என்கவுண்டரில் நீதி கிடைக்காது: வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் கருத்து!

encounter sajjanar women1 - 2026

என்கவுண்டரில் நீதி கிடைக்காது. அந்த சம்பவம் கெட்ட கனவாக பின் தொடர்ந்து வருகிறது என்கிறார் வரங்கல் ஆசிட் வீச்சில் பாதிக்கப் பட்ட பெண் ப்ரணீதா.

திசா குற்றவாளிகளின் என்கவுன்டர் சம்பவம் பற்றி நாடே மகிழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் வித்தியாசமாக கருத்து தெரிவித்துள்ளார் முந்தைய ஆசிட் வீச்சு சம்பவத்தில் பாதிக்கப் பட்ட பெண் ப்ரணீதா.

“பெண்களின் மீது பாலியல் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது சமுதாய ஹிம்சை அல்லாமல் சட்ட ரீதியாக அவர்களை கடினமாக தண்டிப்பதே தீர்வு” என்று கருத்து தெரிவித்தார் தற்போது அமெரிக்காவில் உள்ள ப்ரணிதா.

தற்போது அமெரிகாவில் கொலராடோவில் உள்ள ப்ரணீதா ‘ஹபிங்டன் போஸ்ட்’ இதழுக்கு அளித்த இன்டர்வியூவில் பேசும்போது தன் மீது அசீட் தாக்குதல் செய்த மூன்று குற்றவாளிகளையும் என்கவுண்டர் செய்தாலும் இப்போதும் நீதி கிடைத்து விட்டதாக தான் எண்ணவில்லை என்றார்.

பெண்கள் மீது தாக்குதல் நடக்காமல் பார்த்துக் கொள்வதே சரியான நீதி என்று குறிப்பிட்டார். ஹைதராபாத் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்வதற்கு இரண்டு நாட்கள் முன்பு இந்த இன்டர்வியூ வெளியானது.

தன்னுடைய வழக்கு தொடர்பாக நடந்த என்கவுன்டர் தன்னை இன்று வரை நிழலாக பின் தொடர்வதாக பிரணீதா கூறினார்.

ALSO READ:  மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி
encounter story sajjanar1 - 2026

காகதீயா இன்ஸ்டியூட் ஆஃப் டெக்னாலஜி (கிட்) ல் பிடெக் இறுதி ஆண்டு படித்து வந்த பிரணீதா, ஸ்வப்னிகா மீது 2008ல் ஆசிட் தாக்குதல் நடந்தது.

அதற்கு மூன்று நாட்கள் முன்புதான் குற்றவாளி ஸ்ரீனிவாஸ் ஸ்வப்னிகாவிடம் ப்ரபோஸ் செய்தான். ஆனால் அவள் அதை நிராகரித்தாள். கல்லூரியில் இதெல்லாம் வழக்கம்தான் என்று தான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. ஆனால் ஸ்ரீநிவாஸ் மீது ஸ்வப்னிகா போலீசில் புகார் அளித்தார்.

இருவரும் தன் பைக் மீது வரும்போது ஸ்ரீனிவாஸ் தன் தோழர்களோடு வந்து ஆசிட் ஊற்றினான். காயமுற்ற தங்களை யாரோ மருத்துவமனையில் சேர்த்தார்கள் என்று பிரணீதா அந்த நாட்களை நினைவு கூர்ந்தார்.

தோழியோடு சேர்ந்து கிளாசில் இருந்து திரும்பி வரும்போது எங்கள் மீது ஆசிட் தாக்குதல் நடந்தது. ஹாஸ்பிடலில் இருந்தபோதே மூன்று குற்றவாளிகளையும் என்கவுண்டர் செய்ததாக செய்தி வந்தது. ஆனால் அவர்களின் சாவுக்கு நீங்கள்தான் காரணமானீர்கள் என்று யாராவது சுட்டிக் காட்டினால் நான் என்ன தப்பு செய்தேன் என்ற வருத்தம் ஏற்படுகிறது.

என்கவுண்டர் உங்களிடம் தன்னம்பிக்கையை வளர்த்ததா என்ற கேள்வி மட்டும் தயவுசெய்து என்னைக் கேட்காதீர்கள். இது குறித்து நான் எப்போதும் சிந்திக்கவில்லை. அதுகுறித்த பேச்சை கேட்டாலே எனக்கு அச்சமாக உள்ளது என்று விவரித்தார்.

ALSO READ:  சோழ சாம்ராஜ்யத்தின் வளமான வரலாறும், கலாசாரமும் பெருமிதம் ஏற்படுத்துகிறது: மனதின் குரலில் மோடி!

என் தோழி ஸ்வப்னிகா தன் காதலை ஏற்கவில்லை என்று ஆசிட் தாக்குதல் செய்தான் ஸ்ரீநிவாஸ். டிசம்பர் 10, 2008 இல் வரங்கலில் பிரணீதாவோடு அவர் தோழி ஸ்வபினிகா மீதும் மூன்று பேர் ஆசிட் தாக்குதலில் ஈடுபட்டனர்.

தீவிரமாக காயமடைந்த ஸ்வப்னிகா இருபது நாட்களுக்குப் பின் மரணம் அடைந்தார். பிரணீதா சில நாட்களுக்குப் பிறகு காயங்களிலிருந்து குணமாகி தற்போது அமெரிக்காவில் டென்வர் நகரில் வசித்து வருகிறார்.

encounter story sajjanar - 2026

தன் காதலை அங்கீகரிக்கவில்லை என்ற ஆத்திரத்தில் குற்றவாளி ஸ்ரீனிவாஸ் தன் தோழர்களோடு சேர்ந்து வந்து அவள் மீது ஆசிட் ஊற்றினான். அந்த நேரத்தில் தோழியோடு சேர்ந்து ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்த பிரணிதா மீதும் ஆசிட் ஊற்றினர்.

உங்கள் மீது தாக்குதல் நடத்திய குற்றவாளிகளின் என்கவுன்டரால் நியாயம் கிடைத்துவிட்டதாக நினைக்கிறீர்களா என்ற கேள்விக்கு பிரணிதா, “அப்படிப்பட்ட செயல்களால் எந்த நியாயமும் நிகழாது. அது மட்டுமல்ல என் முகம், தோல் போன்றவை சாதாரண நிலைக்கு வந்து இயல்பு வாழ்க்கை வாழும் போதுதான் எனக்கு நியாயம் கிடைத்ததாக நான் நினைப்பேன் என்றார். என்னால் இன்னும் அந்த சம்பவத்திலிருந்து வெளி வர இயலவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

எனக்கு மொத்தம் 14 முறை ஆபரேஷன் செய்தார்கள். சில நாட்களிலேயே முழுவதாக என் வாழ்க்கை மாறிப் போனது . கண்ணாடி முன் நின்றால் ஆசிட் ஊற்றிய சம்பவம் நினைவுக்கு வருகிறது. டிஸ்டிங்ஷனில் பாஸாகி இன்ஃபோசிஸில் வேலை கிடைத்த போதும் என் வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. பிசினஸ் டிரிப்புக்காக வெளிநாடுகளுக்கு செல்ல வேண்டி வரும்போது நீங்கள் உடலளவில் ஃபிட்டாக இருக்கிறீர்களா என்று டீம் லீடர் கேட்ட போது அவரோடு சண்டையிட்டேன் என்று தெரிவித்தார்.

ALSO READ:  பிஜேபி., உள்ள வந்துடும்!

திசா தன் தங்கை கூறியதுபோல் டோல் பிளாசா அருகில் சென்று நின்று இருந்தால் யாராவது உதவி இருப்பார்கள் என்றார். தவறு செய்தாலும் தம்மை யாரும் பிடிக்க மாட்டார்கள். ஒருவேளை பிடிபட்டாலும் பெயிலில் வெளியே வந்துவிடலாம் என்ற குருட்டு தைரியத்தில் தான் நிறைய பேர் குற்றம் செய்ய முன் வருகிறார்கள் என்று கருத்துக் கூறினார் பிரணிதா.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

Topics

பஞ்சாங்கம் ஜூன் 4 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

Entertainment News

Popular Categories