சுபாஷிதம்: யாரிடம் இறைஞ்சுவது?

subhashitam_1
subhashitam_1

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

82. யாரிடம் இறைஞ்சுவது?

ஸ்லோகம்:

ரே ரே சாதக!  சாவதானமனசா மித்ர! க்ஷணம் ஸ்ரூயதாம்
அம்போதா பஹவோ வசந்தி ககனே சர்வே௨பி நைதாத்ருசா: !
கேசித் வ்ருஷ்டிபி: ஆர்த்ரயந்தி வசுதாம் கர்ஜந்தி கேசித் வ்ருதா
யம் யம் பஸ்யசி தஸ்ய தஸ்ய புரத: மா ப்ரூஹி தீனம் வச : !!

பொருள்: 

ஓ சாதகப் பறவையே! என் அன்புத் தோழா! பொறுமையாக ஒரு கணம் என் பேச்சைக் கேள்! வானில் எத்தனையோ மேகங்கள் உள்ளன. அனைத்தும் ஒன்று போலவே இருக்காது. சில மேகங்கள் மட்டுமே நீரைப் பொழிந்து பூமியை நனைக்கும். சில மேகங்கள் வீணாக உறுமிக் கொண்டிருக்கும். அவற்றின் இயல்பைத் தெரிந்து கொள்ளாமல் அனைத்திடமும் நீ தீனக்குரலில் கெஞ்சாதே!

விளக்கம்:  

சாதகப்பறவை மேகத்தில் இருந்து விழும் மழை நீரை மட்டுமே நேராக அருந்தும். இதனை மழைக் குயில் என்றும் கூறுவர். இந்த சாதகப் பறவையைக் காட்டி அற்புதமான பரிந்துரை கூறும் சுலோகம் இது.

அனைவரிடமும் எதிர்பார்த்துக் கெஞ்சாதே! பரோபகார குணம் உள்ளவர்களிடம் கையேந்து! கருமியின் முன் கை நீட்டுவது வீண் என்ற செய்தியை அளிக்கிறார் கவி.

கேட்ட உடனே உதவி செய்பவர் மிக அரிதாகவே காணப்படுவர். அனைவரும் கொடையாளிகளாக இருக்க மாட்டார்கள். அவர்களிடம் எத்தனை பரிதாபமாக வேண்டினாலும் ஒரு பருக்கை சோறு கூட போட மாட்டார்கள். கருமி யார்? தானசீலர் யார் என்று அறிந்து யாசிக்க வேண்டும். வெறும் பேச்சு வீணர்களிடமும் எரிந்து விழுந்து விரட்டுபவர்களிடமும் கேட்டு என்ன பயன்?

சாதகப்பறவைக்கு  அளித்த செய்தியில் நமக்குப் பாடங்கள் உள்ளன. மானுடனைக் கெஞ்சுவதை விட பகவானிடம் பிரார்த்தனை செய்தால் பலன் உண்டு என்ற கருத்து இதில் உள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

Topics

பஞ்சாங்கம் ஏப்ரல் 23 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

Entertainment News

Popular Categories