தமிழகத்தில் பரவலாக இன்று கனமழைக்கு வாய்ப்பு!

imdchennai-report1
imdchennai-report1

தமிழகத்தில் பரவலாக திங்கள் கிழமை இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக 13 மாவட்டங்களில் கனமழை பெய்யக் கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நெல்லை, தேனி, திருப்பத்தூர், சேலம், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை , நீலகிரி, ராணிப்பேட்டை உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கு இன்று கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் மற்றும் புதுவையில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும், அவ்வப்போது லேசான மழை பெய்யக்கூடும் என்றும், தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சனிக்கிழமை நள்ளிரவு புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெய்த மழையால் புதுச்சேரி மற்றும் கடலூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது. சனி இரவு ஒரே நாளில் புதுச்சேரியில் மட்டும் 19 செ.மீ., மழை கொட்டித் தீர்த்தது.

imdchennai-report
imdchennai-report

இந்த திடீர் மழை குறித்து, வானிலை ஆய்வு மைய பணியில் இருந்து ஓய்வு பெற்ற முனைவர் கு.வை.பாலசுப்பிரமணியன் குறிப்பிட்ட போது…

ALSO READ:  எண்ணம் முக்கியம்; எண்ணிக்கையும் முக்கியமே!

இலட்சத்தீவுகள் மீது ஒரு வளிமண்டலக் காற்றுச் சுழற்சி நிலவுகிறது. வங்கக் கடலில் இலங்கை கடற்கரையிலிருந்து ஆந்திரக் கடலோரம் வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுநிலை நிலவுகிறது.

இதன் காரணமாக
இன்றும் நாளையும் – தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யும்.
23.02.2021 முதல் தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும்.

தமிழகத்தில் 20.02.2021 காலை 0830 மணி முதல் 21.02.2021 காலை 0830 மணி வரை பெய்த மழை அளவுகள் (செண்டிமீட்டரில்):

இயல்புக்கு மாறான மழை: பாண்டிச்சேரி (புதுச்சேரி மாவட்டம்), கடலூர் (கடலூர் மாவட்டம்) தலா 19;
கனமழை: மணிமுத்தாறு (திருநெல்வேலி மாவட்டம்), குறிஞ்சிப்பாடி (கடலூர் மாவட்டம்) தலா 10; பாபனாசம் (திருநெல்வேலி) 8;
இதர மழை அளவுகள்:
சேரன்மாதேவி (திருநெல்வேலி), புவனகிரி, பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 7;
கூனூர் PTO (நீலகிரி) 6;
சூளகிரி (கிருஷ்ணகிரி), மரக்காணம், வானூர் (வில்லுபுரம்) தலா 5;
உத்துக்குளி (திருப்பூர்), சங்கரிதுர்க் (சேலம்), அம்பாசமுத்திரம் (திருநெல்வேலி), பழனி (திண்டுக்கல்) தலா 4;
ஸ்ரீமுஷ்ணம், காட்டுமன்னார்கோயில், பண்ருட்டி (கடலூர்), திருப்புவனம் (சிவகங்கை), பவானிசாகர் (ஈரோடு), கோத்தகிரி, கூனூர் (நீலகிரி), செய்யூர் (செங்கல்பட்டு), மேட்டூர் (சேலம்), விளாத்திகுளம் (தூத்துக்குடி), கொள்ளிடம் (நாகப்பட்டினம்), மேட்டுப்பாளையம், பெரியநாயக்கன்பாளையம் (கோயம்புத்தூர்) தலா 3;
சேத்தியாதோப்பு, சிதம்பரம் (கடலூர்), உடுமலைப்பேட்டை, மூலனூர் (திருப்பூர்), திருச்செங்கோடு, பரமத்திவேலூர் (நாமக்கல்), ஈரோடு, பவானி, தாளவாடி, கொடுமுடி (ஈரோடு), கொடைக்கானல், காமாட்சிபுரம் (திண்டுக்கல்), சீர்காழி (நாகப்பட்டினம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை), காரியாப்பட்டி (விருதுநகர்), பெண்ணாகரம் (தர்மபுரி) தலா 2;
பெரியகுளம் (தேனி), மதுராந்தகம் (செங்கல்பட்டு), மயிலாடுதுறை, மணல்மேடு (நாகப்பட்டினம்), அரிமளம் (புதுக்கோட்டை), சின்னக்கல்லார், அன்னூர், வால்பாறை PTO (கோவை), செங்கம் (திருவண்ணாமலை), விரகனூர், எடப்பாடி, ஆத்தூர் (சேலம்), திருப்பூர், கிருஷ்ணகிரி, ஜெயங்கொண்டம் (அரியலூர்), திண்டுக்கல், எம்ஜிஆர் நகர் (சென்னை), விரிஞ்சிபுரம் AWS (வேலூர்), திருவிடைமருதுர் (தஞ்சாவூர்), திருத்தணி (திருவள்ளூர்), மங்கலபுரம் (நாமக்கல்), தென்பரநாடு (திருச்சி), ஹோகனக்கல் (தர்மபுரி) தலா 1.

ALSO READ:  பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிப்பு!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories