கொரோனா: தடுப்பு பணியில் இருந்த மருத்துவர், நர்ஸ் உயிரிழப்பு!

dr nurse

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் ஜோன் மேரி பிரிசில்லா. கடந்த மார்ச் மாதத்துடன் இவர் ஓய்வுபெற இருந்தநிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டை கண்காணிக்கும் பணியில் இருந்த இவருக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தலைமைச் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்று தகவல் பரவியது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, தலைமைச் செவிலியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. 2 முறை செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்றே வந்துள்ளது. அவருக்கு அதிகப்படியான சர்க்கரை நோய் இருந்தது என்று தெரிவித்தனர்.

ALSO READ:  ராஜபாளையம் வழியே திருவனந்தபுரம் - கோவை சிறப்பு ரயில் அறிவிப்பு

ஆனால், தலைமைச் செவிலியரின் மருத்துவக் குறிப்பேட்டில் கொரோனா வைரஸ் என எழுதப்பட்டிருப்பதாகவும், அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், தலைமைச் செவிலியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டாக்டர் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் டாக்டர் அப்ரோஸ் பாஷா (யுனானி மருத்துவம்). திருவல்லிக்கேணியில் வசித்து வந்த அவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமா என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை (நெகட்டிவ்) என்று வந்ததாகவும், அதிகப்படியான நுரையீரல் பாதிப்பே இறப்புக்கு காரணம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ALSO READ:  'தாமரை வாக்குறுதிகள்' என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 17 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் ஜூன் 16 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஆனி மாத பூஜை; சபரிமலை கோயில் நடை திறப்பு!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை துவங்கி பெய்து வருகிறது பத்தனம்திட்டா மாவட்டம் கோட்டை மாவட்டத்தில் வனப்பகுதிகளில் கனமழையில் பெய்து வருகிறது இதனால் பம்பை நதியில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது பம்பை நதியில் பக்தர்கள் கவனமாக நீராட

பஞ்சாங்கம் ஜூன் 15 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

அதிர்ச்சி… அபாயம்..! பெண்களின் பயங்கரவாதப் படை!

ஹாரிஸ் 2016 ல் காஷ்மீருக்குள் நுழைந்தான் . ஆயுத வன்முறை செயல்களால் தன்னை தற்கொலை படையென அறிவித்துக் கொண்டான். ஆனால் மறைமுகமாக ஒரு வலை பின்னலை ஏற்படுத்தினான் .

பஞ்சாங்கம் ஜூன் 14 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

FIFA உலகக்கோப்பை 2026 சிறப்புகள்!

          ஜூன் 11, 2026 அன்று முதலிரண்டு போட்டிகள் மெக்சிகோவில் நடைபெற்றன. முதல் பொட்டியில் நெக்சிகோ தெ ஆப்பிரிக்கா அணியை 2-0 என்ற கோல் கணக்கில் வென்றது. இரண்டாவது போட்டியில் தென் கொரிய அனி செக் குடியரசு அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

பஞ்சாங்கம் ஜூன் 13 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

Entertainment News

Popular Categories