December 5, 2025, 12:15 PM
26.9 C
Chennai

சுபாஷிதம்: உத்தமர்களின் குணங்கள்!

subhashitam 1 3 - 2025

சுபாஷிதம்…ஸ்பூர்த்தி பதம்! 108 ஞான முத்துக்கள்!
தெலுங்கில்: பிஎஸ். சர்மா
தமிழில்: ராஜி ரகுநாதன்

87. உத்தமர்களின் குணங்கள்!

ஸ்லோகம்:

விபதி தைர்யமதா௨ப்யுதயே க்ஷமா
சதசி வாக்படுதா யுதி விக்ரம: |
யசசி சாபிருசிர்வ்யசனம் ஸ்ருதௌ 
ப்ரக்ருதிசித்தமிதம் ஹி மஹாத்மனாம் ||
– பர்த்ருஹரி.

பொருள்:

ஆபத்து சமயத்தில் தைரியமாக இருப்பது, செல்வம் சேர்ந்த போது பொறுமையாக இருப்பது, சபையில் வாக்கு வன்மையைக் காட்டுவது, போரில் வீரம், நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற விருப்பம், அறிவை வளர்த்துக் கொள்வதில் உற்சாகம் பெற்றிருப்பது மகாத்மாக்களின் இயல்பு. 

விளக்கம்

உத்தமர்கள் என்னென்ன குணங்கள் கொண்டவர்கள் என்பதை இங்கு பர்த்ருஹரி விளக்குகிறார்.

uratha-sinthanai
uratha-sinthanai

மகாத்மா என்ற சொல்லை யாருக்கு வேண்டுமானாலும் அடைமொழியாக பயன்படுத்துகிறோம். யார் மகாத்மா? யார் அல்லர்? என்று தெரிவிக்கும் உரைகல்லாக இந்த ஸ்லோகம் விளங்குகிறது.  மகாத்மாக்களான மனிதர்களுக்கும் சாதாரண மனிதர்களுக்கும் உள்ள வேறுபாட்டை விவரிக்கும்  சுலோகம் இது.

ஆபத்து நேரும் போது தைரியமாக எதிர்கொள்ளும் திறமை அனைவருக்கும் இருக்காது. சிலர் தற்கொலைக்கு முயல்வதைக் கூட பார்க்கிறோம். வளர்ச்சி சிலரின் கர்வத்திற்கு வழிவகுக்கிறது. சபையில் பேச வேண்டி வரும்போது நடுக்கத்தோடு ஏதேதோ பேசுவார்கள் சிலர். அகம்பாவத்தோடு சுய தம்பட்டம் அடித்துக் கொள்பவர்கள் நமக்கு எதிர்ப்படுவதுண்டு. வாக்குவன்மை அனைவருக்கும் அமையாது.  புலனின்பத்துக்கு அடிமையானவர்களைப் பார்க்கிறோம். ஆனால் கல்வி அறிவைப் பெறுவது என்னும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள் யாரையாவது நாம் பார்த்திருக்கிறோமா?

ads-in-dhinasari

சமுதாயத்தில் நிகழும் அநியாயங்களை தட்டிக் கேட்டு தர்மத்தை நிலை நாட்டுவதில் வீரத்தை காட்டி தர்ம ரட்சணைக்காக தன் சக்திகளை தாரை வார்க்கும் மனிதர்கள்  அதிகம் தேவை. ஆரம்பசூரத்தனம்  காட்டாமல்  தாம் முன்னெடுத்த பணிகளில் வெற்றி சாதித்து தீரவேண்டும் என்ற விடாமுயற்சியோடு பணிபுரிபவர்கள் சமுதாயத்திற்குத் தேவை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories