April 18, 2025, 1:00 PM
34.2 C
Chennai

கொரோனா: தடுப்பு பணியில் இருந்த மருத்துவர், நர்ஸ் உயிரிழப்பு!

dr nurse

சென்னை அரசு பொது மருத்துவமனையில் தலைமைச் செவிலியராகவும், செவிலியர் கண்காணிப்பாளராகவும் பணியாற்றி வந்தவர் ஜோன் மேரி பிரிசில்லா. கடந்த மார்ச் மாதத்துடன் இவர் ஓய்வுபெற இருந்தநிலையில், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. இந்த மருத்துவமனையில் கொரோனா வைரஸ் சிகிச்சை வார்டை கண்காணிக்கும் பணியில் இருந்த இவருக்கு கடந்த 24-ம் தேதி உடல்நலக் குறைவு ஏற்பட்டது.

இதையடுத்து, இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து, தலைமைச் செவிலியர் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தார் என்று தகவல் பரவியது.

இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் கேட்டபோது, தலைமைச் செவிலியர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இறக்கவில்லை. 2 முறை செய்யப்பட்ட பரிசோதனையில், அவருக்கு வைரஸ் தொற்று இல்லை (நெகட்டிவ்) என்றே வந்துள்ளது. அவருக்கு அதிகப்படியான சர்க்கரை நோய் இருந்தது என்று தெரிவித்தனர்.

ALSO READ:  தொடர்ந்து ஏமாற்றம் அளிக்கும் வேளாண் நிதிநிலை அறிக்கை!

ஆனால், தலைமைச் செவிலியரின் மருத்துவக் குறிப்பேட்டில் கொரோனா வைரஸ் என எழுதப்பட்டிருப்பதாகவும், அவருக்கு கொரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர். நீண்ட நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர், தலைமைச் செவிலியரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

டாக்டர் உயிரிழப்பு

சென்னை மாநகராட்சி கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஒப்பந்த அடிப்படையில் மருத்துவ அதிகாரியாக பணியாற்றியவர் டாக்டர் அப்ரோஸ் பாஷா (யுனானி மருத்துவம்). திருவல்லிக்கேணியில் வசித்து வந்த அவருக்கு சில தினங்களுக்கு முன்பு காய்ச்சல் ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று முன்தினம் அவர் உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமா என்று உறவினர்கள் கேள்வி எழுப்பினர். பரிசோதனையில் அவருக்கு கொரோனா வைரஸ் இல்லை (நெகட்டிவ்) என்று வந்ததாகவும், அதிகப்படியான நுரையீரல் பாதிப்பே இறப்புக்கு காரணம் எனவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்தது.

ALSO READ:  வண்ணத்தில் மின்னும் பாம்பன் பாலம்! நாளை திறப்பு!

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Topics

IPL 2025: ஹைதராபாத் அணியை எளிதாக எதிர்கொண்ட மும்பை அணி!

          ஆட்டநாயகனாக ஆல்ரவுண்டர் வில் ஜேக்ஸ் தான் எடுத்த 2 விக்கட்டுகளுக்காகவும் அதிரடி 36 ரன் களுக்காகவும் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 18 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

தமிழர்கள் சொத்தை அபகரிக்கத் துடிக்கும் வக்ப் வாரியம்: இந்து முன்னணி கண்டனம்!

இந்துக்களின் பராம்பரிய சொத்துக்களை பாதுகாக்க இந்திய பாராளுமன்றம் நிறைவேற்றிய வக்ஃப் வாரிய திருத்தச் சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த தமிழக அரசை

IPL 2025: சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

ஐ.பி.எல் 2025 – டெல்லி vs ராஜஸ்தான் டெல்லி - 16.04.2025 சூப்பர் ஓவரில் டெல்லி வெற்றி

பஞ்சாங்கம் ஏப்ரல் 17 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IPL 2025: தூள் கிளப்பிய பஞ்சாப் அணி

ந்த ஆண்டு ஐபிஎல் பேட்ஸ்மென்களின் சொர்க்கமாக விளங்குகிறது. 150 ரன்னுக்கும் குறைவான ஆட்டங்கள் வெகு சிலவாக உள்ளன. மட்டையாளர்கள் பந்துவீச்சாளர்களை வெளுவெளு என்று வெளுக்கிறார்கள்.

மு.க. ஸ்டாலினுக்கு மாநில சுயாட்சி ஜுரம்!

முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு மீண்டும் மாநில சுயாட்சி ஜுரம் பிடித்திருக்கிறது. திமுக தலைவர்களின் உள்ளே இருக்கும் வேறு கோளாறின் அறிகுறியாக அவர்களுக்கு அவ்வப்போது மாநில சுயாட்சி ஜுரம் வரும்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 16 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories