சுபாஷிதம்: யாரிடம் இறைஞ்சுவது?

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

82. யாரிடம் இறைஞ்சுவது?

ஸ்லோகம்:

ரே ரே சாதக!  சாவதானமனசா மித்ர! க்ஷணம் ஸ்ரூயதாம்
அம்போதா பஹவோ வசந்தி ககனே சர்வே௨பி நைதாத்ருசா: !
கேசித் வ்ருஷ்டிபி: ஆர்த்ரயந்தி வசுதாம் கர்ஜந்தி கேசித் வ்ருதா
யம் யம் பஸ்யசி தஸ்ய தஸ்ய புரத: மா ப்ரூஹி தீனம் வச : !!

பொருள்: 

ஓ சாதகப் பறவையே! என் அன்புத் தோழா! பொறுமையாக ஒரு கணம் என் பேச்சைக் கேள்! வானில் எத்தனையோ மேகங்கள் உள்ளன. அனைத்தும் ஒன்று போலவே இருக்காது. சில மேகங்கள் மட்டுமே நீரைப் பொழிந்து பூமியை நனைக்கும். சில மேகங்கள் வீணாக உறுமிக் கொண்டிருக்கும். அவற்றின் இயல்பைத் தெரிந்து கொள்ளாமல் அனைத்திடமும் நீ தீனக்குரலில் கெஞ்சாதே!

விளக்கம்:  

சாதகப்பறவை மேகத்தில் இருந்து விழும் மழை நீரை மட்டுமே நேராக அருந்தும். இதனை மழைக் குயில் என்றும் கூறுவர். இந்த சாதகப் பறவையைக் காட்டி அற்புதமான பரிந்துரை கூறும் சுலோகம் இது.

அனைவரிடமும் எதிர்பார்த்துக் கெஞ்சாதே! பரோபகார குணம் உள்ளவர்களிடம் கையேந்து! கருமியின் முன் கை நீட்டுவது வீண் என்ற செய்தியை அளிக்கிறார் கவி.

கேட்ட உடனே உதவி செய்பவர் மிக அரிதாகவே காணப்படுவர். அனைவரும் கொடையாளிகளாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் எத்தனை பரிதாபமாக வேண்டினாலும் ஒரு பருக்கை சோறு கூட போட மாட்டார்கள். கருமி யார்? தானசீலர் யார் என்று அறிந்து யாசிக்க வேண்டும். வெறும் பேச்சு வீணர்களிடமும் எரிந்து விழுந்து விரட்டுபவர்களிடமும் கேட்டு என்ன பயன்?

சாதகப்பறவைக்கு  அளித்த செய்தியில் நமக்குப் பாடங்கள் உள்ளன. மானுடனைக் கெஞ்சுவதை விட பகவானிடம் பிரார்த்தனை செய்தால் பலன் உண்டு என்ற கருத்து இதில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 17 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அந்த ‘போலி’ பெருமையை இனியும் காப்பாற்ற வேண்டுமா?

ஸ்டாலின் தோல்வியே காணாத முதல்வரென்றால் இவர் ஞான பீடம் பெறுவதில் என்ன தவறு இருக்கமுடியும், இல்லையா..?

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை!

நூல் அறிமுகம்: கீழடி கிடைத்தது என்ன? அரசியல் கடந்த அறிவியல் பார்வை வெளியீடு : விஜயபாரதம் பிரசுரம்

பஞ்சாங்கம் மார்ச் 16 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

தேர்தல் தேதி அறிவிச்சாச்சு… இனி இதெல்லாம் செய்யாதீங்க!

தமிழகம், கேரளம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவைத் தேர்தல் தேதி மார்ச் 15 இன்று மாலை 4 மணிக்கு அறிவிக்கப்பட்டது. இதை அடுத்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. 

தமிழகம் உள்பட 5 மாநில சட்டப் பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு!

தமிழகத்தில் மொத்தமுள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.

பாலமேடு – வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல்? திமுக., தலைவர் துணைத் தலைவர், செயல் அலுவலர் மீது புகார்!

மதுரை பாலமேடு பேரூராட்சியில் வெளிச்சத்திற்கு வந்த மெகா ஊழல் ? திமுகவைச் சேர்ந்த தலைவர் துணைத் தலைவர் மற்றும் பேரூராட்சி செயல் அலுவலர் மீது பரபரப்பு குற்றச்சாட்டு:

டம்ளர் மீது நின்று சிலம்பம் சுற்றி சாதனை படைத்த மழலையர் பள்ளி மாணவர்கள்!

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 'நோபல் ரெக்கார்ட்' செய்துள்ள இப்பள்ளி, தற்போது தனது இரண்டாவது உலக சாதனையைப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது

Entertainment News

Popular Categories