘பூமி’ படத்தின் டப்பிங், ‘கற்க கசடற’ படத்தின் கிராபிக்ஸ் பணிகள், ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் டப்பிங் ஆகிய படத்தின் பணிகள் தொடங்கியுள்ளன என்று பெப்சி அமைப்பு கூறியள்ளது.

இதைத் தொடர்ந்து இன்னும் ஒரு மாதங்களில் போஸ்ட் புரடெக்சன் பணிகள் முடிந்து திரைப்படங்கள், அந்தந்த தயாரிப்பாளர்கள் கைகளில் கொடுக்கப்பட்டு விடும். இதற்கு பிறகு தமிழக அரசு அனுமதியின்பேரில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் திரையரங்குகள் திறக்கப்பட்டு திரைப்படங்களை வெளியிட திட்டமிடப்பட்டு வருவதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவி்க்கப்படுகிறது.

  • சதானந்தன், சென்னை

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 31 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

‘இல்லத்தரசி கூப்பன்’ நன்மையா? நிதிச்சுமையா?

சட்டமன்ற தேர்தலுக்காக தி.மு.க. கொடுத்திருக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 ஆக உயர்த்தப்படும் அறிவிப்பும், ரூ.8000 இல்லத்தரசி கூப்பன்

பஞ்சாங்கம் மார்ச் 30 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

வேதப் பண்பாட்டில் முறையற்றது எதுவுமில்லை!

வேதங்கள் வேறு, புராணங்கள் வேறு என்று புராணங்களை கீழ்மைப்படுத்துவதைப்  பார்க்க முடிகிறது. மேலும் சிலர், இவை எதுவும் தேவையில்லை. வேதாந்தம் மட்டுமே  போதும் என்பார்கள்

ஶ்ரீவில்லிபுத்தூர் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருமஞ்சனம்..

ஸ்ரீவில்லிபுத்தூரில் ஶ்ரீ ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம் நடந்து வரும் நிலையில்...

வளைகுடா போர்கள் தொடர்பில், வதந்திகளை நம்பாதீர்: பிரதமர் வேண்டுகோள்!

எனதருமை நாட்டுமக்களே, வணக்கம். மனதின் குரலில் மீண்டும் ஒருமுறை  உங்கள் அனைவரையும் வரவேற்கிறேன்.  இந்த மார்ச் மாதம், உலக அளவில் பெரும் கொந்தளிப்பு நிறைந்த மாதமாக இருக்கிறது. 

பஞ்சாங்கம் மார்ச் 29 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

சபரிமலை ஐயப்பன் கோயில் ஆராட்டு விழா ஏப்ரல் 1இல்..

சபரிமலை ஐயப்பன் கோயிலில் பங்குனி உத்திர ஆராட்டு விழா ஏப்ரல்...

Entertainment News

Popular Categories