விஜய் ரசிகர்கள் மீது காவல் துறையில் புகார் அளிக்க வந்த நடிகர் கருணாகரன்!

Karunakaran - 2026

சென்னை: விஜய் ரசிகர்கள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாகக் கூறினார் நடிகர் கருணாகரன்! ஆனால் அவரை காவல் துறையினர் திருப்பி அனுப்பினர்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள சர்கார் படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய், உசுப்பேத்துறவன் கிட்ட உம்முன்னும், கடுப்பேத்துறவன்கிட்ட கம்முன்னும் இருக்கனும். அப்போ தான் வாழ்க்கை ஜம்முன்னு இருக்கும் என ஒரு வசனத்தைக் கூறினார்.

இது குறித்து தனது சமூக வலை தளப் பக்கத்தில் கருத்து தெரிவித்த நடிகர் கருணாகரன், “இந்த அட்வைஸ் மற்றவர்களுக்கு தானா. உங்கள் ரசிகர்களுக்கு இல்லையா” என கேள்வி எழுப்பினார்.

அவ்வளவுதான்! விஜய் ரசிகர்கள், கருணாகரனை ஒரு பிடி பிடித்து விட்டனர். இதனால் கோபம் அடைந்த கருணாகரன், தனது கருத்துக்களையும் தொடர்ந்து தெரிவிக்க வார்த்தை மோதல்கள் அதிகரித்தன. விஜய் ரசிகர்கள் கருணாகரனை தொடர்ந்து கலாய்த்து வருகின்றனர்.

இந்நிலையில், தன்னைப் பற்றி அவதூறாகப் பேசிய விஜய் ரசிகர்கள் மீது புகார் அளிக்க நடிகர் கருணாகரன் முடிவு செய்துள்ளார்.

இன்று பிற்பகல் அவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு வந்து புகார் அளிப்பதாகக் கூறியிருந்தார். அதன்படி இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரிகளை சந்தித்தார்.

ஆனால், அவரிடம் எழுத்துப்பூர்வமான புகார் இல்லை. ஆகவே அதிகாரிகள், “எழுத்துப் பூர்வமாக புகார் எழுதி வாருங்கள். மேலும் எந்தெந்த எண்களில் இருந்து மிரட்டல் வந்தது என்பதையும் குறிப்பிட்டு எடுத்து வாருங்கள்” என்று சொல்லி திருப்பி அனுப்பினர்.

இதையடுத்து தகுந்த ஆதாரங்களோடு திரும்ப வந்து புகார் அளிப்பதாகக் கூறி நடிகர் கருணாகரன் திரும்பிச் சென்றார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

பஞ்சாங்கம் ஏப்ரல் 21 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

ஐபிஎல் 2026: ரன் மழை விருந்து!

இருபத்தியெட்டாவது ஆட்டம் ராஜஸ்தான் vs கொல்கொத்தா – ஈடன் கார்டன்ஸ், கொல்கொத்தா - ஏப்ரல் 19

Entertainment News

Popular Categories